Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    125. ஏது புத்திஐயா


    திருவடி தீட்சை கேட்டுப் பாடின துதி




    ஏது புத்திஐ யாஎ னக்கினி
    யாரை நத்திடு வேன வத்தினி
    லேயி றத்தல்கொ லோஎ னக்குநி தந்தைதாயென்
    றேயி ருக்கவு நானு மிப்படி
    யேத வித்திட வோச கத்தவ
    ரேச லிற்பட வோதந கைத்தவர் கண்கள்காணப்
    பாதம் வைத்திடை யாதெ ரித்தெனை
    தாளில் வைக்கநி யேம றுத்திடில்
    பார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப்
    பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
    யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
    பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது சிந்தியாதோ
    ஓத முற்றெழு பால்கொ தித்தது
    போல எட்டிகை நீச முட்டரை
    யோட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே
    ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
    மான்ம ழுக்கர மாட பொற்கழ
    லோசை பெற்றிட வேந டித்தவர் தந்தவாழ்வே
    மாதி னைப்புன மீதி ருக்குமை
    வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
    மார்ப ணைத்தம யூர அற்புத கந்தவேளே
    மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
    லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
    வாழ் திருத்தணி மாம லைப்பதி தம்பிரானே.

    -125 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    ஏது புத்தி ஐயா எனக்கு இனி
    யாரை நத்திடுவேன் அவத்தினிலே
    இறத்தல் கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே


    ஏது புத்தி ஐயா எனக்கு = எனக்கு புத்தியே இல்லை, ஐயனே இனி =இனிமேல் யாரை நத்திடுவேன்= யாரை விரும்பி நாடுவேன்அவத்தினில்=வீணாக இறத்தல் கொலோ= இறப்பது தான் என் தலை விதியோ எனக்கு நீ தந்தை தாய் என்றே = எனக்கு நீயே தந்தையும் தாயும் என்று


    இருக்கவும் நான் இப்படியே
    தவித்திடவோ சகத்தவர்
    ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண


    இருக்கவும் = இருந்தும் நானும் இப்படியே = நானும் இவ்வாறாகதவித்திடவோ = தவித்திடலாமா? சகத்தவர் = உலகோர் ஏசலிற் படவோ = என்னை இகழ்ச்சி மொழிக்கு ஆளாக்கலாமாநகைத்தவர் கண்கள் காண = (என்னை) இகழ்ந்து சிரிப்பவர்கள் கண் முன்னே.


    பாதம் வைத்திடு ஐயா தெரித்து எனை
    தாளில் வைக்க நீயே மறுத்திடில்
    பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி


    பாதம் வைத்திடு ஐயா = (உனது) திருவடியை வைப்பாயாகதெரித்து = என் நிலை தெரிந்து தாளில் வைக்க= (என்னைத்) திருத்தாளில் சேர்க்க நீயே = நீயே மறுத்திடில் = மறுப்பா யானால் பார் நகைக்கும் ஐயா = இந்த உலகமே சிரிக்கும்,ஐயனே தகப்பன் முன் மைந்தன் ஓடி = தந்தையின் முன் குழந்தை ஓடிச் சென்று.


    பால் மொழி குரல் ஓலம் இட்டிடில்
    யார் எடுப்பது எனா வெறுத்து அழ
    பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ


    பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில் = பால் வேண்டும் குறிப்பு மொழிக் குரலுடன் அழுதால் யார் எடுப்பது எனா = யார் இந்தக் குழந்தையை எடுப்பதென்று வெறுத்து= வெறுத்து அழ =அழும்படி பார் விடுப்பார்களோ = இப்பூமியில் விட்டு விடுவார்களா எனக்கு இது சிந்தியாதோ = இந்த உண்மை என் மனதில் படலாகாதா.


    ஓதம் உற்று எழு பால் கொதித்தது
    போல எட்டு திகை நீச முட்டரை
    ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே


    ஓதம் உற்று எழு = வெள்ளமாகப் பெருகி எழும் பால் கொதித்தது போல = பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை =எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை. ஓட வெட்டிய = ஓடும்படி வெட்டி அழித்த பாநு சத்தி = சூரிய ஒளி கொண்ட சத்தி வேலை கை எங்கள் கோவே =கையில் ஏந்திய கையில் கொண்ட எங்கள் அரசே.


    ஓதம் மொய் சடை ஆட உற்று அமர்
    மான் மழு கரம் ஆட பொன் கழல்
    ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே


    ஓத மொய்ச் சடை = கங்கை வெள்ளம் நெருங்கும் சடை. ஆடவும் = ஆடவும். உற்று அமர் மான் = பொருந்தியிருக்கும் மான். மழு =மழு. கரம் = ஏந்திய கரங்கள். ஆட = ஆடவும். பொன் கழல் =அழகிய காலின் ஒலி. ஓசை பெற்றிடவே = ஒலி செய்ய.நடித்தவர் தந்த வாழ்வே = நடனம் செய்தவர் அளித்த செல்வமே.


    மா தினை புன மீது இருக்கு மை
    வாள் விழி குற மாதினை திரு
    மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே


    மா = பெரிய. தினைப் புனம் மீது இருக்கும் = தினைப் புனத்தின் மேல் இருந்தவளும். மை வாள் விழி = மை பூசிய ஒளி பொருந்திய கண்களை உடைய. குற மாதினை = குறப் பெண்ணாகிய வள்ளியை. திரு மார்பு அணைத்த = அழகிய மார்பில் அணைத்த. மயூர = மயில் வாகனனே. அற்புத =அற்புதமான. கந்த வேளே = கந்த வேளே.


    மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார்
    வியப்புற நீடு மெய் தவர்
    வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரானே.


    மாரன் = மன்மதன். வெற்றி கொள் = வெற்றி பெறும்படியான. பூ முடிக் குழலார் வியப்புற = பூ முடித்த கூந்தலை உடைய மாதர்களும் வியக்கும் படியான. நீடு மெய்த் தவர் = பெரிய உண்மைத் தவசிகள். வாழ் = வாழும். திருத்தணி மா மலைப்பதி தம்பிரானே = சிறந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.



    தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு



    ஒப்புக
    1.பாதம் வைத்திடையாது....
    எனதுதலை யிற்பதங்க ளருள்வோன -- திருப்புகழ் ,களபமுலையை


    ‘எனது தலையிற் பதங்கள் அருள்வோனே’, ‘பதயுக மலர் தந்த பேரருள்’, ‘முன் அளித்த பாதம்’, ‘தலை நாளிற் பதம் ஏத்தி’, என்பன அவர் வாக்குகள்


    தந்தையாகிய நீர் குழந்தையாகிய என்னை ஆதரித்து ஆட்கொள்வீர் என்பது கருத்து
Working...
X