Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    90.வரதாமணி
    வரதா மணிநீ யெனவோரில்
    வருகா தெதுதா னதில்வாரா
    திரதா திகளால் நவலோக
    மிடவே கரியா மிதிலேது
    சரதா மறையோ தயன்மாலும்
    சகலா கமநூ லறியாத
    பரதே வதையாள் தருசேயே
    பழனா புரிவாழ் பெருமாளே.

    - 90 பழநி


    துதித்தால் வரும் பேறு இத்திருப்புகழில் சொல்லப்படுகிறது


    பதம் பிரித்து உரை


    வரதா மணி நீ என ஓரில்
    வருகா(த)து எது தான் அதில் வராது


    வரதா= வேண்டுவோர் வேண்டுகின்ற வரங்களை அளிப்பவனே மணி நீ = (கண்) மணியே என ஓரில் = என்று துதித்து ஆராய்ந்து பார்த்தால் வருகாதது எது = கை கூடாதது எது உண்டு? எது தான் அதில் வாராது = எந்தக் காரியம் தான் அங்ஙனம் துதித்தால் கை கூடாது?


    இரத ஆதிகளால் நவ லோகம்
    இடவே கரியா(கு)ம் இதில் ஏது


    இரத ஆதிகளால் = இரசவாதம் முதலியவைகளால் நவலோகம்இடவே = ஒன்பது உலோகங்களை இட்ட கூட்டுறவால்கரியாகும் இதில் ஏது = (இறுதியில்) கரியாவதன்றி வரும் பயன்என்ன? (ஒன்றுமில்லை அல்லவா)


    சரதா மறை ஓதும் அயன் மாலும்
    சகல ஆகம நூல் அறியாத


    சரதா = மெய்யனே மறை ஓதும் = வேதம் ஓதுகின்ற அயன் = பிரமனும்மாலும் = திருமாலும் சகல ஆகம = எல்லா ஆகமங்களும் நூல் = மற்ற ஞான நூல்களும் அறியாத = கண்டறியாத


    பர தேவதையாள் தரு சேயே
    பழனா புரி வாழ் பெருமாளே.


    பர தேவதையாள் = பர தேவதையாகிய பார்வதி தரு சேயே =அருளிய குழந்தையே பழனா புரி வாழ் பெருமாளே = பழனி நகரில் வாழ்கின்ற பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    அ. வருகா தெதுதா னதில் வாராது....
    வருகா(த)து எது? எது தான் அதில் வராது? எனப் பிரிக்கவும்.
    ஆ. ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்.
    இ. நவ லோகங்கள்.... பொன், செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா(கலப்பு உலோகம்) , துத்தநாகம், வெண்கலம்.
Working...
X