Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    21. ஓரா தொன்றை


    ஓரா தொன்றைப் பாரா தந்தத்
    தோடே வந்திட் டுயிர்சோர
    ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
    டாமால் தந்திட் டுழல்மாதர்
    கூரா வன்பிற் சோரா நின்றக்
    கோயா நின்றுட் குலையாதே
    கோடார் செம்பொற் றோளா நின்சொற்
    கோடா தென்கைக் கருள்தாராய்
    தோரா வென்றிப் போரா மன்றற்
    றோளா குன்றைத் தொளையாடீ
    சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
    சூர்மா அஞ்சப் பொரும்வேலா
    சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
    சேவே றெந்தைக் கினியொனே
    தேனே யன்பர்க் கேயா மின்சொற்
    சேயே செந்திற் பெருமாளே.



    - திருச்செந்தூர்





    சுருக்க உரை


    உண்மை நெறிகளை நன்கு ஆராய்ந்து பாராமல், அழகுடன் வந்து, ஆண்களுக்குக் காம மயக்கம் தந்து, உடலும் உள்ளமும் தளரும்படி, நல்ல பொருள் இல்லாதவர்கள் போல் நடிக்கும் விலைமாதர்களின் பொய்யான அன்பில் சோர்வடைந்து, உள்ளம் குலைந்து போகாமல், உன் திருப்புகழ் யாவர்க்கும் உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் புரிவாய்.


    வெற்றிப் போர் செய்பவனே. மாமரமாய் வந்த சூரன் அஞ்சும்படி அவனுடைய கிரௌஞ்ச மலையைத் தொளைய போர் புரிந்தவனே,கொன்றை மலர் மாலைகள் அணிந்த மார்பை உடையவரே,எந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே, அன்பர்களுக்கு இனிமையான சொற்களைப் பேசும் செந்திற் பெருமாளே,உன்னுடைய திருப்புகழ் நின்று உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் தாராய்.


    ஒப்புக


    அ. ஓராது ஒன்றை = (ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார்)--- கந்தர் அலங்காரம்
    ஆ. ஊடா.... காம மயக்கத்தால் பிணங்குதல்.
    (ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்) --- திருக்குறள் 1330.


    இ இன் சொல் சேயே – இன்சொல் விசாகா – திருப்புகழ்
Working...
X