Announcement

Collapse
No announcement yet.

Niti-208-அவசியமான மூன்று

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Niti-208-அவசியமான மூன்று



    भोजनं विप्र संकीर्णं मन्दिरं बन्धु संयुतम।
    शयनं सुत संकीर्णं देहि मे मधुसूदन॥


    பொருள் :
    ஹே மதுசூதனா! ப்ராஹ்மணர்களுக்கு உணவளித்து உண்ணும் ப்ராஹ்மண கோஷ்டியுடன் போஜனமும்
    எப்போதும் பந்து ஜனங்களால் நிறைந்த வீடும், பிள்ளைகளால் நிறைந்த படுக்கையும்
    எப்போதும் எனக்குக் கிடைக்கும்படி அநுக்ரஹம் செய்வாயாக.
    குறிப்பு:- இதை ஒரு ப்ரார்த்தனை அல்லது ஆசீர்வாதமாகவும் உபயோகிக்கலாம்.

    திருவள்ளுவர் வாக்கு:
    குறள் 524:
    சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.
    கலைஞர் உரை:
    தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
    மு.வ உரை:
    தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
    சாலமன் பாப்பையா உரை:
    தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
    Translation:
    The profit gained by wealth's increase,
    Is living compassed round by relatives in peace.
    Explanation:
    To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
    குறள் 41:
    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.

    பரிமேலழகர் உரை:

    இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.).
    மணக்குடவர் உரை:
    இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.
    Translation:
    The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.
    Explanation:
    He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Niti-208-அவசியமான மூன்று

    போஜனம் விப்ரசங்கீர்ணம் மந்திரம் பந்து சம்யுதம் சயனம் சுத சங்கீர்ணம் தேஹி மே மதுசூதன இது பிரார்த்தனையாக உள்ளது இதையே ஆசிர்வாதமாக எப்படி சொல்வது? எந்த இடத்தில் எந்த வார்த்தை கொண்டு மாற்றவேண்டும்?

    Comment


    • #3
      Re: Niti-208-அவசியமான மூன்று

      ஶ்ரீ:
      "மே" யை எடுத்துவிட்டால் ஆசீர்வாதம்.
      மே - இருந்தால் பிறார்த்தனை.
      மே - என்றால் எமக்கு அல்லது எனக்கு என்று பொருள்.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Niti-208-அவசியமான மூன்று

        Thank you very much sir i have learned a new way of Aaseervatham
        Last edited by soundararajan50; 08-11-12, 10:48. Reason: typing error rectified

        Comment

        Working...
        X