Announcement

Collapse
No announcement yet.

Tatvamasi explanation

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tatvamasi explanation

    Courtesyr.Smt.Saroja Ramanujam
    தத் தவம் அஸி விளக்கம்
    ஸ்ரீபாஷ்யத்தில் மேற்கொண்டு தெரிந்துகொள்ளும் முன் தத் தவம் அஸிஎன்ற வாக்கியத்தின் விளக்கத்தைப் பார்க்கலாம் . இதைத் தெரிந்துகொண்டால் பின்னால் வரும் சூத்திரங்களை நன்றாகப் புரிந்துகொள்ள இயலும்.
    தத் தவம் அஸி
    இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது. இதை நாம் வேதார்த்த ஸங்க்ரஹம் பற்றிய பதிவில் கொஞ்சம் தெரிந்துகொண்டோம்.
    இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து
    உத்தாலகர் கேட்கிறார்.
    எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,
    அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். "ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்." சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் "தத் தவம் அஸி" நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.
    தந்தை "எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா," என்று கேட்க ச்வேதகேது " அது எப்படி சாத்தியம் " என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.
    யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத்
    களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.
    வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
    வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.
    இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.
    ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.
    "ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்'
    சௌம்ய- அன்பு மகனே
    அக்ரே – முதலில்
    இதம்- இந்த பிரபஞ்சம்
    ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே
    ஆஸீத்- இருந்தது
    (ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
    ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது
    அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை
    அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.
    சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?
    தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.
    அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.
    அங்கே 'தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,'
    அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.
    அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
    அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது.
    'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)
    இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.'
    இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.
    \அடுத்து சாந்தோக்யத்தில் வருவது,
    ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.
    இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.
    எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
    ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி "ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ" என்று முடிக்கிறார்.
    1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.
    அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.
    அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.


    பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை.
    மற்ற உதாரணங்கள் அடுத்த பதிவில்.
    தத் தவம் அஸி விளக்கம் -2
    2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.
    3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.
    அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.
    ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.
    ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்
    4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,
    5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்
    தத்வமஸி விளக்கம் -3
    6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.
    அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.
    அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.
    இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.
    7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் "என்னைத்தெரிகிறதா ," என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?
    உத்தாலகர் சொல்கிறார்.
    ' எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா."
    இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.
    இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.
    8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கையில் வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.
    இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது.
    இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.
    குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.
Working...
X