Announcement

Collapse
No announcement yet.

நான்கு வழி தத்துவம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நான்கு வழி தத்துவம்

    பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன. அவை : பக்திவழி, ஞானவழி, ராஜவழி, கர்ம வழிகளை குறிக்கும். எந்த வழிகளானாலும் நீ இறைவனைக் காணலாம் என்பதே அதன் அர்த்த,ம்.
    கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும். கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் ( மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் ) குறிக்கும். நந்தி தர்மத்தை குறிக்கும். கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் இறைவன் எப்போதும் தர்மத்தையே பார்க்கிறான் என்பதே அர்த்தம்.
    பஞ்சபத்ரம்
    வழிபாடுகளில் அதிகம் உபயோகப்படும் துளசி, வில்வம், அருகு, வேம்பு, வன்னி ஆகிய தாவரங்களைச் சொல்லலாம். இந்த ஐந்தும் பஞ்சபத்ரம் எனப்படும். பத்ரம் என்றால் இலை என்று பொருள். சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள் தெய்வீகமானவை என்று சொல்லி பூஜைக்குப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டன.
    இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடப் பயன்படுத்தும் பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
    -- தினமலர் பக்திமலர். 4-12-2014.
Working...
X