Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    156.மாதர்வசம்


    தானதன தானத் தனதான


    மாதர்வச மாயுற் றுழல்வாரும்
    மாதவமெ ணாமற் றிரிவாரும்
    தீதகல வோதிப் பணியாரும்
    தீநரக மீதிற் றிகழ்வாரே
    நாதவொளி யேநற் குணசீலா
    நாரியிரு வோரைப் புணர்வேலா
    சோதிசிவ ஞானக் குமரேசா
    தோமில் கதிர்காமப் பெருமாளே.

    - 156 கதிர்காமம்



    பதம் பிரித்தல்


    மாதர் வசம் உற்று உழல்வோரும்
    மா தவம் எ(ண்)ணாமல் திரிவோரும்


    மாதர் வசம் = பெண்கள் வசப்பட்டு. உழல்வாரும் = திரிபவர்களும்மா தவம் எண்ணாமல் = நல்ல தவச் செயல்களை நினைக்காமல்திரிவாரும் = திரிபவர்களும்.


    தீது அகல ஓதி பணியாரும்
    தீ நரகம் மீதில் திகழ்வாரே

    தீது அகல= தீமைகள் விலகும்படி ஓதி= (நல்ல நூல்களை) ஓதிபணியாரும் = பணியாதவர்களும் தீ நரகம் மீதில் = கொடிய நரகத்தில் திகழ்வாரே= விளக்கமுற்று கிடப்பார்கள்.


    நாத ஒளியே நல் குண சீலா
    நாரியர் இருவரை புணர் வேலா


    நாத = நாதனே ஒளியே=சுடரே நல் குண் சீலா=நற்குணப் பரிசுத்தனேநாரியர் இருவரை = (வள்ளி - தெய்வயானை ஆகிய) பெண்கள் இருவரையும் புணர் வேலா = சேரும் வேலனே.


    சோதி சிவ ஞான குமரேசா
    தோம் இல் கதிர்காம பெருமாளே.


    சோதி = சோதியே சிவ ஞானக் குமரேசா = சிவஞானக் குமரேசனேதோம் இல் = குற்றம் இல்லாத கதிர்காமப் பெருமாளே =கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
    .





    ஒப்புக


    நாத ஒளியே...
    ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே) ... . திருநாவுக்கரசர் தேவாரம்
    நாதவிந்து கலாதி நமோநம) ... திருப்புகழ், நாதவிந்து
Working...
X