Announcement

Collapse
No announcement yet.

Toe ring - metti of Goddess Lakshmi Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Toe ring - metti of Goddess Lakshmi Continues

    courtesy:http://www.srikainkaryasri.com/2017/...lya-vaibhavam/
    மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–
    தாயாரின் மெட்டி வைபவம்


    7.பிராட்டியின் அஷ்டலக்ஷ்மி ஆவிர்ப்பாவத்தில் —மெட்டி
    ————————————————–
    1. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி,ஆதிலக்ஷ்மியாக
    ,ஆவிர்பவிக்கும்போது,
    இரு திருக்கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி, தாமரை மலரில்
    அமர்ந்து,ஸேவை சாதிக்கிறாள்.அப்போது திருவடிகளை,தாமரை மலர்
    தாங்குகிறது.
    அந்தத் திருவடியில் தாமரையின் மகரந்தப் பொடிகளைப் போல, நீ,
    ஸேவை சாதிக்கிறாய்
    2. –ஹே-மெட்டித் –தேவியே-பிராட்டி, தனலக்ஷ்மியாக
    ஆவிர்பவிக்கும்போது,
    (ஐஸ்வர்ய லக்ஷ்மி) திருக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி
    இருந்தாலும்
    தாமரை மலரில் பிராட்டியின் திருவடி மறைந்து இருந்தாலும்
    ,உன் ஸேவை
    அடியோங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது
    3. ஹே—-மெட்டித் தேவியே–பிராட்டி, தான்யலக்ஷ்மியாக
    ஆவிர்பவித்து , எல்லா
    தான்ய சம்பத்துக்களையும் அருளும்போது, தான்யம் போன்று
    நீயும்
    மிகச் சிறியதாக அடியோங்களுக்கு ஸேவை சாதிக்கிறாய் .
    4. ஹே–மெட்டித் தேவியே—பிராட்டி, கஜலக்ஷ்மியாக
    ஆவிர்ப்பவிக்கும்போது
    இருபுறமும் கஜங்கள் தீர்த்தத்தால் , பிராட்டியைத் திருமஞ்சனம்
    செய்கின்றன.
    அந்த அபிஷேக தீர்த்தத் திவலைகள் உன்மீது தெறித்து,அற்புதமாக
    ஸேவை சாதிக்கிறாய்.
    5. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, சந்தானலக்ஷ்மியாக
    ஆவிர்ப்பவிக்கும்போது,
    நீ, பக்தர்களுக்கு, சந்தான பாக்யத்தை அருளும் விதமாக,
    மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய்
    6. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, வீரலக்ஷ்மியாக /
    தைர்யலக்ஷ்மியாக
    ஆவிர்ப்பவிக்கும்போது, நீ, பிராட்டியின் திருவடிகளில் அமர்ந்து,
    பிராட்டி
    திருவடிகளால் எதிரிகளை அழிக்கும்போது, ஆயுதமாக
    இருக்கிறாய்.
    7. ஹே—மெட்டித்தேவியே—பிராட்டி, வித்யாலக்ஷ்மியாக
    ஆவிர்ப்பவிக்கும்போது
    நீ, ஓலைச்சுவடி ஆகவும் , அதைசுற்றும்பட்டுக் கயிறு / குஞ்சலம்
    காக்ஷி தருகிறாய்
    8. ஹே—மெட்டித்தேவியே—பிராட்டி, விஜயலக்ஷ்மியாக
    ஆவிர்ப்பவிக்கும்போது,
    நீ, உன் வடிவழகு, நாதம் , ப்ரகாசம் இவற்றால் முரசு
    கொட்டுகிறாய்
    ————————————————————————————————————————————————————
    8. பிராட்டியின்-யஜ்ஞ பலனில், மெட்டி
    —————————————————————-
    1. ஹே—மெட்டித் தேவியே—சித்திரை மாதத்தில், பௌண்டரீக
    யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி ஸ்ரீவைகுண்ட மஹாலக்ஷ்மியாகவும் ,
    ஸ்ரீ பரமபத மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் ஸ்ரீ விஷ்ணுவுடனும்,
    ஸ்ரீ புருஷோத்தமனுடனும் இருந்து , யக்ஜ பலனை அருள
    உதவுகிறாய்
    2. ஹே—மெட்டித் –தேவியே-வைகாசி மாதத்தில், அக்னிஷ்டோம
    யக்ஜம் செய்யும்போது, பிராட்டி மஹாமங்கள மஹாலக்ஷ்மியாகவும் ,
    அமுல்ய மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் மதுஸுதனனுடனும் ,
    அதோக்ஷஜநுடனும், இருந்து, யக்ஜ பலனை அடைய உதவுகிறாய்.
    3. ஹே—மெட்டித் தேவியே—ஆனி மாதத்தில், கோமேதக யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, தேஜோமய மஹாலக்ஷ்மியாகவும்,
    நிர்பய மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் த்ரிவிக்ரமனுடனும் ,
    ந்ருஸிம்ஹனுடனும் இருந்து, யக்ஜ பலனை அளிக்க
    உன் அனுக்ரஹம் உதவுகிறது.
    4. ஹே—மெட்டித் தேவியே–ஆடிமாதத்தில்,நரமேத யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி வாசிஷ்ட மஹாலக்ஷ்மியாகவும்,
    அநந்யமஹாலக்ஷ்மியாகவும், பகவான் வாமனனுடனும் ,
    அச்யுதனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனை
    அளிக்கும்போது, உன் சங்கல்பம் மிகத் துணையாக உள்ளது.
    5. ஹே—மெட்டித் தேவியே–ஆவணி மாதத்தில் , பஞ்சமஹாயக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மியாகவும்,
    ஸ்ரீஜெயமஹாலக்ஷ்மியாகவும், பகவான் ஸ்ரீதரனுடனும் ,
    ஜநார்த்தனனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனை அருள
    நீ காரணமாகிறாய்
    6. ஹே—மெட்டித் தேவியே— புரட்டாசி மாதத்தில்,ஸௌத்ராமணிமஹாலக்ஷ்மியாகவும் ,
    யக்ஜம் செய்யும்போது, பிராட்டி, ஸ்ரீஹரிப்ரிய உத்தம்த மஹாலக்ஷ்மியாகவும், பகவான் ஹ்ருஷீகேசனுடனும்,
    உபேந்த்ரனுடனும் , கூடவே இருந்து, யக்ஜ பலனைக்
    கொடுக்க நீ, மிகவும் விருப்பப்படுகிறாய்
    7. ஹே—மெட்டியே –ஐப்பசி மாதத்தில், கோதானயக்ஜம் செய்யும்போது,
    பிராட்டி, ஸ்ரீ பாவன மஹாலக்ஷ்மியாகவும், புவனேஸ்வரி
    மஹாலக்ஷ்மியாகவும் ,பகவான் பத்மனாபனுடனும் , ஹரியுடனும்
    நீக்கமற இருந்து யக்ஜ பலனைக் கொடுப்பதில் ஆவலாக உள்ளாய்.
    8. ஹே—மெட்டித் தேவியே—கார்த்திகை மாதத்தில், கோமேத யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, திவ்யராதா மஹாலக்ஷ்மியாகவும்,
    ருக்மிணி மஹாலக்ஷ்மியாகவும் பகவான் தாமோதரனுடனும்
    க்ருஷ்ணனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனைக் கொடுக்கும்படி
    செய்கிறாய்
    9. ஹே—மெட்டித் தேவியே–மார்கழி மாதத்தில் , அச்வமேத யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, கமல கோமள மஹாலக்ஷ்மியாகவும்,
    ஸுலக்ஷண மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் கேசவனுடனும்,
    சங்கர்ஷணனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனை அளிக்க
    பிராட்டியைத் தூண்டுகிறாய் .
    10. ஹே—மெட்டித் தேவியே—தை மாதத்தில், வாஜபேய யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, நிர்மல மஹாலக்ஷ்மியாகவும்,
    விச்வபூஜித மஹாலக்ஷ்மியாகவும், பகவான்
    நாராயணனுடனும், வாஸுதேவனுடனும் கூடவே இருந்து,
    யக்ஜ பலனை அருள உதவுகிறாய்
    11. ஹே—மெட்டித்தேவியே –மாசி மாதத்தில், ராஜஸுய யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி,மனோஹர மஹாலக்ஷ்மியாகவும் ,
    பவித்ர மஹாலக்ஷ்மியாகவும், பகவான் மாதவனுடனும்
    ப்ரத்யும்னனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனைக்
    கொடுக்க உதவுகிறாய்.
    12. ஹே—மெட்டித் தேவியே–பங்குனி மாதத்தில், அதிராத்ர யக்ஜம்
    செய்யும்போது, பிராட்டி, கந்தர்வாய பூஜித மஹாலக்ஷ்மியாகவும்,
    அத்புத மஹாலக்ஷ்மியாகவும், பகவான் கோவிந்தனுடனும் ,
    அநிருத்தனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனை அருள உதவுகிறாய்
    இப்படி,12 மாதங்களிலும் ,ஒவ்வொரு யஜ்ஞம் செய்யும்போதும்
    இரண்டு, இரண்டு திருநாமங்களாக பகவான் ஆவிர்ப்பவிக்கும்போது,
    பிராட்டியும் , அதற்கேற்ப அப்படியே இரண்டு இரண்டு திருநாமங்களில்
    பகவான் அருகிலே இருந்து, யஜ்ஞத்திற்கான பலனை அளிக்கிறாள்.
    அப்போதெல்லாம், ஹே—மெட்டித் தேவியே ,நீயும் ,பிராட்டியின்
    திருவடிகளில் இருந்து யஜ்ஞ பூர்த்தியில் சேவிப்பவர்களுக்கு,
    உன் அருளையும் வழங்குகிறாய்
    ————————————————————————————————————————————-
    9. அர்ச்சனம் —தர்ஸனம்
    ———————————-
    1. கந்தர்வ ஸ்திரீகள் , பூலோகத்தில் பிராட்டிக்கு அர்ச்சனை செய்தார்கள்.
    அவர்கள் உலகம் போகபூமி. பகவானை ,தாயாரை அர்ச்சிக்க ,இங்குதான்
    வந்தாகவேண்டும்.. அப்படி அர்ச்சிக்கும்போது,பிராட்டியின் திருவடியில்,
    மாலையை சமர்ப்பித்து , "மெட்டி தேவி " முழுகும் அளவுக்கு
    புஷ்பங்களாலும் , குங்குமத்தாலும் அர்ச்சித்தார்கள். பிறகு, இந்தப்
    பிரசாதங்களை எடுத்துக்கொண்டு,கொண்டு ,அவர்களுடைய உலகத்துக்குத்
    திரும்பிக்கொண்டிருந்தபோது , துர்வாசர் எதிரே வந்தார்.
    இவரைப் பார்த்ததும், கந்தர்வ ஸ்திரீகள் பயந்தார்கள் .துர்வாச மஹரிஷி
    ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் —என்கிற பயம் .
    "உங்கள் கையில் இருப்பது என்ன ? " துர்வாசர் கோபத்துடன் கேட்டார்.
    "தாயாருக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை எடுத்து வருகிறோம் "
    என்று பணிவுடன் சொன்னார்கள்.
    " கொடுங்கள் " என்று சொல்லி, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
    "தந்யோஸ்மி—நாங்கள் போகிறோம் " என்று கந்தர்வ ஸ்திரீகள் சொல்ல,
    துர்வாசர் புன்னகைத்துத்தலையசைத்தார் . தாயாரின் மெட்டியின் அனுக்ரஹ
    பிரசாதம் கையில் இருந்ததால், கோபம் வரவில்லை. இதை எங்கே
    வைக்கலாம் ,யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, எதிரே
    ஐராவதம் என்கிற பட்டத்து யானையின்மீது, இந்திரன் பவனி வந்து
    கொண்டிருந்தான் . ஜன்மதின உத்ஸவம்.
    பிரசாதம் இவனுக்குத் தகும் என்று நினைத்து, "இந்த்ரா –இந்த்ரா –"
    என்று கூப்பிட்டார் . இந்த்ரனிடம் "மஹாலக்ஷ்மி ப்ரசாதம் –ஸ்வீகரி–"
    யானைமீதிருந்த இந்த்ரன் , யானையைக் குத்தும்ஈட்டியைக் கீழே
    நீட்டினான். துர்வாசருக்கு வந்த கோபம் நொடியில் மறைந்தது.
    பிரசாதம் ,அவர் கையிலிருந்து இந்த்ரனுக்குப் போய் , இந்த்ரன்
    பிரசாதத்துக்கான மரியாதையைக் கொடுக்காததால், பிரசாதம்
    இவர் கையை விட்டு அகன்றதும் , கோபம் கொப்பளிக்க , சபித்தார்.
    -ஹே-மெட்டித்தேவியே —தாயாரின் திருவடியில் இருந்துகொண்டு
    அருள்புரிகிறாய்.
    2. எந்தப் பரமபதம் ,ஒரு பக்தனுக்கு,மனதிற்குக்கூட எட்டாத தொலைவில்
    உள்ளதோ, எது மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ , எந்த இடம் மிக மிக
    வியக்கத்தக்கதோ, எந்தத் திருநாடு ,எந்தக் காலமாறுபாட்டுக்கும்
    உட்படாததோ , மாறுபாடு அடையாததோ ,எந்தத் திவ்யதேசத்துக்குச்
    செல்பவனுக்கு , தேவர்கள் நகரமான அமராவதி, சிவனின் கைலாசம் ,
    ப்ரஹ்மலோகம் — இவை நரகமோ , எந்த இடம் பகவானுக்கு ஒத்ததோ ,
    எது அடியேன் கற்பனைக்கும் , சொற்களுக்கும் எட்டாததோ ,
    அந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற பரமபதத்தை , பிராட்டியின் திருவடிகளை
    அலங்கரிக்கும் ஹே–மெட்டித் தேவியே , உன் தர்ஸனமே கொடுத்துவிடும்.
    To be Continued
Working...
X