Announcement

Collapse
No announcement yet.

From one knowledge you get everything else

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • From one knowledge you get everything else

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    வேதார்த்த சங்க்ரஹம்-9
    அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.
    எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?
    ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.
    குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,
    .இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.
    பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.
    இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,
    எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை
    .
    .பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.
    எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.
    பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.
    எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.
Working...
X