Announcement

Collapse
No announcement yet.

sivavakkiar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sivavakkiar sidhar

    *(30)*
    ☘ *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* ☘
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""","""""""""""""""""
    ☘ *சிவவாக்கியர்.* ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    தளிர்த்திருந்த கீரையினை பிடிங்கிக் கொண்டிருந்தார் சிவவாக்கியர்.


    அப்போது வானவெளியில் கொங்கண சித்தர் சென்று கொண்டிருந்தார். சிவவாக்கியரின் பெற்றிருக்கும் தவ ஒளி, கொங்கணவரை பூமியை குனிந்து பார்க்கச் செய்தது. அது நேரம் சிவவாக்கியர் வானவெளியை பார்த்தார். இருவரும் ஒருவரையொருவர் கண்களால் தழுவிக் கொண்டு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர்.


    இதன் பிறகு அடிக்கடி கொங்கணர் சிவவாக்கியரைக் கண்டு வர ஆரம்பித்தார்.


    கொங்கணசித்தர் சிவவாக்கியரை ஒவ்வொரு முறை பார்க்க வரும் போது, சிவவாக்கியர் மூங்கிலை உடைப்பதும் முறம் கூடைகளை பின்னுவதுமாக இருந்தார்.


    தங்கம் பெறும் யுக்தியைப் பெற்றிருக்கும் இந்த சிவவாக்கியர் ஏன் வறுமையில் உழல்கிறார் என எண்ணிய கொங்கணர், சிவவாக்கியர் வீட்டில் இல்லாத நேரம் சென்று, அவரின் மனைவியை அழைத்து, "தாயே!, உபயோகமற்ற தூர்ந்த இரும்புகள் இருந்தால் கொண்டு வா தாயே! என்றார்.


    சிவவாக்கியரின் மனைவியோ வீட்டினுள் சென்று எல்லாமிடமும் தேடி, கொங்கணவரிடம் கொடுத்தாள். கொங்கணர் இரும்புகளை தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார்.


    வீடு வந்து சேர்ந்த சிவவாக்கியரிடம் அவர் மனைவி, கொங்கணவர் வந்தது முதல் நடந்த விபரங்களை எல்லாவற்றையும் சொல்லி தங்கத்தைக் கணவர் முன்பு வைத்தாள்.


    சிவவாக்கியர் அவற்றைக் கையால் தொட மறுத்து, *"அம்மா....இது ஆட்கொல்லி நோய்க் கிருமி* இதை உடனே எடுத்துப் போய் பாழும் கிணற்றில் போட்டு விடு என்றார்.


    பதி சொல் தட்டாத அப் பதிவிரதை, அத்தங்கத்தை எடுத்துப் போய் கிணற்றுக்குள் வீசியெறிந்து விட்டு வீடு திரும்பினாள்.


    பகல் நேரம்...உச்சியில் சூரியன் தகித்துக் கொண்டிருந்தது. அப்போது சிவவாக்கியரின் மனவலையில்......ஒரு வேளை தன் மனைவியின் விருப்பத்தின் பேரிலே அந்தத் தங்கம் உருவாக்கப்பட்டிருக்குமோ? என்ற எண்ணம் தோன்றியது.


    ஒரு கல்லின் மேல் சிறுநீர் கழித்து விட்டு, அதன்பிறகு மனைவியை அழைத்தார். அவள் வந்ததும், "தேவி....அந்தக் கல்லின் மேல் தண்ணீரைக் கொட்டு என சொன்னார்.


    அவள் தண்ணீரை எடுத்து வந்து அந்தக் கல்லின் மேல் ஊற்றினாள். தண்ணீர் பட்ட அந்தக் கல் குபு குபுவென புகையை கக்கியது.


    புகை ஆரவாரம் அடங்கியதும் பக்கத்தில் வந்து கல்லைப் பார்த்தனர். அந்தக்கல் தங்கப் பாளமாக மாறிவிட்டிருந்தன.


    சிவவாக்கியர் தன் மனைவியிடம், வேண்டுமானால் இதை எடுத்துக் கொள் என்றார்.


    குறவர் குடியில் பிறந்த அந்த குலமகள், அத்தங்கத்தைக் கையால்கூட தொட மறுத்தாள். "சுவாமி!...எனக்குத் தங்களின் மாறாத அன்பு இருந்தால் அதுமட்டுமே போதும்! இந்தத் தங்கம் எனக்கு பெரிதன்று!...தாங்கள் எனக்குச் சொல்லிவிட்டிருந்தது போல..... *இது ஆட்கொல்லிக் கிருமி* யே என கூறிவிட்டாள்.


    சிவவாக்கியர் மனம் மகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். குருநாதர் கட்டளைப்படியே இல்லறம் மேற் கொண்டிருப்பதில் சிவவாக்கியருக்கு நிறைவாக இருந்தது. இல்லறம் நல்லறமாகத் தொடர்ந்தது.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    *சிவவாக்கியர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    சிவவாக்கியர் முறம் முடைந்து கொண்டிருந்தார்.


    சிவனடியார்கள் சிலர் அவருகே வந்து...."சுவாமி,...உங்களால் எங்களுக்கு ஒரு காரியம் கூடவேண்டும் என ஏக்கமாக கேட்டனர்.


    கேளுங்கள்!......


    *சித்தர்கள் தரிசனம் கோடி பாவங்ககள் நாசமாகுமாமே!*அதனால் எங்கள் பாவங்கள் ஒழிந்தொலைய, உங்களைப்போல சித்தரொருவரை தரிசித்து வணங்கிக் கொள்ள விழைகிறோம். ஏற்றுக் கொணர்வீர்களாக! என வேண்டினார்கள்.


    சிவவாக்கியர்க்கு இவ்வடியார்களின் எண்ணக்குமுறல் எண்ணவென்று உணரப் பெற்றார்.


    ஐயா!...அடியார்களே!,,,சித்தர்கள் தெய்வமயமானவர்கள். அவர்களை நீங்கள் பார்க்க நினைப்பது, காணக்கிடைக்கக்கூடியதாக தெரியவில்லை. நீங்களோ ஆசாபாசங்களுடன் உழன்றழைகிறீர்கள். இவ்வாசைகளுடன் நீங்கள் பார்க்க நேர்ந்தாலும், அவர்கள் செய்யச் சொல்லும் செயல்பாட்டை உங்களால் கடைப்பிடிக்க முடியாதே!... அதைத் தவறாகப் பட்டால், அவர்கள் சாபம் கொடுத்து விடுவார்கள். ரிஷிகள், முனிவர்கள் சாபத்திற்குக் கூட விமோசனம் கேட்டுப் பெறலாம்! ஆனால் சித்தர்களின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது.....என்றார்.


    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்கள் சித்தர்களை தரிசிக்க விரும்புவதெல்லாம் அவர்கள் செய்யும் சித்துவிளையாட்டைக் காண்பதற்காகத்தான். மேலும் தங்கம் உருவாக்குதல் அறிந்து, அதனைக் கொண்டு உலக வறுமையனைத்தையும் ஒழிக்க விழையப் போகிறோம் என்றார்கள் அவர்கள்.


    சிவவாக்கியருக்கு இவர்களின் நோக்கம் தெளிவாக புரிந்து போனது. இறைவனையும் அவனால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களையும் உள்ளபடி உணர்ந்த சிவவாக்கியருக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளது தெரியாமல் போகுமா?...........


    "ஐயா!,...உங்களைப் போன்றவர்கள் அதிகம் பேர்கள் வந்து தங்கரகசியத்தை அறிய முற்படுவதினால்தான், சித்தர்கள் உங்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.


    மேலும்.... தங்கமே... தங்கமே......
    என்று, தங்கத்தின் மீது மோகப்பட்டவர்களிடம் தங்கம் அடைக்கலமாகாது. மீறினால் கெடுதல்தான் மிகுந்து, குடும்பம் பிரிவினை ஏற்படும். ஒற்றுமையான குடும்பம் குலையும். வழக்கு ஏற்பட்டு அலைவர். நிறைய பாவங்கள் கணக்கிலேற்றப்படும். களவு இகழ்வு நிலை உறுதிப்படும். இவையெல்லாம் சாதாரணமாக நடக்கும். இந்தப் பாவங்களுக்கெல்லாம் நீங்கள் ஆட்படுவீர்களென எண்ணியே சித்தர்கள் உங்களுக்குக் காணப்படுவதில்லை என்றார்.


    இரசவாத வித்தைத் தனங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்கம் உருவாக்குதல் செய்யலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வந்தவர்கள், சிவவாக்கியர் முன்வந்து, அவர் தந்த அறிவுரைகளைக் கேட்டு தலை குனிந்து நின்றார்கள்.


    அன்பானவர்களே! எனவே உங்களின் பொன்னாசையை ஒழியுங்கள். பொருளாசையை அழியுங்கள். சித்தத்தை சிவன்பால் வையுங்கள். இவ்விதமாகும்போது, நீங்களே தங்கமாக மாறியிருப்பீர்கள்! இதுதான் தங்கத்தை நாடசிறந்த சுலபவழி என அவர்களுக்கு மீண்டும் உபதேசத்தருளி அவர்களை அனுப்பி வைத்தார்.


    ஞான மார்க்கத்தில் திகழ்ந்த சித்தரான சிவவாக்கியரைத் தேடி நாளும் புதிய புதிய சீடர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.


    அவரிடம் சேர்ந்தவர்கள் திரும்பத் திரும்ப இரசவாத வித்தை செய்ய விரும்புவதிலேயே ஆர்வம் காட்டினார்களே தவிர ஆன்மார்த்தமான அறிவைத் தேடிப்பெற எவரும் முன்வரவில்லை.


    தேடி வந்தவர்கள் எல்லாம், அவரிடம் ஞானம் தேடுவதை விட தங்கத்தைத் தேடுவதற்காகத்தான் வந்து சேர்ந்தனர். இச்செயல் சிவவாக்கியர்க்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது.


    இந்நிலையில் சிவவாக்கியரை சந்திக்க கொங்கணவர்க்கு ஆவல் உண்டானது. அப்போது சிவவாக்கியரின் சீடர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வரும் கொங்கணவரை சந்தித்து இரசவாதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினர்.


    இதையெல்லாம் அறிந்துணர்ந்த சிவவாக்கியர் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். தங்கத்தின் மீது எவரொருவர்க்கு பற்றில்லாதிருக்குமோ, அவர் உருவாக்கும் இரசவாதந்தான் சித்தியாகும். சித்தர்கள் பலரும் இரசவாதம் அறிந்தவர்கள்தான். அவற்றையெல்லாம் பற்றி தாமறிந்த அனுபவங்களை இந்த பிரபஞ்சத்துக்கக் காணிக்கையாக்கி விட்டுப் போயிருக்கின்றனர்.


    யோக நெறியில் நின்று இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கு நிகர் நிகர் அவர்களே! அத்தகைய தவ வலிமையும், யோகநெறியும் உடைய சித்தபெருமான்களுக்குத்தான் இரசவாதம் சித்தித்து வந்தது. மேலும் அவர்கள் கண்களுக்கு மட்டுந்தான் தென்படுவார்கள்.


    பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தியினால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். தமது கடுந்தவத்தாலும் யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தையும் பலவீனமான மனிதர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ளனர்.


    சித்தரைப் போல் நாம் மேன்மை நிலை அடைய விரும்புகிறோமா?, அல்லது பலவீன மனிதர் நிலையே போதும் என நினைக்கிறோமா?.


    சிவவாக்கியர் இறைவனது எண்ணத்தில் ஆழ்ந்தார். உள்ளம் உருகியது. தன் அனுபவங்களை.எல்லாமா பாடல்களாக ஆக்கினார். சிவவாக்கியரால் உருவான அப்பாடல்கள் அனைத்தும் சிவவாக்கியம் என அழைக்கப்பட்டது.


    சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் பெளர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் அவர் சமாதி பூஜை நடைபெற்று வருகிறது.


    ஞானத்தை அடைவதற்காகத் தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தவம் முடிவதற்குள் இறந்து போய் விட்டார். அவர்தான் சிவவாக்கியராக வந்து பிறந்தார் என்ற ஒரு வரலாறும் பேசப்படுவதுண்டு.


    இத்துடன் சிவவாக்கியர்.தொடர் மகிழ்ந்து நிறைந்தது
Working...
X