Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    99.கடிமா மலர்
    கடிமா மலர்க்கு ளின்ப முளவே ரிகக்கு நண்பு
    தருமா கடப்ப மைந்த தொடைமாலை
    கனமே ருவொத்தி டும்ப னிருமா புயத்த ணிந்த
    கருணா கரப்ர சண்ட கதிர்வேலா
    வடிவார் குறத்தி தன்பொ னடிமீ துநித்த முந்தண்
    முடியா னதுற்று கந்து பணிவோனே
    வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீ ரனுக்கு கந்து
    மலர்வா யிலக்க ணங்க ளியல்போதி
    அடிமோ னைசொற்கி ணங்க வுலகா முவப்ப என்று
    னருளா லளிக்கு கந்த பெரியோனே
    அடியே னுரைத்த புன்சொ லதுமீ துநித்த முந்த
    ணருளே தழைத்து கந்து வரவேணும்
    செடிநே ருடற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
    படிதா னலக்க ணிங்க ணுறலாமோ
    திறமா தவர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
    திருவே ரகத்த மர்ந்த பெருமாளே.

    -99 திருவேரகம்


    காட்சி தர பிரார்த்தனை









    பதம் பிரித்து உரை


    கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு(ம்) நண்பு
    தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை


    கடி மா மலர்க்குள் = வாசனை பொருந்திய மலருள் இன்பம் உள=இன்பகரமான வேரி= தேனை கக்கும் = சொட்டுகின் றதும்நண்பு தரு = அன்பைப் பெருக்குவதுமாகிய மா கடப்பு அமைந்த =சிறந்த கடப்ப மலரால் அமைக்கப்பட்ட. தொடை மாலையை =பூமாலையை.


    கன மேரு ஒத்திடும் ப(ன்)னிரு மா புயத்து அணிந்த
    கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா


    கன மேரு ஒத்திடும் = பொன் மயமான மேரு மலையைப்போன்ற பனிரு மா புயத்து = பன்னிரண்டு அழகிய கரங்களில்அணிந்த = அணிந்துள்ள கருணாகர = கருணாகரனே ப்ரசண்ட =கடுமையும் கதிர் வேலா = ஒளியும் வீசும் வேலனே.


    வடிவு ஆர் குறத்தி தன் பொ(ன்)னடி மீது நித்தமும் தண்
    முடியானது உற்று உகந்து பணிவோனே


    வடிவு ஆர் குறத்தி தன் = அழகு மிக்க குறத்தியாகிய வள்ளியின். பொன் அடி மீது = அழகிய அடிகளில். நித்தமும் = நாள்தோறும்தண் = குளிர்ச்சி பொருந்திய முடியானது உற்று = உனது முடியானது பொருந்தும்படி உகந்து பணிவோனே = மகிழ்ந்து பணிபவனே.


    வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து
    மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி


    வள வாய்மை சொல் = வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த சொற்கள் அமைந்த. ப்ரபந்தம் உள = நூல்களைப் பாட வல்ல.கீரனுக்கு = நக்கீரன் என்னும் புலவனுக்கு. உகந்து = மனம் மகிழ்ந்து. மலர் வாயில் = மலர் வாயால். இலக்கணங்கள் இயல்பு ஓதி = இலக்கண நயங்களை எடுத்து ஓதுவித்து.


    அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று
    உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே


    அடி மோனை சொற்கு இணங்க = அடி, மோனை ஆகியவை சொல்லுக்குப் பொருந்த. உலகாம் உவப்ப என்று = உலகம் உவப்ப என்று. உன் அருளால் அளிக்க உகந்து = உன்னுடைய அருள் திருவாக்கால் அடி எடுத்துக் கொடுத்து மகிழ்ந்து கூறிய. பெரியோனே = பெரியவனே.


    அடியேன் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் உன் தண்
    அருளே தழைத்து உகந்து வரவேணும்


    அடியேன் உரைத்த = அடியவனாகிய நான் சொல்லுகின்ற. புன் சொல் அது மீது = இந்த இழிவான சொற்கள் மீதும். நித்தமும் =நாள்தோறும். தண் அருளே = குளிர்ந்த உனது திருவருளை.தழைத்து = பாலித்து. உகந்து வரவேணும் = மகிழ்ந்து வரவேணும்.


    செடி நேர் உடல் குடம்பை தனின் மேவி உற்றிடு இந்த
    படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ


    செடி நேர் உடல் குடம்பை தனில் = பாவச் செய்லகளே நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டில். மேவி உற்றிடு =பொருந்தியிருக்கின்ற. இந்த படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ = இந்த வகையில் துன்பங்களை நான் அனுபவிக்கலாமா?


    திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த
    திருவேரகத்து அமர்ந்த பெருமாளே.


    திற மாதவர் = திறம் வாய்ந்த தவசிகள் கனிந்து = உள்ளம் கனிந்து உருகி உன் இரு பாத பத்மம் = உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளால் உய்ந்த = ஈடேற. திருவேரகத்து அமர்ந்த பெருமாளே = சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே






    ஒப்புக:


    1. வடிவார் குறத்தி தன் பொனடி மீது......
    இது முருகவேள் அடியார்க்கு எளியன் என்னும் தத்துவத்தை விளக்குகின்றது.
    பணியா என வள்ளி பதம் பணியும் தணியா....கந்தர் அனுபூதி
    குறமின் பத சேகரனே ......... கந்தர் அனுபூதி


    2. சொற் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து....
    நக்கீர தேவர் முருகக் கடவுள் அருள் பெறு நிமித்தம், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு என்று அடி எடுத்து அருளிச் செய்த திருமுருகாற்றுப் படையைக் குறித்தது. உலகம் என்பது உலகாம் என்று நீண்டுள்ளது.
Working...
X