Announcement

Collapse
No announcement yet.

Thirukannamangai temple,Tiruvarur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukannamangai temple,Tiruvarur

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*

    *தலம்.119.*
    பாடல் பெற்ற சிவ தல தொடர்.
    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    *கரவீரம். பிரம்மபுரீஸ்வரர்*

    *அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம் - திருக்கண்ணமங்கை , திருவாரூர்*


    *இறைவன்:* கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்)


    *இறைவி:*: பிரத்தியட்சமின்னம்மை.


    *தல விருட்சம்:* செவ்வரளி, அலரி.


    *தீர்த்தம்:*அனவரத தீர்த்தம்.


    *ஆகமம்/பூஜை:* காரண ஆகமம்


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *புராண பெயர்:* திருக்கரவீரம், கரையபுரம்


    *ஊர்:* கரைவீரம்


    *தேவாரம் பாடியவர்கள்:* அப்பர், சம்பந்தர், சுந்தரர்.


    தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இத்தலம் தொன்னூற்று ஒன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *திருவிழா:*
    மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.


    மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்


    *ஆலய திறப்பு நேரம்:*
    காலை 6.00 மணி முதல 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்


    *இருப்பிடம்:*
    திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் பத்து கி.மீ. தொலைவில் *'வடகண்டம்'* நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் கரவீரநாதர் ஆலயத்தை அடையலாம்


    *பெயர்க்காரணம்:*
    கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர்.


    பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பஜார்ணப்பிரான் இறைவி பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது.


    பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார்.


    இத்தல இறைவனை பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு


    *தல விநாயகர்:**
    இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


    *பிரார்த்தனை:*
    அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.


    இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.


    *நேர்த்திக்கடன்:*
    பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.


    *தல அருமை:*
    சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார்.


    கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் வேண்டும் வரம் கேள்,'என்றார். அதற்கு முனிவர், இறைவா! நான் இறந்த பின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள் என்றார்.


    இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.


    *கரவீரம்* என்பதற்கு பொன்னலரி என்பது பொருள். அலரியைத்தலமரமாக கொண்டதால் இத்தலம் *கரவீரம்* எனப்படுகிறது.


    திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார்.


    எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.


    *கழுதைக்கு முக்தி:* சிவபெருமானின் தரிசனம் வேண்டி ஒரு கழுதை இத்தலத்தில் தவம் இருந்தது.


    தரிசனம் கிடைக்காத வருத்தத்தில் நாகூர் வரை நடந்து சென்று கடலில் விழ இருந்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்க, கழுதை திரும்பி பார்த்த போது இத்தலத்தில் இருந்தபடியே இறைவன் தரிசனம் தந்து, மோட்சம் அளித்தார் என புராணம் கூறுகிறது.


    எனவே தான் சிவனின் எதிரில் கொடிமரமும், நாகூர் வரை வீடுகளும் கிடையாது.


    இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.


    *தல பெருமை:*
    முன்னொரு காலத்தில் தேவகன்னியர்கள் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம்,......


    "தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவனாக உள்ளார். குழந்தைகளும் உள்ளது. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்,'என வேண்டினர். அதற்கு பார்வதி தேவி சிவனிடம், "இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும, என வேண்டினாள்.


    உடனே சிவபெருமான் காவிரியின் தென்கரையில் தானே லிங்கம் அமைத்து கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்யக் கூறினார்.


    தேவகன்னியரும் அதன்படி செய்து பலனடைந்தனர் என தலபுராணம் கூறுகிறது. எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து இங்குள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.


    *கழுதைக்குத் தெரிந்த கற்பூர வாசனை!:*
    நினைத்தாலே இனிக்கும் சோழ நன்நாட்டில் ஓடம் போக்கியாற்றின் கரையில் அமைந்த அதியற்புதமான திருத்தலம் திருக்கரவீரம்.


    கரையபுரம் என்று தற்போது வழங்கப்படும் இப்பழமை வாய்ந்த பதி பிரம்மனாலும், கௌதம மகரிஷியாலும் வழிபடப் பெற்றதாகும்.


    பொன் அலரி மலர் வனமாகத் திகழ்ந்த [கரவீரம்= பொன் அலரி] இப்பதியின் ஈசனை அதர்வண வேதம் வழிபட்டுள்ளது.


    மகாலட்சுமியின் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தலமிது.


    *திருஞானசம்பந்தரால்:* பதிகம் பாடப் பெற்றது.


    *அப்பர் பெருமான்:*தனது திருத்தாண்டகத்தில் வைப்புத் தலமாகப் பாடப்பெற்ற தலமிது.


    *சம்பந்தர்-பதிகத்தில்:*
    இத்தலத்தைத் தொழுபவர்களுக்கு வினைகள் யாவும் ஒழியும். முன்வினை கெடும். துக்கம் தொலையும். இடர் நீங்கும், பாவம் அழியும் என்று பலவாறு புகழ்ந்துள்ளார்.


    இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருக்கோயில் எதிரேயுள்ள மண்டபத்தில் தங்கி, உரையாடியதாகக் கூறுவர்.


    நம் பாரத தேசத்தில் விளங்கும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று உஜ்ஜயினி.


    இங்கு மகாகாளராக இறைவன் அருள்புரிகிறார். நர்மதை நதிக்கரையில் மாகிஷ்மதி என்று ஒரு நாடு ஒன்று இருந்தது. சிம்மத்துவஜன் என்ற அரசன் இச்சிறிய நாட்டை ஆண்டு வந்தான்.


    ஒருசமயம் வேட்டையாட வெகு தொலைவு சென்றுவிட்டான். மிருகம் ஏதும் கிட்டாத நிலையில் அயர்ந்து போனான். இளைப்பாறிட எண்ணினான். அப்போது அங்கே ஓர் ஆசிரமத்தைப் பார்த்தான். அது பரத்வாஜரின் குடிலாகும். உடனே அக்குடிலுக்குள் நுழைந்தான்.


    தவத்தில் ஆழ்ந்திருந்த பரத்வாஜர் மகரிஷி. மன்னன் நுழைந்ததை அறியவில்லை. தன்னை அவர் மதிக்கவில்லை என்று நினைத்த சிம்மத்துவஜன் அவருடைய தவத்தை கலைத்தான்..


    தவம் கலைந்த மகரிஷி சினங்கொண்டு, "தவத்தை கலைக்கும் அளவிற்கு கர்வம் கொண்ட *நீ, கழுதையாக மாறி, நாடெல்லாம் சுற்றித் திரிவாயாக!''* என்று சாபம் தந்தார்.


    செங்கோல் ஏந்தி யானை மீது ஒய்யாரமாய் வலம் வந்த நான், கழுதை உருவில் குப்பை மேடுகளில் திரிவதா?' என்று கலங்கிய சிம்மத்துவஜன் முனிவரிடம் மன்னிப்போடு பரிகாரமும் வேண்டினான். *''ஓங்கார ஒலி கேட்கும் இடமெல்லாம் வலம் வந்து, இறுதியில் ருத்திராட்ச மூட்டையைச் சுமந்து, காவிரி பாயும் நாட்டில் செல்லும்போது 'பொன் அலரி' பூத்திருக்கும் தலம் ஒன்றில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்''* என அருளினார்,


    பரத்வாஜ மாமுனிவர். நர்மதை நதி எங்கே, காவிரி தேசம் எங்கே, என மனம் நொந்த சிம்மத்துவஜன் திக்கு திசை தெரியாமல், கழுதை வடிவில் சுற்றிவந்தான்.


    வெண்கல பாத்திர வியாபாரி ஒருவன் தனது பாத்திரங்களைச் சுமக்க கழுதை உதவிடுமே என்றெண்ணி, இக்கழுதையைக் கட்டி இழுத்துக் கொண்டான்!


    வெண்கல பாத்திர மூட்டையைச் சுமந்தபடி பல ஊர்கள் சுற்றி வியாபாரம் செய்தான். ஆங்காங்கே பல தெய்வீகத் தலங்களில் ஓங்கார ஒலியினைக் கேட்டது கழுதை.


    நாடுகள் பல சென்று தன் வியாபாரத்தை முடித்த வியாபாரி, இனி இக்கழுதையால் பயனில்லை என்று கருதி, அதை விரட்டியடித்தான்.


    பின்னர், கௌரீமாயூரம் என்ற மாயவரத்தை (மயிலாடுதுறை) அடைந்து, காவிரியில் நீராடி, புத்துணர்வு பெற்றது கழுதை. மீண்டும் வேறொரு வியாபாரி ருத்திராட்ச மூட்டையினை அக்கழுதை மீது ஏற்றினான். அதனால் புதுத் தெம்பு ஏற்பட்டு, அவ்வியாபாரியை விட்டு அது ஓடியது.


    அவ்வாறு பன்னிரண்டு நாட்கள் ஓடி, கடைசியாக ஓடம் போக்கியாற்றின், கரையில் செவ்வரளி மனங்கமழும் கரவீரம் என்னும் இத்திருத்தலத்தில் மூட்டையை தள்ளிவிட்டு, அங்கிருந்த அனவரத தீர்த்தத்தில் மூழ்கியது.


    இப்போது சாபம் நீங்கப்பெற்று சுய உருவில் எழுந்தான் சிம்மத்துவஜன்.


    சாபம் நீங்கிய நிலையில் இப்பதி ஈசனான கரவீரநாதரையும், பிரத்யக்ஷ மின்னம்மையையும் வணங்கி, வழிபட்டு நாடு திரும்பினான்.


    இவ்வாறு கழுதைக்குக்கூட கற்பூர வாசனையை அறிய வைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய உன்னதத்தலம் இத்தலம்.


    குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் நாற்புறமும் ஓங்கி உயர்ந்த மதில்கள் கொண்டு கிழக்கு முகமாகத் திகழ்கிறது.


    ராஜகோபுரம் இல்லை. விசாலமான உட்புற அமைப்பு. மையத்தில் முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றோடு இறைவன் சந்நதி பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது.


    கருவறை விமானம் அறுபத்தைந்து அடி உயரம் கொண்டது. அகண்ட மூலஸ்தானத்தில் ஆஜானுபாகுவாய் ஆறரையடி உயர லிங்கத் திருமேனி கொண்டு அடியவர்களை ஆட்கொள்கின்றார் திருக்கரவீரநாதர்.


    பிரம்மபுரீஸ்வரர் என்றும் இவரை அழைப்பர். சுவாமிக்கு வலப்புறம் கல்யாண கோலத்தில் அம்பிகை, தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறாள்.


    தான் சிவனுக்கு சரி நிகரானவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அம்பிகையின் உயரமும் ஆறடி! அழகிய நங்கை நிஜத்தில் நிற்பது போன்ற வசீகரம். பிரத்யக்ஷ மின்னம்மை என்கிற பெயர் தாங்கி பிரகாசிக்கின்றாள்.


    அம்பாள் சந்நதியின் விமானமும் ஐம்பத்தைந்து அடி உயரத்தில் அற்புதமாக நிற்கிறது.


    கோஷ்ட தெய்வங்கள் முறையே அணிவகுக்க தலவிருட்சமான அலரிச் செடிகள் மேற்குப்புறத்தில் மணம் வீசுகின்றன.


    விநாயகர், ராஜகணபதியாக வீற்றருள்கின்றார்.


    தீராத வெப்பு நோயால் அவதியுற்ற குறுநில மன்னன் ஒருவன் இத்தலத்தினில் நீராடி கரவீரநாதரை வணங்கி விமோசனம் பெற்றான்.


    இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் நடராஜர் சிலை ஒன்றை வடித்து, இத்தலத்திற்கு வழங்கினான்.


    தற்போது பாதுகாப்பு கருதி இச்சிலையை சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.


    திருமணமாகாதப் பெண்கள் அமாவாசை தினத்தன்று அலரிச்செடிக்கு நீர் வார்த்து, மூன்று முறை இச்செடியை வலம் வந்து வணங்குகின்றனர். பின்னர், அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி, தமது ஜாதகத்தை அம்மனின் திருப்பாதங்களில் வைத்து, அர்ச்சனை செய்கின்றனர்.


    இதன்மூலம் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு, தூங்காமல் அழுதுகொண்டே இருந்தால், இங்கு வந்து செவ்வரளிச் செடிக்கு மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாள் பாதத்தில் மூன்று மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும்.


    பிறகு அந்த மஞ்சளைத் தண்ணீரில் கரைத்து, அந்த நீரினில் குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும்.


    *கோவில் அமைப்பு:*
    நான்கு புறமும் மதிற்சுவருடனும், ஒரு முகப்பு வாயிலுடனும் ஆலயம் அமைந்திருந்தது.


    கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தமான அனவரத தீர்த்தத்தைக் காணப்பெற்றோம்.


    தீர்த்த்தை எடுத்து சிரசிலிட்டு தொழுது கொண்டோம். திரும்ப கோயிலின் முகப்பு வாயிலை நோக்கி நடந்தோம்.


    முகப்பு வாயிலை நாம் கடந்ததும், அங்கே விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் பரவிக் கிடக்க உள் புகுந்தோம்.


    நேரே முதலில் பலிபீடத்தருகே வந்து நின்றோம். இதன் முன் நம் ஆணவ மலத்தை வீசி எரித்துக் கொள்ள அனுமதித்து வணங்கிக் கொண்டோம்.


    அடுத்ததாக நந்தி மண்டபத்து முன் வந்து, வழக்கம்போல இறைவனைக் காணும் பேற்றை அருளுமாறு விண்ணப்பித்து வணங்கிக் கொண்டோம்.


    சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்திருக்கும் பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கித் தொழுது நகர்ந்தோம்.


    நந்தி மண்டபத்தை அடுத்ததாக ஒரு சிறிய கோபுரம் இருந்தது.


    அக்கோபுர வாயில் வழியே உள்ளே சென்றோம். அது நேராக சுவாமி இருக்கும் கருவறை கிழக்கு நோக்கி அருளோட்சச்சிக் கொண்டு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.


    அவர் முன் கூனிக்குறுக நின்று ஆவலாந்தார்த்த அன்போடு சிரசுக்குமேல் கைகள் உயர்த்தி வணங்கிக் கொண்டோம்.


    தீபாராதனையைக் கண்டு வணங்கிக் கொண்டோம், பின் அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு திரும்பி நகர்ந்தோம்.


    இறைவன் சந்நிதிக்கு வலது புறமாக அம்பாள் சந்நிதியை காணப்பெற்றோம்.


    சுவாமி சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் அருகருகே ஒரே நேர்பார்த்திருக்கும் அமைப்புள்ள கோவில்களை திருமணக் கோலக் கோயில் என்று கூறுவார்கள்.


    அம்மையை கண்டு வணங்கி, உலகிலாரோடு நமக்கும் நல ஒழுங்கு இணக்கமாக வேண்டி பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.


    பின், அர்ச்சகர் தந்த குங்குமத்தை பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.


    அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் இருக்க ஒவ்வொருவரையும் கண்டு கைதொழுதோம்.


    இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி இருக்க கண்டு வணங்கிக் கொண்டோம்.


    நாங்கள் சென்றிருந்த சமயம், அமாவாசை நாளானதால், பெண்கள் இங்கிருக்கும் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள்.


    இப்படி செய்வதனால் அடுத்து வரும் அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு உருவாகும் என்பது நம்பிக்கை.


    ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் அமைந்திருக்கிறது.


    இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் மூன்று மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும்.


    பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோயும் குணமாகி. குழந்தைகளும் நோயின்றி வாழ்வார்கள என்பது நடைமுறையிலுள்ள உண்மையாம்.


    திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார்.


    சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.


    *சம்பந்தர் பதிகம்:*
    அரியும் நம்வினை யுள்ளன ஆசற வரிகொள் மாமணி போல் கண்டம் கரியவன் திகழும் கரவீரத்து எம் பெரியவன் கழல் பேணவே.


    தங்குமோ வினை தாழ்சடை மேலவன் திங்களோடு உன் சூடிய கங்கையாள் திகழும் கரவீரத்து எம் சங்கரன் கழல் சாரவே.


    ஏதம் வந்து அடையா இனி நல்லன பூதம் பல்படை ஆக்கிய காதலான் திகழும் கரவீரத்து எம் நாதன் பாதம் நணுகவே.


    பறையும் நம்வினை உள்ளன பாழ்பட மறையும் மாமணி போல் கண்டம் கறையவன் திகழும் கரவீரத்து எம் இறையவன் கழல் ஏத்தவே.


    பண்ணினார் மறை பாடலன் ஆடலன் விண்ணினார் மதில் எய்தமுக் கண்ணினான் உறையும் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே.


    நிழலின் ஆர்மதி சூடிய நீள்சடை அழலினார் அனல் ஏந்திய கழலினார் உறையும் கரவீரத்தைத் தொழவல்லார்க்கு இல்லை துக்கமே.


    வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் கண்டனார் உறையுப் கரவீரத்துத் தொண்டர் மேல் துயர் தூரமே.


    புனல் இலங்கையர்கோன் முடி பத்து இறச் சின வல் ஆண்மை செகுத்தவன் கனலவன் உறைகின்ற கரவீரம் எனவல்லார்க்கு இடர் இல்லையே.


    வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தெள்ளத் தீத்திரள் ஆகிய கள்ளத்தான் உறையும் கரவீரத்தை உள்ளத் தான் வினை ஓயுமே.


    செடிய அமண்ணொடு சீவரத்தார் அவர் கொடிய வெவ்வுரை கொள்ளன்மின் கடியவன் உறைகின்ற கரவீரத்து அடியவர்க்கு இல்லை அல்லலே.


    வீடிலான் விளங்கும் கரவீரத்து எம் சேடன் மேல் கசிவால் தமிழ் நாடு ஞானசம்பந்தன சொல் இவை பாடுவார்க்கு இல்லை பாவமே.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X