Announcement

Collapse
No announcement yet.

5 paapas to be avoided by disciples

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5 paapas to be avoided by disciples

    Rajagopal Srinivasan


    சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள்.


    (பூர்ண வித்யா - என்ற நூலில் இருந்து தட்டச்சு செய்தது)


    பல சிஷ்யர்கள் அனேக சமயங்களில் குருவிடம் செயல்படும் தன்மை, பழகும் விதம், பேசுகின்ற முறை, தனித்து சொல்கின்ற சொற்கள், கேட்கின்ற விதம் முதலியன ஸத்சிஷ்யர்களுக்கு உகந்தவைகளாக காணப்படவில்லை.


    அதலின் சிஷ்யர்கள் விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன:


    1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்
    2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்
    3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்
    4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்
    5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்
    6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்
    7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்
    8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்
    9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்
    10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்
    11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்
    12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்
    13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்
    14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்
    15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்
    16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்
    17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்
    18. (குரு உறவினாக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்
    19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்
    20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்
    21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்
    22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்
    23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்
    24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்
    25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்
    26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்
    27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை
    28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்
Working...
X