Announcement

Collapse
No announcement yet.

Kula deivam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kula deivam

    குலதெய்வங்கள் என்றால் என்ன ..?


    அவர்களின் பெருமை என்ன...?


    குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?


    நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.


    தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
    குலதெய்வம் ஆகும்.


    குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
    மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்
    பெற்று தரும்.


    குலதெய்வம் பெரும்பாலும் சிறு
    தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று
    அலட்சியப் படுத்தக்கூடாது.
    அதன் சக்தியை அளவிடமுடியாது...
    எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று
    தான் உயிரை எடுக்கமுடியும்.


    குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
    தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்
    ஆகும்.


    அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை
    கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.


    எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்*
    என்று சிறப்புடன்
    அழைக்கப்படுகின்றன.
    குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.


    இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
    பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?


    நம் முன்னோர்கள்...
    அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
    வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.


    இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய
    ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.


    அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
    இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.


    இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்
    சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்
    நிற்கிறோம்.


    இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
    கட்டியிருக்கலாம்...
    இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
    நாம் அங்கே போய் நின்று...
    அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை
    தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.


    இது எத்தனை தூரப்பார்வையோடு,
    வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...
    விஞ்ஞான முறையில் யோசித்தால்...
    ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு
    செய்வது ஆணே...
    ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
    க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.


    இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும்
    அறிவோம்.


    இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
    தந்தையின் குரோமோ சோமே முடிவு
    செய்கிறது.
    தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.


    தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள்
    உள்ளன.


    ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண்
    குழந்தையும்...
    இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது.
    என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.


    ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
    தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
    வருவதில்லை.
    ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம்
    மீண்டும் வழி வழியாக வளர்கிறது...


    வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,
    முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
    கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
    எனத்தொடர்ந்து...
    இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
    தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.


    இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
    குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
    பெண் குழந்தைகளை
    குல விளக்காக காத்தனர்...
    பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட
    வாய்ப்பு இல்லை...
    ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே
    பலவீனமான ஒன்று.
    மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
    க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று
    கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
    கொண்டிருக்கிறதாம்.
    எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
    அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்
    மேலும்
    பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள்
    தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
    உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
    பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
    தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
    படைத்திருக்கிறான்.


    பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
    புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
    திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
    வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்
    உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.


    பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின்
    குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
    அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
    வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
    இல்லாமல் வாழ வழிவகுக்கும்.


    இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு
    வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின்
    குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை
    மேற்கொள்ளுங்கள்.
    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற
    வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
    குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்
    அருள் கிடைக்காது.


    குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை
    என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
    யாகம் செய்தாலும்,
    ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
    தருமா என்பது சந்தேகம்தான்.


    எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
    (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.


    அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
    அக்கோவிலுக்கு உதவுங்கள்.


    வாழ்க வளமுடன்...
    வளா்க நலமுடன்
Working...
X