Announcement

Collapse
No announcement yet.

நான் மிகவும் பாக்கியவான் . . .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நான் மிகவும் பாக்கியவான் . . .

    படித்ததில் ரசித்து ருசித்தது
    நான் மிகவும் பாக்கியவான் . . .


    நான் மிகவும் சந்தோஷமாக
    இருக்கிறேன்
    நான் நல்ல செல்வத்தோடு
    இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
    என்ன உள்ளது ?


    இதன் ரகசியம் சொல்லவா . . . . .


    என்னுடைய பணத்தேவைகளைக்
    கவனித்துக்கொள்ள
    திருக்கோளூர்
    வைத்தமாநிதி பெருமாள்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
    அற்புதமாக கவனிக்க
    திருஎவ்வுள்ளூர்
    வைத்தியர் வீரராகவன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என் மனதில் கவலைகள்
    உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
    என்று சொல்ல
    திருக்கச்சி
    பேரருளாளன் வரதராஜன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    எனக்கு குறைவில்லாமல்
    அழகழகான, அற்புதமான
    வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
    த்வாரகாநாதன்
    ரண் சோட் ஜீ
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    எனக்கு வேண்டிய
    ருசியான,ஆகாரத்தை,
    என் ஆயுள் முழுவதும் தர
    பூரி நாயகன்
    ஜகந்நாதன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என் குடும்பத்தை என்றும்
    சந்தோஷமாகக் காப்பாற்ற,
    திருமலைமேல்
    திருப்பதி ஸ்ரீநிவாஸன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னை விரோதிகளிடமிருந்து
    எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
    அஹோபிலம்
    மாலோல நரசிம்மன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என் வாழ்க்கையை
    சரியான பாதையில் நடத்த
    திருவல்லிக்கேணி
    பார்த்தசாரதி
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னை இரவில்
    சுகமாக தூங்க வைக்க
    திருப்புளியங்குடி
    பூமிபாலர்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னை காலையில்
    அன்போடு அழகாக எழுப்ப
    திருக்குறுங்குடி
    சுந்தர பரிபூரண நம்பி
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னோடு ஆனந்தமாக
    குள்ளக்குளிர குடைந்து நீராட
    யமுனைத்துறைவன்
    பாங்கே பிகாரி
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    இன்னும் யாரெல்லாம்
    என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
    தெரியுமா ?


    சொல்கிறேன் . . .
    நீயும் தெரிந்து கொள் !
    கொஞ்சம் பொறுத்திரு . . .


    நீ இவர்களை எல்லாம்
    உன்னோடு வைத்துக்கொண்டாயா ?


    இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
    அவர்களையும் சொல்கிறேன் கேள் !


    நான் சொன்னபடி செய்யவும்,
    என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
    திருவெஃகா
    சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னை உரிமையோடு தொட்டுப்
    பேசவும்,என்னோடு விளையாடவும்
    பண்டரீபுரம்
    விட்டலன்,பாண்டுரங்கன்
    என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


    எனக்கு பொழுது போகாத
    சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
    தென்திருப்பேரை
    மகர நெடுங்குழைக்காதர்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
    சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
    வைக்கவும் எப்பொழுதும்
    பத்ரிகாஸ்ரமம்
    நாராயணன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
    தரிசிக்கவைப்பதற்கும்,
    பூமியில் வாழ எல்லா வளங்களையும்
    தருவதற்கும்,
    ஸ்ரீரங்கம்
    ரங்கராஜன்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    நான் கொஞ்சிமகிழவும்,
    எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
    குருவாயூர்
    உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
    என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


    என்னோடு கடற்கரையில்
    காலார நடந்துகொண்டு,
    வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
    திருக்கடல்மல்லை
    ஸ்தல சயனப் பெருமாள்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    என்னிடம் தைரியமாகப் பொய்
    சொல்ல,என்னை உரிமையோடு
    மத்தால் அடித்துத் திருத்த,
    உடுப்பி
    ஸ்ரீ க்ருஷ்ணன்
    என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


    எனக்காக தூது செல்ல,
    எனக்காக வாதாட,
    திருப்பாடகம்
    பாண்டவர் தூத பெருமாள்
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    இப்படியாக இன்னும் பலபேர்
    என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !


    அதனால் என் தேவைகளைப் பற்றி,
    என் வாழ்க்கையைப் பற்றி,
    என் எதிர்காலத்தைப் பற்றி,
    என் மரணத்தைப் பற்றி,
    என் குடும்பத்தைப் பற்றி,
    என் கௌரவத்தைப் பற்றி
    நான் யோசிப்பதேயில்லை . . .


    ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .


    எனக்கு மோக்ஷத்தைத் தர,
    என் மனதிற்கு சாந்தி தர,
    எனக்கு புகழைத் தர,
    திருவனந்தபுரம்
    ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
    என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


    இத்தனை பேர்
    என்னோடு இருக்க,
    நான் எதைப்பற்றி
    கவலைப்படவேண்டும் ?


    நான் ஆனந்தத்தில்
    நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .


    எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .


    எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
    ஆனந்தமாகவே இருப்பேன் . . .


    நீங்களும் இவர்களை உங்களோடு
    வைத்துக்கொள்ளுங்கள் !


    உங்கள் வாழ்க்கையும் நிச்சயம்
    ஆனந்தமாகவே
    இருக்கும் . . .
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X