Announcement

Collapse
No announcement yet.

Toe ring - metti of Goddess Lakshmi Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Toe ring - metti of Goddess Lakshmi Continues

    courtesy:http://www.srikainkaryasri.com/2017/...lya-vaibhavam/
    மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–
    தாயாரின் மெட்டி வைபவம்


    11.பகவான் கிருஷ்ணன், விதுரர் மாளிகையில், உணவு அருந்திய பிறகு,
    துர்யோதனன் கேள்விக்குப் பதில் சொல்லும்போது,
    "சுத்தம் விஷ்ணு பத த்யானம் " என்கிறார்
    ( சுத்தம் பாகவதாஸ்யன்னம் ,
    சுத்தம் பாகீரதி ஜலம்
    சுத்தம் விஷ்ணு பத த்யானம்
    சுத்தம் ஏகாதசி வ்ரதம் ) விஷ்ணுபதத் த்யானம் என்பதில்
    பெரியபிராட்டியின் திருவடித் த்யானமும் அடங்கி இருக்கிறது.
    எக்காலத்திலும், எந்தச் சமயத்திலும் பிராட்டி, பகவானைப்
    பிரிந்தாளில்லை. ஆதலால், விஷ்ணுபத த்யானம் செய்யும்போது,
    பிராட்டிபத
    த்யானமும், பிராட்டி பத த்யானம் செய்யும்போது, உன் த்யானமும்
    பக்தனுக்குப் பரவசத்தைக் கொடுக்கிறது.உனக்கு நமஸ்காரம்
    ————————————————————————————————————————
    4. சஞ்சாரம்—நாதம்
    ——————————-
    1. பரமபதத்தில், நவரத்ன மாளிகையில், பிராட்டியார் வரும்போது, அவரது
    திருவடியில் அணிந்துள்ள சிலம்பும்,கொலுசும் பல ராகங்களில்
    ,சப்திக்கின்றன
    அப்போது ,ஹே—-மெட்டித் தேவியே— நீ சலவைக் கற்களில் பதிந்து
    எழுப்பும்
    சப்தம், தாளம் இடுவதைப்போல் அமைகிறது.
    2. பெரிய பிராட்டியார் ஒய்யாரமாக நடக்கும்போது, நீ, மாளிகைப் பளிங்குக்
    கல்லில் எழுப்பும் நாதம் கர்ணாம்ருதமாக ஆகி, முக்தர்களுக்கு, அங்கு
    வேதகோஷம் போல இருக்கிறது.
    3. பெரியபிராட்டியார், நந்தவனத்தில் "பத்தி உலாத்தும் " போது ,
    ஹே–மெட்டித் தேவியே—நீ புல்லின்மீதும் அங்கு சிந்தியிருக்கும்
    மலர்கள் மீதும் , அழுந்தி, எழுப்பும் நாதமானது, பிராட்டியின்
    பெருமையைச்
    சொல்லும் ஸ்ரீஸுக்தத்தை சேவிப்பது போல இருக்கிறது.
    4. இந்த நாதம் , முமுக்ஷுக்களுக்கு , பிராட்டியை சேவிப்பதற்கு முன்பாக,
    பிராட்டியின் கருணையையும் விஞ்சி , அடியோங்களை, தாயாரைச்
    சரணம் அடையுங்கள் என்று அழைப்பதைப் போல இருக்கிறது.
    5. பிராட்டிக்கு "உருசாரிணி " என்கிற திருநாமம். "அக்ரதஸ்தேகமிஷ்யாமி
    "என்று
    ஸ்ரீமத் ராமாயணம் சொல்கிறது. எம்பெருமானுக்கும் முன்னதாக
    ஓடிவந்து, தர்ஸனம் கொடுப்பதற்கு, பெரிய நடையை உடையவள் —
    உருசாரிணி . அனுக்ரஹிக்க , பிராட்டி நடந்து வரும்போது,
    தரையில்பட்டு,
    உன்னுடைய நாதம், "பிராட்டி அனுக்ரஹிக்க " வருகிறாள் என்று கட்டியம்
    கூறுவதைப் போல அமைகிறது. இந்த உன்னுடைய நாதத்துக்கு
    நமஸ்காரம்.
    6. ஹே—மெட்டித் தேவியே—ஸ்ரீ ராமாவதாரத்தில், எம்பெருமானும் பிராட்டியும்
    ஆரண்யத்தில் நடந்தபோது, பிராட்டியின் பாதுகைக்கு ஹிதமாக , உன்
    அடிப்பாகம் , பாதுகையின்மேல் பட்டு,, ஏதோ ரஹஸ்யம் பேசுவதைப் போல
    இருந்தது. ஒருவேளை, இது, பிராட்டியின் பாதுகை என்று முத்திரை பதித்தாயா !
    7. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, எம்பெருமானுடன் ஏகாந்தமாக பஞ்சணையில்
    துயிலும் போது , நீ, பஞ்சணையில் பதிந்து , அப்போது எழும் உன் நாதம்
    திவ்ய தம்பதியர்க்குத் தாலாட்டுப் பாடுவதுபோல இருக்கிறது.
    8. ஸாமவேதம் , வீணையில் தாளம் போடுகிற மாதிரி—-ஹாய் —ஹாய் —என்கிறது.
    உபநிஷத்திலும் இந்த த்வனி உள்ளது.
    பிராட்டி, எம்பெருமானுடன் சஞ்சரிக்கும்போது, பிராட்டியின் திருவடி பூமியில்
    படுவதும், எழுவதுமாக இருக்கிறது. அப்போது, ஹே—மெட்டித் தேவியே—நீ எழுப்பும்
    நாதம், பகவானுக்கு, ஸாமவேதமாக ஒலிக்கிறது.
    ———————————————————————————————————–
    5.ப்ரகாஸம்
    ——————
    1. பிராட்டி, "அச்வக்ராந்தா "—குதிரைமீது சஞ்சரிப்பவள், என்று சஹஸ்ரநாமம் சொல்கிறது.
    அப்படி சஞ்சரிக்கும்போது, ஹே—மெட்டித் தேவியே—உன் ப்ரகாசத்தால் ,
    அந்த அச்வத்தை வழிநடத்துகிறாய்
    2. பிராட்டி "யோகநித்ரா"—உறங்குவது போல யோகு செய்பவள். அப்படி சயனித்திருக்கும்போது,
    ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் செந்தாமரைத் திருக்கண்களின் கடாக்ஷம்
    உன்மீது பட்டு ,நீ, நெகிழ்கிறாய். எங்கே, திருவடி விரல்களிலிருந்து கழன்று
    விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய் .
    3. பிராட்டி–ருக்மிணி —தங்கம், வெள்ளிகளாலான ஆபரணங்களை அணிந்தவள்.
    அவற்றில் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆன ஆபரணங்களில் நவரத்னங்களும்
    பதிக்கப்பெற்று , ஒளிர்விட்டுப் ப்ரகாசிப்பதில் திருவடி ஆபரணமான ,
    நீயே முதன்மை பெறுகிறாய்.
    4. பிராட்டி–ஹிரண்ய வர்ணாம்—-சொக்கத்தங்க நிறமுள்ளவள் . ஹே–மெட்டித் தேவியே–
    அந்தப் பிராட்டியின் திருவடியில், ஹிரண்ய வர்ணமாக நீயும் ப்ரகாசிக்கிறாய் !
    5. பகவானும் , " யஜ்ஞம் " செய்கிறான். அதற்கு, "சரணாகத யஜ்ஞம் " என்று பெயர்.
    யஜ்ஞம் செய்ய தர்மபத்நியாக , பிராட்டி பக்கத்திலேயே இருக்கிறாள்.
    யஜ்ஞ வாடிகையிளிருந்து, பீறிடும் அக்னியின் ஒளி , ஹே—மெட்டியே —
    இது, உன் ப்ரகாசமோ என்று ப்ரமிக்க வைக்கிறது.
    6.பெரிய பிராட்டி, அர்ச்சையில் லயம் (எம்பெருமான் திருமேனியில் பிரிவில்லாமல்
    சேர்ந்திருப்பது ). "போகம் " ( பகவானின் உத்ஸவத் திருமேனிக்கு இருபுறமும்,
    ஸ்ரீ தேவி, பூதேவியாக ஸேவை சாதிப்பது ), "காம்யம்" (தனிக்கோயில் நாச்சியார் )
    என்று மூன்று நிலைகளில் இருந்தாலும், பெரியபிராட்டியின் பூஷணமான
    ஹே—மெட்டித் தேவியே–உன் காந்தி கோடிஸுர்யனைப்போலப் பிரகாசிக்கிறது.
    7. பிராட்டி, எம்பெருமானுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, உன் பிரகாசமானது,
    ஸ்ரீயப் பதியை " இது நம்முடைய பாதுகையின் காந்தியோ " என்று பிரமிக்க வைக்கிறது.
    8. பகவானின், மத்ஸ்ய கூர்ம அவதாரங்களில், பிராட்டியும் அப்படியே
    மத்ஸ்யமாகவும், கூர்மமாகவும் அவதரித்தபோதும் அந்தந்த அவதாரத்
    திருமேனிகளுக்கு ஏற்றாற்போல் , பிராட்டியின் திருவடிகளில் வளையமிட்டு,
    ப்ரகாசிக்கிறாய் —உனக்கு நமஸ்காரம்
    ———————————————————————————————————————————————-
    6. தசாவதாரங்களிலும் ,தாயாரின் மெட்டி
    —————————————————
    1. ஹே—மெட்டித் தேவியே—பகவான் மச்சாவதாரம் எடுத்தபோது,
    நீ, பிராட்டியின் திருவடியில் கூடவே இருந்து, புவனம் முழுவதையும்
    உன் ஸம்பந்தத்தால் பாவனம் ஆக்கினாய்
    2. ஹே–மெட்டித் தேவியே—பகவான் கூர்மாவதாரம் எடுத்தபோதும் ,
    பிராட்டி, "அகலகில்லேன்—-" என்று கூடவே இருந்தாள் .நீயும்
    பிராட்டியைவிட்டு அகலமாட்டாய்.பகவான், பூமிதேவியைத்
    தன் திருமூக்கு நுனியில் தூக்கி எடுத்து, ஸமுத்ரத்திலிருந்து
    வெளியே வந்தபோது, ஸமுத்ரத்துக்கு உள்ளேயும் வெளியேயும்
    உன் தேஜஸ் எண்ணிலடங்கா ஸுர்யர்களின் தேஜஸ்ஸைக்
    காட்டிலும் விஞ்சி ஒளிர்ந்தது .
    3. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் வராஹாவதாரத்தில்,
    பகவான் பிராட்டியை அணைத்துக்கொண்டு ஸேவை சாதிக்கிறான்.
    அதனால், பிராட்டி "லக்ஷ்மி வராஹன் " ஆனாள் .ஆனால், நீயோ,
    பிராட்டியின் திருவடியை அணைத்து புளகாங்கிதம் அடைந்தாய்
    4. ஹே —மெட்டித்தேவியே—பகவான் ,ந்ருஸிம்ஹனாக அவதரித்தபோது,
    பிராட்டி ,லக்ஷ்மி ந்ருஸிம்ஹனாகத் தோன்றினாள் . ,பிராட்டியின்
    திருவடியில் இருந்துகொண்டு ,ப்ரஹ்லாதனுக்கும் ,நாரதருக்கும்,
    தேவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தாய்.
    5. ஹே—மெட்டித் தேவியே—பகவான் வாமனாவதாரம் எடுத்தபோது,
    வக்ஷஸ்தலத்தில் பிராட்டியை, க்ருஷ்ணாஜினத்தால்(மான்தோல் )
    மறைத்துக்கொண்டார். அப்படி மறைத்தாலும், அசுர குரு
    சுக்ராசார்யருக்கு ,வந்திருப்பது பகவான்தான் என்று தெரிந்துவிட்டது.
    மான்தோல் மறைப்பையும் மீறி,உன்னுடைய தேஜஸ் வெளிப்பட்டதால்,
    சுக்ராசார்யர், பிராட்டி திருமார்பில் உறையும் பகவான்தான்
    வந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டார் .
    பகவான்,மஹாபலியிடம் வரங்கள் கேட்டு, உலகங்களை அளந்தபோது,
    பகவானின் திருவடி அண்டகடாஹங்களையும் பிளந்துகொண்டு,
    மேலே,மேலே சென்றுகொண்டே இருந்தது. பகவானின் பாதுகை
    பகவானின் திருவடிக்குக் குடைபோல இருக்க, திருவடி அண்டங்களைப்
    பிளந்துகொண்டு செல்ல ,பிராட்டியின் திருவடியில் உள்ள உன்னுடைய
    கோடி ஸுர்ய ப்ரகாசம் வழிகாட்டியது—என்னே உன் பெருமை—
    6. ஹே—மெட்டித் தேவியே—பகவான் பரசுராமனாக ,ஸ்ரீ ராமபிரான்
    முன்பாக வந்தபோது,ராமனின் திருக்கல்யாண கோலத்தில்
    மயங்கியதால், நீ, சீதாப்பிராட்டியின் திருவடிகளிலேயே தஞ்சம்
    அடைந்துவிட்டாய் போலும் !
    7. ஹே—மெட்டித் தேவியே—பகவான், ராமாவதாரம் எடுத்தபோது ,
    ஜானகியின் திருவடிகளில் அமர்ந்து,நீ செய்த செயல்களைச்
    சொல்லி மாளாது. கோதாவரி நதியில் , படகில்,ராமனும் சீதையும்
    செல்லும்போதும் சரயு நதியில் சீதை ,படிக்கட்டுகளில் அமர்ந்து
    திருவடிகளைத் தீர்த்தத்தில் நனைக்கும்போதும் , திருவடிகளில்
    அணிந்திருக்கும் "கொலுசு " உன்னைப் பார்த்துப் பொறாமைப் படும்.
    உனக்கு, புண்ய தீர்த்தத்தில் முங்கித் திளைக்கும் பாக்யம்
    கிடைக்கிறது என்றும், தனக்குக் கிடைக்கவில்லையே என்றும்
    ஏங்கும். ஏனெனில், சீதையின் திருவடி கணுக்காலுக்கு மேல்
    நனையாது .திருவடிகள், தீர்த்தத்தில் அங்குமிங்கும்
    ஊஞ்சலைப்போல் ஒய்யாரமிடும் . நீ, தீர்த்தத்தில் மூழ்கித்
    திளைப்பாய் அல்லவா ! என்ன பாக்யம் ! என்ன பாக்யம் !!
    8. ஹே—மெட்டித் தேவியே— பலராம அவதாரமாகப் பகவான்
    சொல்லப்பட்டாலும், க்ருஷ்ணனாக பகவான் அவதாரம் செய்து,
    பற்பல லீலைகளைச் செய்ததால், அண்ணனான அவதாரம்
    தம்பியின் அவதாரத்தில் அடங்கிவிட்டதால், நீயும் , பிராட்டி
    ருக்மிணியின் திருவடியே போதும் என்று இருந்து விட்டாயா !
    9. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் க்ருஷ்ணாவதாரம் ;
    பிராட்டி, ருக்மிணியாக அவதாரம்.
    ருக்மிணி விவாஹத்தில் , பிராட்டியின் திருவடியில் இருந்த நீ,
    திருக்கல்யாண கோலத்தில் க்ருஷ்ணனும் ,ருக்மிணியும்
    ஸி ம்ஹாசனத்தில் வீற்றிருந்தபோது ,பற்பல தேசத்து அரசர்கள்
    தங்களுடைய ரத்ன க்ரீடங்கள் உன்னை உரச, தலைகுனிந்து
    வணங்க, நீ, தேஜஸ்ஸுடன் ,அவர்களை ஆசீர்வதித்ததை
    பிராட்டியே அறிவாள் —பிராட்டியின் புன்னகையே
    அதற்கு சாக்ஷி !
    10. ஹே—மெட்டித் தேவியே—பகவான் கல்கி அவதாரம் எடுக்கும்போது
    அவரது திருமார்பில் வீற்றிருக்கும் பிராட்டியின் திருவடியை
    அலங்கரிக்கும் உன் பேரொளியால் , வாள்கொண்டு வீசி,
    கலியைத் தொலைக்கப் போகிறார், கல்கி பகவான்—உனக்கு
    நமஸ்காரம்


    To be Continued
Working...
X