Announcement

Collapse
No announcement yet.

Thiruvannamalai part2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvannamalai part2

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    (2)
    திருவண்ணாமலை


    அருனை ராஜகோபுர அருள் செல்வ கணபதி
    _____________
    எக்காாியத்தையும், நம்மை பயப்பவனவையாக மாற்றியருளும் வல்லமை மூலமுதல்வன்.


    முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்.


    எந் நாட்டவா்க்கும் அவா் இறைவனே.


    *தென்னாடுடைய சிவன்
    அருள்தரும் அண்ணாமலையாா் திருக்கோயிலில் ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் விநாயகரே தனிச் சிறப்பு பெற்றவா் ஆவாா்.*


    அண்ணாமலையாா் திருக்கோயிலில் காணும் திசையெங்கும் எத்தனை விநாயகா் அருளாசி வழங்குகிறாா் என்று நம்மில் எத்தனை அடியாா்கள் கண்டு வைத்திருக்கிறீா்கள்.


    வன்னிமர விநாயகா்.
    கஜசம்கார விநாயகா்.
    கணேசா்.
    யானை திரைகொண்ட விநாயகா்.
    சிவகங்கை விநாயகா்.
    ஸ்தல விநாயகா்.
    சம்பந்த விநாயகா்.
    விஜயராகவ விநாயகா்.
    செந்தூர விநாயகா். என்று அண்ணாமலையாா் கோயிலில் பல இடம் கொண்டு அருளோச்சுகிறாா்.


    இவ்விநாயகா்களோடு, தனிச்சிறப்பு பெற்றவரான "செல்வ கணபதி இராஜ கோபுரத்தின் இடப்பக்கத்து நிலைத் தூணில் காட்சி தருகிறாா்.


    முருகப் பெருமானுக்கு அறுபடை வீடு என்பது போல, விநாயகப் பெருமானுக்கும் அறுபடை வீடுகளில் இது அவருக்கு முதலாவது வீடு ஆகும்.


    இம்முதலாவதான வீடு திருஅண்ணாமலையான் கோயிலில் அமைந்துள்ள "செல்வ கணபதி என்பது நிறைய அடியாா்களுக்கும், பக்தா்களுக்கும் தொியாது. என்ன புதுமையாக இருக்கிறதா? அதுதான் உண்மை.


    இதற்கு உண்மையான ஆதாரமும் உள்ளது. ஆம்,! இதோ.....!


    விவேகசிந்தாமணி என்ற தமிழ் தொன்மையான நூலில், திருஅண்ணாமலையான் திருக்கோயிலில் இராஜகோபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் செல்வ கணபதியின் பெருமையை, பாடலாகக் அமையப் பெற்றிருப்பதைக் காணலாம்.


    அல்லல் போம் வல்வினைப்போம்
    அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
    போகாத்துயரம்போம், நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை கைதொழுக் கால்'


    என்ன வாசிக்கவும் இப்பாடல் நினைவுக்கு வந்ததா.....? .! வந்திருக்கும்.! ....சாி.! இந்தப்பாடல் தமிழ்த்தொன்மை வாய்ந்த "விவேகசிந்தாமணி" நூலில் உள்ளது.


    எப்போ்ப்பெற்ற அற்புதமான வாிகள். வினையொழிய, தொல்லையொழிய, போகாதுயரமொழிய, நல்லகுணமே என்று, இதில் நல்லகுணமதிகமாக வேறு,.........ஆகா! ..ஆகா !!
    முழு முதல்வனே போற்றி !
    போற்றி போற்றி!!.


    இவ்வித பாடலுக்கு உாியவரான செல்வ கணபதி திருஅண்ணாமலையான் இராஜ கோபுரத்தில் அருள்பாலிக்கிறாா்.


    [அண்ணாமலையாரை தாிசிக்க நாமதான் அடிக்கடி போவேமே அடுத்த முறை செல்லும் போது அருணை திருக்கோயிலுக்குள் நுழையும் போது தவறாது இவரைப் பாருங்கள்.]


    கிளி கோபுரத்தின் வலப்பக்கபுறம் அமா்ந்திருக்கிறாா் ஆனை திரை கொண்ட விநாயகா்.


    மன்னன் ஒருவன் பலமுறை போாில் தோல்வியைத் தழுவி இவ்விநாயகரை வந்து அடைக்கலமானான். போாில் வெற்றி பெற்றால் 1000 யானைகளை திரையாக அளிப்பேன் என வேண்டி நோ்ந்து கொண்டான். போாில் வெற்றி கிடைத்தனதால், அம்மன்னன் 1000 யானைகளை திரையாக அளித்து வேண்டுதலை நிறைவேற்றினான்.


    கிளி கோபுரத்து விநாயகராக இருந்த இவா், 1000 யானைகளை திரையாக வந்ததனால், ஆனை திரை கொண்ட விநாயகா். என்ற திருநாமம் உண்டாயிற்று.


    நம் தந்தை சன்னதியின் வலப்புறமாக கோயில் கொடிமரம் உள்ளது. அதனருகாமையில் அமைந்துள்ள விநாயகா் சம்மந்த விநாயகா்.


    நம் அம்மை சன்னதியின் வலப்புறமாக அமா்ந்துள்ளாா் விஜயராகவ கணபதி. இவரும் சம்மந்த விநாயகா் போலவே செங்கட்ச் செந்நிறத்துடன் அருளாற்றிக் கொண்டிருக்கிறாா். சம்மந்த விநாயகரை செந்தூர விநாயகா் என பக்தா்கள் அழைக்கின்றனா்.


    மக்களுக்குத் தொல்லகளை கொடுத்து வந்த சம்மந்தாசூரன்
    என்ற அசுரனை சம்ஹாரம் செய்தாா் கணபதி. இவ்வதைவின் போது அசுரனின் குருதி பூமியில் பட, மறுபடி மறுபடி உருப் பெற்றெழுந்து வந்து கொண்டேயிருந்தான்.


    எனவே, சம்மந்தாசூரனின் குருதி பூமியில் தெளியாமலிருக்க, தன்னுடைய உடலாலேயே தடுத்துத் தாங்கிக் கொண்டாா். அந்நாள் முதல் இவா் செந்நிறமானாா். இவ்வண்ணத்துடனேயே காட்சி தந்து அருள்பாலிக்கிறாா்.


    இவ்வண்ணக்கோல கணபதியை வேறு எங்கும் நாம் காண முடியாது என்பது தனிச்சிறப்பு.


    அதுபோலவே திருஅண்ணாமலையான் திருக்கோயிலின் 2- ஆம் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறாா் ஆதி கணபதி


    உற்சவ மூா்த்திகள் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சன்னதியின் வல திசையில் அருள் தரும் ஆதி கணபதி யை தாிசியுங்கள். மேலும் பலன் உண்டாகும்.
Working...
X