Announcement

Collapse
No announcement yet.

Prasnottara malika in Tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Prasnottara malika in Tamil

    -ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை


    1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
    குரு சொல்லும் வசனம்


    2.தள்ள வேண்டியது எது ?
    வீண் செயல்


    3.குரு யார் ?
    உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .


    4.மிகவும் இனியது எது ?
    தருமம்


    5.எவன் சுத்தம் உள்ளவன் ?
    மனச்சுத்தம் உள்ளவன் .


    6.எவன் பண்டிதன் ?
    விவேகி .


    7.எது நஞ்சு ?
    குரு மொழியை அலட்சியம் செய்தல்


    8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
    தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .


    9.எதிரி யார் ?
    முயற்சி இல்லாச் சோம்பல் .


    10.முழுக் குருடன் யார் ?
    ஆசை வலைப்பட்டவன் .


    11.சூரன் யார் ?
    பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .


    12.செவிக்கு அமுதம் எது ?
    சாதுவின் உபதேசம் .


    13.பெருமை எதனால் ?
    எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .


    14.தாழ்வு எது ?
    தாழ்ந்தவனிடம் யாசிப்பது .


    15.எது வாழ்வு ?
    குற்றமின்மை .


    16.எது மடமை ?
    கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .


    17.நரகம் எது ?
    பிறர் வசம் இருப்பது .


    18.செய்யத்தக்கது எது ?
    உயிருக்கு இனிமை .


    19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
    அகம்பாவம் .


    20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
    மறைவில் செய்த பாவம் .


    21.முயற்சி எதன் பால் ?
    கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .


    22.எதிலிருந்து விலகுவது ?
    தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .


    23.விருப்புடன் எதைச் செய்வது ?
    தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .


    24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
    ,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .


    25.சாது யார் ?
    ஒழுக்கமுள்ளவன் .
    தீ நடத்தையுள்ளவன் .


    26.உலகை வெல்பவன் யார் ?
    உண்மையும் பொறுமையும் கொண்டவன் .


    27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
    உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .


    28.குருடன் யார் ?
    காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .


    29.செவிடன் யார் ?
    நல்லுரை கேளாதவன் .


    30.ஊமை யார் ?
    தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .


    31.ஈகை எது ?
    கேளாது கொடுத்தல் .


    32.நண்பன் யார் ?
    தீமை புகாது தடுப்பவன் .


    33.கவனமாக வாழ்வது எப்படி ?
    இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடிய செல்வன் ஆதலே .


    34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
    இயல்பாகவே அடக்கமுடையவரை .


    35-உலகம் யாருக்கு வசப்படும் ?
    தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .


    36.விபத்து யாரைத் தீண்டாது ?
    அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .


    37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
    சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .


    38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
    அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .


    39.கவலை இல்லாதவன் யார் ?
    பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .


    40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை எவை ?
    கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .


    41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
    கருமித்தனம் .


    42.பெரிய தீட்டு எது ?
    கடன் தொல்லை .


    43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
    தானும் மனத்துயர் இன்றிப் பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .


    44.நம்பத்தகாதவன் யார் ?
    சதா பொய் சொல்லுபவன் .


    45.பொய் எப்போது தீதில்லை ?
    தருமப் பாதுகாப்பின் போது .


    46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
    ஆரோக்கியம் .


    47.யார் தூய்மையானவன் ?
    எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .


    48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
    இளமை ,செல்வம் ,ஆயுள் .


    49.சாதிக்க வேண்டியது எது ?
    என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .


    50.துக்கம் இல்லாதவன் யார் /
    கோபம் இல்லாதவன் .


    51.அந்தணன் உபாசிப்பது எவரை /
    காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .


    52.இவற்றில் உள்ளது என்ன ?
    சுத்த சிவ தத்துவம் .


    53.யார் பிரத்தியட்ச தேவதை ?
    மாதா .


    54.பூஜ்ய குரு யார் ?
    தந்தை .


    55.சர்வதேவதாத்மா யார் ?
    வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்ட விப்ரன் .


    56.எதனால் குலம் அழியும் ?
    சாது ஜனங்களை புண்படுத்துவதால் .


    57.யார் வாக்கு பலிக்கும் ?
    சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.
Working...
X