Announcement

Collapse
No announcement yet.

Thirukadavur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukadavur temple

    **சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    いいいいいいいいいいいいいい
    *(15)*
    *திருக்கடவூர் தொடர்.*
    いいいいいいいいいいいいいい
    சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர வடிவிலே நான்கு பிரதான வீதிகளுடன் அமையப்பெற்றிருந்தது *திருக்கடவூர்*
    திருக்கோவிலுக்கு நேரெதிரே சந்நிதித்தெரு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்குவதுபோல் தோற்றமளித்தது.
    திருக்கோவிலைச் சுற்றி உள்சதுரமாயி நான்கு வீதிகள். இவ்வீதிக்கு *மடவிளாகங்கள்* எனப் பெயர்.
    திருக்கோயிலுக்கு வலப்புறம் பிரியும் மடவிளாகம் வடக்குத் தெருவில் சென்று சேருகிறது.
    வேள்விப்புகை காற்றில் கலக்க சாமகானம் எங்கும் ஒலித்தது, மனத்தது.
    மாடங்கள் கொண்ட மனைகளில் எரிதழல் ஓம்பப்பட்டது. சிறு குழந்தைகளின் காற் சதங்கையொலியும் புள்ளினங்களின் கீச்செனவொலியும் விடியல் வேளையின் அழகுக்கு மெருக்கேற்றிவிட்டிருந்தன.
    இவற்றினிடையே தனித்தெழுந்து மனத்தது குங்கிலிய நறுமணப் பொன்புகை. நமசிவாயத்தை நாசிவழி உணர்ந்ததைப் போன்று உயிருணர்ச்சி ஏற்பட்டன. அதனால் முகமலர்ந்தன.
    கனிந்த முகமும், குளிர்ந்த பார்வையுமாக, *"சிவ சிவ சிவ சிவ"* என உதட்டொழிகள் இசைத்தன. இச்சிவ மந்திரத்தை ஓதியவாறே திருக்கோயிலுக்குள் புகுந்து சென்றார் கலயநாயனார். அவர் இரு கைகளால் தாங்கிக் கொண்டு வந்த கலயத்திலிருந்து குங்கிலியம் பொங்கி நுரைந்து மணத்தது.
    நாள்தோறும் எம்பெருமான் மகேசனுக்கு குங்கிலியம் இடும் தொண்டை தொடர்ந்து செய்து வந்தார். அதுவும் ஒவ்வொரு நாளுக்கும் பலமுறை குங்கிலியத்தை உயிர்ச்சிபெற மணக்க வைத்து வந்தார். இத் தொண்டை மிகவும் அவர் விருப்பங் கொண்டே செய்து வந்தார். அவர் பேதமிலா அன்புக்கும், வெற்றிமிக்கான ஒழுக்கத்திற்கும் உரிமையாளர்.
    கடவூரில் நிறையவே நன்செய் நிலங்களை கலயர் வைத்து பரிபாலனம் செய்து வந்தார். அதனால் நிறையவே பொன்னும் பொருளும் அவரிடம் உறவாடிச் சேர்ந்தது.
    ஈசனுக்கு, குங்கிலிய நுரை பொங்கி மணக்க வைப்பதில் காலந்தொட்டோறும் செய்து வந்த போதலினால், ஒரு நேரத்தில் அவரிடமிருந்த செல்வம் கரைந்தொழியத் தொடங்கியது.
    கழனிகள் வற்றிக் குறைந்து கொண்டே வந்தது. மீதமிருக்கும் கழனியையும் காக்க மனம் இடங்கொடாது, விற்றுக் கொண்டே வந்தார்.
    அத்தனை நிலமது போயினும் பரவாயில்லை! என் அத்தனுக்கு குங்கிலியம் மணக்கச் செய்யாது இருக்க மாட்டேன் என வைராக்கியத்தில் உறுதியாய் இருந்தார்.
    கலயரின் துணைவியாரோ, தன் கணவனின் இறை தொண்டை மதித்து போற்றி, கணவருக்கு அருங்கணலாய் ஒத்துழைத்தார். சொந்தமான பொருள் விற்றுக் கரைந்து போயினும், வறுமை சேர்ந்து உறவாடவும், தன் கணவனின் இறைத் தொண்டு உறுதிப்பாட்டையென்னி மகிழ்ந்தாலும், வறுமையென்னோ மனதுக்குள் வலித்துக் கொண்டுதான் இருந்திருக்கும் போல. ஆனால், வெளியில் வறுமைத்தனத்தை காட்டிக் கொள்ளாமல்தான் தன் கணவனுக்கு கூடயிருந்து அமைதி காத்தாள்.
    நாளும் உண்ணும் உணவுக்கும் பஞ்சம் பற்றிக் கொண்டது. பிள்ளைகள் பசித்தழுவதை பொறுக்காத கலயரின் மனையாள் தன் மாங்கல்யத்தை கழற்றி கணவரின் கைகளில் கொடுத்துவித்து, இதை பணமாக்கி உணவுக்கு வழிசெய்க என சொன்னாள்.
    மாங்கல்யத்தைப் பெற்று, நெல் வாங்கி வந்து விடலாமென்ற எண்ணத்துடன் கலயர் வீட்டைவிட்டு புறம்போனார்.
    *( இதுவரை வறுமைதான் கூட வந்தது, இனிதான் வேற திருவிளையாடல் நடக்கப் போகுது பாருங்கள்.)*
    நெல் வாங்கி உணவாக்கும் எண்ணத்துடன்தான் கலயர் புறப்பட்டிருந்தார். ஆனாலென்னவோ..............
    அவரெதிரே யார் வருகிறார் பாருங்கள்.!
    வண்டியில் குங்கிலியத்தை பொதி பொதியாய் மூட்டைசெய்து, வணிகனொருவன்.......... *நல்ல குங்கிலியமோ குங்கிலியம்* எனக் கூவி வந்தான்.
    *குங்கிலியம்* *குங்கிலியம்*
    என்ன மணம்!"என்ன மணம்!!, ஆகா இவன் கூவும் உரத்த குரலையும் மீறி இவனிடமிருக்கும் குங்கிலியம் மணத்தைக் கொண்டுள்ளதே?
    ஆகா...எத்தனை மூட்டைகள் என்ன உயர்வான மணத்தோடு உள்ளதே?" இத்தனை மூட்டை குங்கிலியத்தையும் நாம் வாங்கிக் கொண்டுவிட்டால், நம் இறைவனுக்கு நெடுநாள் பலவேளைக்கு பஞ்சமிருக்காதே?" என எண்ணிக் கலங்கி,,,,,,,,,,,,,வணிகனை நெருங்கினார் கலயர்.
    கலயர் வீட்டை விட்டு வெளியே வந்த முன்பு வரை, அந்நாளில் குங்கிலியம் வாங்க குண்றுமணியளவுக்குக் கூட பொருள் இல்லாதிருந்த கலயர், இப்போது அவர் கண்ணெதிரே குங்கிலிய மூட்டைகள். அவர் அடையாமல் விடுவாரா? அதுவும் அவர் கையில் இப்போது பொருளுள்ளதே!" மனைவி தந்த மாங்கல்யம் அவருக்கு உற்சாகத்தைத் தந்தது.
    வணிகனிடம் பேரம் பேசி, மாங்கல்யத்துக்கு மாற்றாக, அத்தனை பணத்துக்குண்டான குங்கிலிய மூட்டைகளை பெற்றுக் கொண்டார். திருக்கோயில் கொண்டு சேர்க்க வண்டியுடன் விரைந்தார் கலயர். பெரும் பணத்திற்கு பெருமளவு குங்கிலியம் விற்றுப்போன சந்தோஷமானான் வணிக வண்டிக்காரன்.
    பகல் கரைந்தது. கரியயிருள் கூடியது. மெல்லியருளில் இறைவன் சிரித்தபடியிருந்தான். விடையவன் வித்தகனின் விமலமலர்ப் பாத ஒளியில், உடல் சாய்ந்து கவலை தெரியா நிலையில் ஈசனின் அழகில் சொக்கி பசியறியாது தூங்கிப் போனார் கலயர்.
    *சந்நிதியில் இறைவன் காலடியில் கலயர் தூங்கிப் போனார்.*
    *அங்கே வீட்டில் பிள்ளைகள் பசி என்னவானது?*
    *கலய மனையாள் என்ன செய்தார்?*
    *நாளை..............,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,*
    *திருக்கடவூர் திருக்கோயிலில் கலயனாரின் குங்கிலியம் நாளையும் மணக்கும்.*
    திருச்சிற்றம்பலம்.
    *பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி*
    *அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து*
    *விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு*
    *கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!*
    -----திருநாவுக்கரசர்.
    いいいいいいいいいいいいいい
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X