Announcement

Collapse
No announcement yet.

Sriranga Jyeshtabhishekam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sriranga Jyeshtabhishekam

    (பெரிய திருமஞ்சனம்) ...


    அரங்கனுக்கு வருடாவருடம் ,ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை )நக்ஷத்திரத்தன்று ,விசேஷமாக திருமஞ்சனம் (அபிஷேகம்)நடைபெறும் ....


    "ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் "பெரிய '" என்ற பொருள் உரைக்கும் ..."ஜ்யேஷ்டா" நக்ஷத்திரம் (கேட்டை )என்றால் ,"பெரிய நக்ஷத்திரம் "என்றும் பொருள் கொள்ளலாம் ...ஸ்ரீ ரங்கத்தில் பள்ளிகொண்டு அருளும் ,மூலவர் ஸ்ரீ ரங்கநாதனின் ஆலயத்தின் பெயரோ "பெரிய கோயில் "என்பது ஆகும் ..


    ஸ்ரீரங்கநாதரை "பெரிய பெருமாள் " என்றும் ,ஸ்ரீ ரங்கநாயகித் தாயாரை "பெரிய பிராட்டியார் " என்றும் ,பெருமாளுக்கு,தினமும் நடைபெறும் ,மதிய வேளை(உச்சிகால )நிவேதனத்துக்கு ,"பெரியவசரம் "என்றும் கூறுவது மறபு. (அரங்கனின் பிரசாதங்கள் "பெரிய அளவில் " நிவேதனம் செய்யப்படும்) அரங்கனை ,திருமணம் செய்துகொண்ட ஆண்டாளின் தந்தையான ,விஷ்ணு சித்தரை "பெரியாழ்வார்" என்று அரங்கனே அழைத்ததாக சொல்வது ,வழக்கம்.. .


    பொதுவாக அரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ,"பெரிய பெருமாளான "மூலவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு ,இந்த ஆனி மாதத்தில்,"பெரிய நட்சத்திரத்தில்"(ஜ்யேஷ்டா நக்ஷத்திரத்தில்),ஸ்ரீரங்கத்தில் இரண்டு பிரிவாக,தெற்கிலும் ,வடக்கிலும் ,"பெரிய மாலை "போல ,தவழ்ந்து ஓடும் ,தமிழகத்தின் ,புண்ணியமான ,புராதனம் மிக்க ,"பெரிய நதியான " தென் திருக் "காவிரியில்",இருந்து , ,"பெரிய கோபுரமான "ராஜ கோபுரத்தின் வழியே , தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,விசேஷமாக ,"பெரிய கோயிலான"அரங்கன் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளிக் கொண்டிருக்கும் , அரங்கத்து (உற்சவப்) பெருமாளான ,அழகிய மணவாளனுக்கும் ,(நம்பெருமாளுக்கு) ஸ்ரீ தேவி,மற்றும் பூ தேவி தாயாருக்கும் ,பெரிய திருமஞ்சனம் (அபிஷேகம்)செய்யப் படும் ....


    பெரிய நட்சத்திரத்தில் ,பெரிய நதியில் இருந்து ,பெரிய கோபுரத்தின் வழியே ,பெரிய அளவில் (28 குடங்களில் ),பெரிய கோயிலில் உள்ள ,பெரிய பெருமாளுக்கு ,பெரிய அளவில் ,வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே ,இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று அழைக்கிறார்கள்.


    (வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீ ரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் ..ஆனால் இந்த "பெரிய திருமஞ்சனத்திற்கு "மட்டும் வழக்கம்போல், கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல், ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்- அம்மா மண்டபத்தின் காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.


    ஆண்டாள் "யானையின் " மீது தங்கக் குடத்திலும், வெள்ளிக் குடங்களிலும், காவிரித் தீர்த்தத்தை வேத கோஷங்கள்(?), பாசுரங்கள் பாடி பெருமாளின் திருமஞ்சனத்துக்காக, ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.


    அரங்கத்தில் பள்ளிகொண்டு அருளும் ,மூலவரான பெரிய பெருமாளுக்கு (ஸ்ரீரங்கநாதருக்கு ),"தைலக்காப்பு", அகில் கட்டை ,சந்தனக்கட்டை ,சாம்பிராணி ,வெட்டிவேர் ,நல்லெண்ணெய் மற்றும் புனுகு ,பச்சைகற்பூரம் கொண்டு ,மண்பாத்திரத்தில் ,விறகு அடுப்பில் ,ஒரு சோதனைக்குழாய் போன்ற அமைப்பில் ,பானைகளைக் கொண்டு ,பரிசுத்தமாக காய்ச்சிய தைலம்,பாராம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தைலம் தயாரிக்கப்படுகிறது இந்த பெரிய திருமஞ்சனத்தன்று மட்டுமே , பெரிய பெருமாளுக்கு தலை முதல் பாதம் வரை ,(ஆதிஷேசனுக்கும்), சாற்றப்படும் ....இதை "புனுகு சட்டம் "என்றும் சொல்லுவர் ...


    அரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ,மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் ,கல்லினாலோ.அல்லது மரத்தினாலோ செய்யப்பட" விக்ரஹம்" அல்ல முழுக்க முழுக்க "ஸ்வதையினால் " அதாவது ,சாளக்ராமங்கள் மற்றும் சுண்ணாம்பு ,இன்னும் பிற படிமங்களைக் கொண்ட ,(சுண்ணாம்புக் காரை)கலைவைகளால் ஆன திருமேனி .(விக்ரஹம்). இதனால், மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யும் வழக்கம் இல்லை.திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் மட்டுமே சாத்தப்படும். பூ, மாலைகள் சாத்தப்படுவதில்லை.


    ஆண்டுக்கொரு முறை, அகில், சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள், பாராம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தைலம் தயாரிக்கப்படுகிறது.அதன் மூலம் மூலவரின் திருமேனிக்கு தைலக்காப்பு இடப்படுகிறது.


    இப்படிப்பட்ட பெருமை மிகுந்த,பெரிய பெருமாளின் திருமேனியை ( சரீரத்தினை)பாதுகாக்கும் பொருட்டு ,மேற்சொன்ன "'தைலக்காப்பு " நமது முன்னோர்களினால் ,காலங்காலமாக ,தொன்று தொட்டு,வெகு நேர்த்தியாக ,பக்தியுடன் ,இந்த ஆனிமாதம் ,கேட்டை (ஜ்யேஷ்டா)நட்சத்திரத்தன்று சாற்றப் படுகின்றது ...


    பொதுவாக எலும்பினாலும்,இரத்தத்தாலும்,சதையாலும்,
    தசைகளினாலும் ஆகிய,சில பல ஆண்டுகளில் அழிந்து போகக் கூடிய நம்முடைய ,மனித சரீரத்தை காப்பதற்கு வாரம் ஒருமுறையாவது "நல்லெண்ணெய்க் குளியல் "செய்ய வேணும் என்பது நம்முடைய முன்னோர்களின் வாக்கு ....


    பிரம்மனைபடைத்த ,பிரம்மாமுதல் நாரதர் ,சூரியன் ,அவரின் குலத்தின் வழி வந்த இக்ஷுவாகு,தசரதன் ,அவரின் மகனாக ராமன்,அவரின் பின்பு விபீஷணன் மற்றும் பன்னிரு ஆழ்வார்களாலும் ,பலப்பல ஆச்சார்யர்கள் முதலானோர்களால் பூஜிக்கப்பட்ட,இன்னும் பல கோடி ஆண்டுகள் பூஜிக்கப்போகின்ற அழிவில்லாத ,அநாதியான,கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவரான ,"பெரிய பெருமாளான " மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் சரீரத்தினை (திருமேனியை )பாதுகாக்கும் பொருட்டு , இந்த தைலமானது ,ஸ்ரீ ரங்கநாதரின் திருமேனியில் உள்ள ,வஸ்திரங்களையும்,ஆபரணங்களையும் களைந்து ,சாற்றப்படும் .


    இந்த "தைலக்காப்பு " சாற்றப் படுவதால் தான் ,நாளை முதல் ,ஒரு மண்டல காலத்திற்கு அரங்கனின் திருமேனி ,திரையிடப் பட்டு ,"அவனின் பாதம் முதல் கண்டம் வரை "திரையிடப்பட்டு ,திருமுக தரிசனம் மட்டும் சேவையாகும் ...


    ஒரு மண்டல காலத்தில் தைலக் காப்பு உலர்ந்த பின் மீண்டும் ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து,மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிமுதல் திருமுடி வரை ,மீண்டும் சேவை ஆகும் ..


    அதைப்போலவே உற்சவரான ,நம்பெருமாளுக்கும் ,உபய நாய்ச்சிமார்களான ,ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி தாயார்களுக்கும்,அவர்களின் திருமேனியை காக்கும் பொருட்டு ,அரங்கனின் முதல் பிராகாரமான "திருவெண்ணாழி",


    (திரு+வெண்+ஆழி ="திருவெண்ணாழி",திரு +பால்+கடல் =அதாவது திருப்பாற்கடலில்)


    திருச்சுற்றில்,ஏழு திரையிடப்பட்டு ,நம்பெருமாள் மற்றும் உபயனாய்ச்சிமார்களுக்கு,அவர்களின் திருமேனியின் மேல், வருடம் முழுவதும் ,சாற்றப்பட்டு இருக்கும் ,தங்க கவச்சத்தினை களைந்து ,நேரிடையாக ,


    "திருமேனியில் "(சரீரத்தில்) ,பால்,தயிர்,பஞ்சாமிர்தம் கொண்டு ,திருமஞ்சனம் (அபிஷேகம் )செய்விக்கப் படும் ...இந்த திருமஞ்சனத்தை ,அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சேவிக்க முடியாது ,இது"பெரிய ஏகாந்த திருமஞ்சனம் "என்று சொல்லப்படுகிறது .


    உற்சவர்களின் திருமேனியின் சாற்றப்பட்டு உள்ள ,
    தங்க கவசத்தின் உள்ளே ,பச்சைக் கற்பூரம் ஒரு பாதுகாப்பு கவசம் போல்,மெல்லிய துணிகளைக் கொண்டு ,திருமேனிமுழுவதும் சாற்றப் பட்டு இருக்கும் .அந்த பச்சைக் கற்பூரக் கவசமானது, உற்சவரின் திருமேனியை ,ஆண்டு முழுவதும் ,பாதுகாக்கும் பொருட்டு ,சாற்றப் படுகிறது ...


    பொதுவாக பச்சைக்கற்பூரம் கொண்டு, பாதுகாக்கும் எந்த பொருட்களும் ,நீண்ட நாட்கள் பாதுகாப்பாக,இருக்கும் .அதோடு புழு ,பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் வரவிடாமல் தடுக்கும் ...இதற்காகவே ,நம்பெருமாளுக்கும் ,உபய நாய்ச்சிமார்களுக்கும்,இத்தகைய சிறப்பு மிக்க ,பச்சைக் கற்பூரம் கொண்டு ,ஒரு கவசமும் ,அதன்மீதே ,தங்க கவசமும் ,ஆபரணங்களும் ,வைர ,வைடூரிய ,மாணிக்கங்களும் ,பூமாலைகளும் சாற்றப் படுகின்றது ...


    இப்படிப்பட்ட ,"தைலக்காப்பும்","பச்சைக் கர்ப்பூறக் கவசமும்
    "நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள்",என்பதை,நாம் பெருமை கொள்ள வேண்டும் .இந்த பாதுகாப்பு முறைகள் ,காலங்காலமாக அழியாதது.. புகழ் உடையது ...அரியது ...அதே நேரத்தில் போற்றத்தக்கதும் ஆகும்.இந்த பாதுகாப்பு முறைகளை ,இன்றும், இன்னும் வரப்போகும் காலங்களிலும் தொடரச் செய்வது மட்டும் அல்ல,அதை சரியாகச் செய்வதும் நமது கடமையாகும் ...


    அரங்கன் ஆலயத்தில்இந்த "பெரிய திருமஞ்சனம் "தவிர மற்ற எந்த காலங்களிலும்,நம்பெருமாளுக்கோ,உபய நாய்ச்சிமார்களுக்கோ ,பால் ,தயிர் ,பஞ்சாமிர்தம் கொண்டு(திருமஞ்சனம்,( அபிஷேகம்)செய்வது கிடையாது .... வருடம் முழுவதும் நடக்கும் ,திருமஞ்சனங்களில் ,காவிரித்தீர்த்தத்தில் ,(வெந்நீர் கூட உண்டு ) ,சந்தனம் ,மற்றும் குங்குமப்பூ கலந்தே ,திருமஞ்சனம் நடக்கும் ...


    திருமஞ்சனத்துக்கு அடுத்த நாள் 'பெரிய திருப்பாவாடைத் தளிகை' பெரிய பெருமாள், சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, வாழைப்பழம்,மாங்காய், தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நிவேத்தியம் செய்த பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.


    இதற்கு "பெரிய திருப்பாவாடை "என்று பெயர் ...பெரிய திருப்பாவாடைத் தளிகை. நாள்தோறும் பெருமாளுக்கு நடைபெறும் நிவேதனங்களில், ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால், அதற்குப் பிராயச்சித்தமாக, இந்தப் "பெரிய தளிகை" அமுது செய்விக்கப்படுவதாக ஐதீகம்!.


    நாளை ஒருநாள் மட்டுமே "பெரிய திருமஞ்சனத்தன்று "மட்டுமே ,அரங்கனின் மூலஸ்தானத்தில்,உள்ள சுவர்களில் ,சந்தனம் பூசப்படும் ..வருடம் முழுவதும் செய்யப்படும் ,ஆரத்தி ,வருடம் முழுவதும் அணையாமல் ,சுடர்கின்ற தீப ஒளியின் ,படிமங்கள் அரங்கனின் மூலஸ்தானத்தில் ,படர்ந்து இருக்கும் ,,அதை இன்று ஒருநாள் மட்டுமே சுத்தம் செய்து ,சுவர்களின் சந்தனத்தால் ,பூச்சு பூசப்படும் ...


    அதோடு மட்டும் அல்லாமல் ,அரங்கனின் திருமேனியில் வருடம் முழுவதும் ,சாற்றப்பட்டு இருந்த ,தங்க கவசங்களும் ,வைர ,வைடூரிய ,மாணிக்க மகுடங்களும் ,அவனின் பாதுகைகளும் ,இந்த "பெரிய திருமஞ்சனத்தின் "பொது மட்டுமே ,பொதுமக்களின் முன்பு ,பார்வைக்கு வைக்கப் பட்டு ,தங்க நகைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி துவங்கும். மாலை 4.30 மணிக்கு சுத்தம் செய்யப்பட்ட அங்கிகள், தங்க நகைகள் பழுது பார்த்து, எடைகள் சரிபார்க்கப்பட்டு,மீண்டும் அரங்கனின் திருமேனியிலும்,உபய நாய்ச்சிமார்களின் திருமேனியில் சாற்றப்படும்.


    பெரிய பெருமாளின் ,பெரிய திருமஞ்சனம் பற்றி ,இந்த சிறிய துகள் (மாலு ஸ்ரீரங்கம் ),எழுதியதில்,தவறு இருந்தால் பொறுத்து அருளவேனும் ..
Working...
X