Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    110.நிறைமதி
    நிறைமதி முகமெனு மொளியாலே
    நெறிவிழி கணையெனு நிகராலே
    உறவுகொள் மடவர்க ளுறவாமோ
    உனதிரு வடியினி யருள்வாயே
    மறைபயி லரிதிரு மருகோனே
    மருவல ரசுரர்கள் குலகாலா
    குறமகள் தனைமண மருள்வோனே
    குருமலை மருவிய பெருமாளே

    - 110 திருவேரகம்



    பதம் பிரித்து உரை


    நிறை மதி முகம் எனும் ஒளியாலே
    நெறி விழி கணை எனு(ம்) நிகராலே


    நிறை மதி = பூரண சந்திரன் போன்ற. முகம் எனும் ஒளியாலே = முகத்தின் ஒளியாலும் நெறி விழி = வழி காட்டியாயுள்ள. கணை எனும் நிகராலே = கண்ணாகிய அம்பு செய்யும் போரினாலும்.


    உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
    உன திருவடி இனி அருள்வாயே


    உறவு கொள் = (என்னிடம்) உறவு பூண்கின்ற. மடவார்கள் =விலை மாதர்களின் உறவு ஆமோ = தொடர்பு நல்லதாகுமோ?உன = உன்னுடைய திருவடி = திருவடிகளை இனி அருள்வாயே = இனி எனக்குத் தந்தருளுக.


    மறை பயில் அரி திரு மருகோனே
    மருவலர் அசுரர்கள் குலகாலா


    மறை பயில் அரி = வேதங்களில் சொல்லப்படும் திருமாலின். திரு மருகோனே = அழகிய மருகனே மருவலர் =பகைவர்களாகிய. அசுரர்கள் குல காலா = அசுரர்களின் குலத்துக்குக் காலனே


    குற மகள் தனை மணம் அருள்வோனே
    குருமலை மருவிய பெருமாளே.


    குறமகள் தனை = குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் அருள்வோனே = திருமணம் செய்து அருளியவனே குருமலை = குருமலை என்று சொல்லப்படும் சுவாமி மலையில். மருவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.



Working...
X