Announcement

Collapse
No announcement yet.

Poem on Periyavaa by Vaali

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Poem on Periyavaa by Vaali

    கவிஞர் வாலி அவர்கள் ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய ஒரு கவிதை.
    ஆயிரத்து இருநூறு
    ஆண்டுகள் முன்னம்
    ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
    அழகு மதலை; அவள் –
    அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
    ஆதிமுதலை; அதைத்தான்
    ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
    ஆற்று முதலை!
    காலடி பிறந்தவன்
    காலடி பதிந்திடாத
    நாலடி — இந்த
    நாட்டினில் இல்லை; திரு –
    மாலடி போற்றி — அவன்
    மொழிந்த பஜகோவிந்தம் போல்
    நூலடியொன்று — பிற
    நூலோர் ஏட்டினில் இல்லை !
    'அவன்தான் –
    இவன்;
    இவன்தான்
    அவன்!'
    எனும்படி — இங்கு
    எழுந்தருளினான்….
    காஞ்சி –
    காமகோடி — ஸ்ரீ
    சந்திர சேகரேந்திர –
    சரஸ்வதி; அந்த
    இமயநதிக்கு இணையான — ஒரு
    சமய நதி!
    துவராடை தரித்த
    திருவாசகத்தை; இரு
    கால்கொண்டு — ஒற்றைக்
    கோல்கொண்டு — இப்
    படிமிசை உலவிய — அத்வைதப்
    பெருவாசகத்தை;
    கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
    வெயிலை; மன்பதையின் –
    அவத்தைப் போக்க
    பவத்தைப் போக்க –
    தவத்தைப் புரிந்த சிவத்தை;
    அரிசிப் பொறி
    அருந்தி –
    அஞ்சு பொறி
    அவித்த….
    நுழைபுலம் மிக்க — ஒரு
    நூற்றாண்டுக் கிழவனை; நம்
    நெஞ்சை — ஒரு
    நஞ்சை நிலமாக்க — விழி
    நாஞ்சில் கொண்டு
    நாளும் உழுத உழவனை;
    அரசுமுதல் ஆண்டிவரை –
    அறியும் 'பெரியவாள்' என்று;
    அழுக்கு மனங்களில்
    அப்பிக் கிடக்கும் –
    அவலப் புதர்களை
    அரியும் பெரிய வாள் என்று!
    – கவிஞர் வாலி
Working...
X