சிற்றினம் சேராமை - Niti-210

सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि नश्रूयते मुक्ताकारतया तदेव नलिनी पत्रस्थितं द्रुश्यते।
अंतः सागर शुक्तिमध्य पतितं तन्मौक्तिकं जायतेप्रायेणाथ ममध्य मोत्तम जुषां येवं विधा व्रुत्तयः॥
பொருள் :
இதிலும் உத்தம - மத்யம - அதமர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது பற்றி பேசப்படுகிறது.
1. காய்ந்த இரும்பில் விழுந்த நீர்த்துளி ஆவியாகிவிடுகிறது.
2. தாமரையில் விழுந்த நீர்த்துளி முத்துப்போல் தோற்றமளிக்கிறது.
3. சிப்பியில் விழுந்த நீரோ முத்தாகவே மாறிவிடுகிறது.
அதுபோல் -
1. தீயவர்களின் தொடர்பைப் பெற்றவன் அழிந்துபோகிறான்.
2. நல்லவர்களின் நட்பைப் பெற்றவன் நல்லவனாகத் தோற்றமளிக்கிறான்.
3. மஹான்களின் அருளைப் பெற்றவன் மஹானாகவே ஆகிவிடுகிறான்.

திருவள்ளுவர் வாக்கு:
குறள் 452:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
பொருள்:
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வ உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
Translation:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation:
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks