Announcement

Collapse
No announcement yet.

Sree bhashyam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhashyam

    Courtesy:Smt.Saroja Ramanujam
    Entire part is available here in English: https://thiruvonum.wordpress.com/201...oja-ramanujam/
    Tamil portion is available here: https://thiruvonum.wordpress.com/201...E%BE%E0%AE%AE/
    ஸ்ரீபாஷ்யம் முகவுரை..
    வேதாந்த சூத்ரம் என்றால் என்ன?
    இவை வேத வியாசரால் உபநிஷத் கூறுவது பிரம்மத்தை பற்றியே என்று நிலை நிறுத்துவதற்காக சொல்லப் பட்டது.
    இதை மறுக்கும் வேதாந்தம் தவிர பிற மதங்களாவன பெளத்த ஜைனம், சாங்கியம் நியாயம் முதலியன. இவைகளில் சாங்கியம் ஞாயம் இவை இரண்டும் வேதத்தை ஆதரித்தாலும் பிரம்மம், ஜீவன், ஜகத் இவைகளைப்பற்றி வேறுவிதமான கருத்தை வலியுருத்துகின்றன . பௌத்தமும் ஜைனமும் வேதத்தையே ஒத்துக்கொள்வதில்லை.
    இவைகளின் வாதங்களை முறியடித்து பிரம்மம்தான் உபநிஷத் வாக்கியங்களின் முக்கிய கருத்து என்பதை நிலை நாட்டுவதும் இல்லாமல் பிரம்மத்திடமிருந்துதான் உலகம் தோன்றியது என்பதையும் பிரம்ம சூத்ரம் விளக்குகிறது.
    சங்கரர் ராமானுஜர் இவர்களுடைய பாஷ்யங்கள் பிரம்ம சூத்ரத்தின் முக்கிய விளக்கங்களை ஒட்டியே இருந்தபோதிலும் அவரவர் சித்தாந்தத்தின்படி ஒரு சில விஷயங்களில் வேறுபடுகின்றன.
    முக்கியமாக அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வதத்துக்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளை ஆராய்ந்து பிறகு மற்ற மதங்களின் வேறுபாடுகளையும் பார்ப்போம்.
    ஜீவன் பிரம்மம் ஜகத் இவைகளைப் பற்றிய கொள்கைகள் தான் இந்த வேற்றுமைக்குக் காரணம்.
    ஸ்ரீ பாஷ்யம் முகவுரை தொடர்கிறது- இரண்டாம் பாகம்
    அத்வைதம்
    ப்ரஹ்மம் சத்யம்- ப்ரஹமமே உண்மை.
    ஜகத் மித்யா- உலகம் ஒரு மாயத் தோற்றம்.
    ஜீவோ ப்ஹ்ம்மைவ நாபர: -ஜீவன் ப்ர்ஹமத்தைத் தவிர வேறு இல்லை.
    பிரம்மம் நிர்குணம் நிர்விசேஷ சின்மாத்ரம்- குணங்களற்ற வேறுபடுத்தமுடியாத ஞானமே.
    மாயை அல்லது அவித்யை என்பது தோற்றுவிக்கப் படாத (அனாதியான) நேர்மறையான (பாசிடிவ்) வஸ்து.
    பிரம்மம் உலகைப் படைத்தது எப்படி என்றால் ஒரு கயிறு பாம்பைப் படைத்தது போல.
    அதாவது கயிறைப் பாம்பென்று எண்ணுவது போல.
    விசிஷ்டாத்வைதம்
    ப்ரஹ்மம், ஜீவன், ஜகத் மூன்றும் உண்மைத் தோற்றமே.
    சேதனம் அசேதனம் ஆகிய இவை கொண்ட உலகம் ஈஸ்வரனின் சரீரம்.
    ப்ரஹ்ம ஜீவ ஐக்கியம் என்பது உயிருக்கும் சரீரத்துக்கும் உள்ளதைப்போன்றது.
    பிரம்மம் என்பது அனந்த கல்யாண குணங்களுடன் கூடிய நாராயணனே.
    மாயை என்பது ஈஸ்வர சக்தி . அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது.
    \பிரம்மமே உலகின் காரணம். உலகம் அதனால் செய்யப்பட காரியம்
    . மண்ணிலிருந்து குடம் போல. மண் எப்படி உண்மையோ அதே போல குடமும் உண்மை. காரியம் என்பது காரணத்தின் இன்னொரு உருவமே
    உலகம் மாயை என்பதை அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்த்துவிட்டு பிறகு விசிஷ்டத்வைத கொள்கையை பார்க்கலாம்.
    உலகம் மாயை என்றால் உலகம் என்று ஒன்று இல்லவே இல்லையா?. ஆகாசத்தாமரை , முயல் கொம்பு இவை போன்ற இல்லவே இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஒன்றா? மந்திரவாதியின் மாயாஜாலம் மாதிரியா?
    அத்வைதம் சொல்வது என்னவென்றால் அது அப்படி அல்ல. இருக்கும் பொருளை வேறு மாதிரியாகக் காண்பது.
    அரை இருட்டில் ஒரு கயிறைப்பார்த்து பாம்பென்று நினைக்கிறோம். அது இல்லாத வஸ்து அன்று. ஆனால் அது வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கிறது.
    இதை வ்யாவஹாரிகக சத்தியம் என்று அத்வைதம் சொல்லுகிறது, அதாவது நடைமுறையில் உலகம் பொய் அல்ல. ஆனால் எல்லாம் பிரம்மமே என்ற உண்மையை நம் அவித்யை மறைப்பதனால் அது பிரம்மமாகத் தோன்றுவதில்லை. உலகமாகத் தோன்றுகிறது.
    பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் அதாவது எக்காலத்திலும் உள்ள உண்மை. அதைத்தவிர உலகம் என்பது மந்திரவாதி காட்டுவது மாதிரி உருவெளித் தோற்றமோ இல்லை ஆகாசத்தாமரை , முயல் கொம்பு என்ற இல்லவே இல்லாத வஸ்துவோ அல்ல.
    இது எதனால் ஏற்படுகிறது.? இதற்கு விடை அத்தியாசம் என்று அத்வைதம் கூறுகிறது,. அதாவது ஒன்றின் குணங்களை அறியாமையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
    இது error perception அல்லது தவறான பார்வை என்பது .
    அத்தியாசம் என்பது என்ன?
    அதாவது ஒன்றின் குணங்களை தவறானபார்வையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
    தவறான பார்வை எப்படி ஏற்படுகிறது? ஒரு கயிறைப் பார்க்கிறோம், சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பாம்புபோலத் தோன்றுகிறது. இது தவறான பார்வை அல்லது erraneous perception. அது ஏன் பாம்புபோலத் தோன்றவேண்டும்? ஏனென்றால் நாம் பாம்பை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
    ஒரு பொருளைப் பார்க்கின்றபோது அது என்னவென்றே தெரியவில்லை என்றால் அது புரியாத பார்வை (non-apprehension).
    அதை வேறு ஒன்றாகப புரிந்து கொள்வது தவறான பார்வை(misapprehension or erraneous perception)
    என்னவென்று தெரியாத ஒன்றைப் பார்க்கும்போது மனித மனம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றை அதனுடன் பொருத்திப் பார்த்துத் தவறாகப் புரிந்துகொள்கிறது. பாம்பின் குணாதிசயங்களை கயிற்றின்மேல் ஏற்றி அதைப பாம்பாகப் பார்ப்பதுதான் அத்தியாசம்.
    அத்வைதம் கூறுவது என்னவென்றால் கயிறு பாம்பாகத் தோன்றும்போது அது நிஜம் . ஆனால் அது பாம்பல்ல கயிறு என்று அறியும்போது அது பொய்.
    அதே போல பிரம்மத்தை உலகமாகக் காணும்போது அது நிஜம் . ஆனால் பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் எல்லாம் பிரம்மம் என்ற நிலையில் உலகம் உண்மை அல்ல என்ற தெளிவு ஏற்படுகிறது.
    அதனால் பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் , அதாவது எப்போதும் உள்ள உண்மை, பிரபஞ்சம் வ்யாவ்ஹாரிக்க சத்யம் , நடைமுறையில் உண்மை என்று அத்வைதம் கூறுகிறது,
    பிரம்மஞானியும் உலகத்தை உணர்கிறான், அது மாயமாய் மறைவதில்லை. ஆனால் அது பிரம்மமே என்று அறிகிறான்.
    இதற்கு மாறாக விசிஷ்டாத்வைதம் கூறுவது பிரபஞ்சம் உண்மை பிரம்மமும் உண்மை . இதை சரீர சரீரி பாவம் மூலமாக ஸ்தாபிக்கிறார். பிரம்மமே பிரபஞ்சம் . இதைப் பிறகு விரிவாகக் காணலாம் .
    ஸ்ரீபாஷ்யம்- 1
    ஸ்ரீபாஷ்யம் வேதாந்த சூத்ரங்களின் விசிஷ்டாத்வைதபரமான விளக்கம்.
    இதன் சரித்திரப் பின்னணியை சிறிது ஆராய்வோம். வேதத்தை அனுசரித்து யாகயக்ஞாதிகள் செய்து அதன் பலனை அடைந்தவர்கள் மீமாம்சகர்கள் . இதைச் சொல்லும் பாகம் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டம் எனப்படும். வேதத்தின் பின் பகுதி உத்தர மீமாம்சம் அல்லது ஞானகாண்டம் எனப்படும். இதில்தான் உபநிஷத்துக்கள் காணப்படுகின்றன.
    மீமாம்சகர்களைப் பொறுத்தவரையில் வேதம் சொல்லுவது கர்மகாண்டம்தான். பின் பாகமான உபநிஷத்துக்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அந்த காலகட்டத்தில் யாகம் யக்ஞம் முதலியவை மட்டுமே வைதிக காரியங்கள் எனக் கருதப்பட்டு உயிர் பலி மிகுதியாக செய்யப்பட்டு வந்தபோது புத்தர் தோன்றினார் ,
    அவர் இறப்பிற்கு பிறகு எதுவும் இல்லை. எல்லாம் அநித்தியம். சுவர்க்கம் மறுபிறப்பு இவைகளுக்காக உயிர்ப்பலி கொடுப்பது பாவம் என்று அஹிம்சையை வலியுறுத்தினார். இந்த கொள்கை பரவினதும் மக்கள் யாகம் முதல்யவைகளை விட்டதுமல்லாமல் வேதத்தையே விட்டுவிட்டனர்.
    இந்த காலகட்டத்தில்தான் சங்கரர் தோன்றினார். உலகம் அநித்தியம்தான். ஆனால் நித்தியமான வஸ்து ஒன்று உண்டு. அதுதான் உபநிஷத்துக்களில் சொல்ல்ப்பட்டிருக்கிறது என்று பிரம்மத்தை நிலை நாட்டினார்.
    இவ்வாறு அந்தந்த சூழ்நிலையை ஒட்டியே வேதங்களின் உபதேசங்களை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல் தவறான மார்கத்தில் செல்வதைத்தடுக்க இறைவனே அனுப்பியவர்கள்தான் மகான்கள்.
    சங்கரர் காலத்திற்குப்பிறகு அவருடைய மித்யாவாதம் அவர்பின் வந்தவர்களால் பலத்து பக்தி என்பதே குறைந்துவிடுமோ என்ற சந்தர்ப்பத்தில் இறைவனின் தூதர்களாக ராமானுஜர் மத்வர் இவர்கள் தோன்றினர்.
    வடக்கிலும் பல பக்தர்கள் தோன்றி பக்தியை வளர்த்தனர்.
    வேதாந்தசூத்ரங்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஒழுங்குபடுத்தி சுருக்கமாக சொல்வதற்கு முற்படுகின்றன. சங்கரராலும் ராமானுஜராலும் எழுதப்பட்ட பாஷ்யங்கள் ப்ரம்ம்சூத்ரத்தைத் தழுவியே இருந்தாலும் பிரம்மம், ஜகத், ஜீவன் இவைகளின் நிலை பற்றிய விளக்கங்களில் அவரவர் கொள்கைக்கேற்ப மாறுபடுகின்றன.
    இப்போது நாம் ஸ்ரீபாஷ்யத்திற்குப் போவோமா ?
    மங்களச்லோகம்
    வேதார்த்த சங்க்ரஹத்தில் உள்ளபடி இதிலேயும் ராமானுஜர் நாராயணனை ஸ்ரீனிவாசன் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஸ்ரீனிவாசன் என்பது நாராயணனையும் குறிக்கும் அல்லவா?
    அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே
    வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே
    ஸ்ருதிசிரஸிவிதீப்தேபரஹ்மணி ஸ்ரீநிவாசே
    பவது மமபரஸ்மின் சேமுஷீ பக்திரூபா
    என் புத்தியானது பக்திரூபத்தில் வேதத்தின் முடிமேல் விளங்கி தன்னை வணங்கும் எவரையும் காக்கும் வ்ரதம் கொண்டு பிரபஞ்சத்தைப் படித்து, காத்து அழிக்கும் அலகிலா விளையாட்டுடைய பரபிரம்மஸ்வரூபமான நாராயணனிடத்தில் லயிக்கட்டும்.
    அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே- பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, , ஜன்ம , காத்தல், ஸ்தேம, அழித்தல், பங்க, இவை யாவையும் அவனுடைய லீலை. பங்காதி என்றால் அழித்தல் முதலிய என்பது பொருள். சிருஷ்டி, காத்தல் அழித்தல் மூன்றையும் சொல்லிய பிறகு எதற்கு ஒரு ஆதி பதம்?
    அதாவது அவன் பிரபஞ்சத்தை ப்படைத்தது மட்டும் அல்லாமல் அதன் உள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது.
    அகிலம் என்றால் சர்வம் என்று பொருள். ஆனால் அகிலம் என்ற சொல்லை கையாண்டது ஏனென்றால் அ என்ற அகாரம் மங்களகரமானதும் அல்லாமல் அகாரம் நாராயணனைக் குறிக்கிறது. ,
    பக்திரூபா சேமுஷீ- பக்தி ரூபமான புத்தி என்பதன் மூலம் பகவானை அடைய பக்தியே வழி என்று சொல்கிறார், புத்திபூர்வமான ஞானம் பக்திமூலம் வருவதாகும்.
    வேதத்தின் முடிமேல் விளங்கி, சுருதி சிரசி விதீப்த, அதாவது வேதத்தின் முடிபோன்றது உபநிஷத்,. அதனால் சொல்லப்படுபவன் நாராயணனே என்று பொருள்.
    பக்தியுடன் தன்னை ஆச்ரயிக்கும் உயிர்களை ரட்சிக்கும் வ்ரதத்தை உடையவன் வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்கிறார்.
    ராமாவதாரத்தில் விபீஷண சரணாகதி கட்டத்தில் இதை அவன் வாயிலிருந்தே கேட்டோம் அல்லவா?
    'சக்ருத் ஏவ பிரபன்னானாம் தவாஸ்மி இதி வாதினாம்
    அபயம் சர்வபூதானாம் ததாமி இதி வரதம் மம" என்று.
    சர்வபூதானாம் என்றால் எந்த உயிர்க்கும் என்று பொருள் கஜேந்த்ரனுக்கும் ஜடாயுவுக்கும் அருள் பாலிக்கவில்லையா?
    ஸுதர்சனசூரி ஸ்ரீபாஷ்ய விளக்கத்தில் கூறுகிறார், அவன் காப்பது மட்டும் அல்ல கடைசியில் மோக்ஷமே தந்துவிடுகிறான் என்று.
    அடுத்து சூத்திரங்களைப் பார்க்கலாம்.


    Sreebhashyam padha1 -part1 suthra 1
    பிரம்மசூத்ரம் நான்கு பெரிய பிரிவுகளைக்கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பகுதிகள். முதல் பிரிவின் முதல் பகுதியில் அத்வைதத்தின் கொள்கைகளும் அதற்கு விசிஷ்டாத்வைதத்தின் மறுப்புகளும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எளிதாகப் புரியும்படி இருப்பதனால் அதை அங்கு பார்ர்க்கலாம். முக்கியமான பேதங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
    பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
    சூத்ரம் 1
    अथ अथो ब्रह्म जिग्ज्ञासा
    அதாதோ பிரம்மஜிக்ஞாஸா
    (अथ) அத-அதன் பின்
    (अत) அத:-ஆகையால்
    (ब्रह्म जिग्ज्ञासा) பிரம்மஜிக்ஞாஸா- பிரம்மத்தைப்பற்றி அறியும் ஆவல் ஏற்படுகிறது.
    அத (अथ) என்னும் சொல் மங்களம், ஆரம்பம், பிறகு, இவைகளைக் குறிக்கும் சொல். இவ்விடத்தில் பிறகு என்ற அர்த்தத்திலேயே சொல்லப்பட்டிருந்தாலும் எதற்குப் பிறகு என்பது சங்கரராலும் ராமானுஜராலும் இரண்டு விதமாக விளக்கப்படுகிறது.
    சங்கரரின் விளக்கம்- அத- அதற்குப்பிறகு என்பது எதைக்குறிக்கிறது என்றால் பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஆத்மசாதனைக்கு அப்புறம் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்று பொருள் என்கிறார்.
    ஆத்மசாதனை என்றால் என்ன? இது சாதனா சம்பத் என்று கூறப்படும் நால்வகைப் பட்டது.
    நித்ய அநித்திய விவேகம்- அதாவது எது அழியாப் பொருள் எது அழியும் பொருள் என்ற பகுத்தறிவு.பிரம்மமே நித்தியம் பிரபஞ்சம் அநித்தியம் என்று அறிவது.
    இஹ அமுத்ர பல விராகம்- இந்த லோகத்திலும் மற்ற லோகங்களிலும் கிடைக்கக் கூடிய பலன்களில் ஆசையின்மை. அதாவது யாகயக்ஞாதிகள் மூலம் கிடிக்கக்கூடிய பலன்கள் அநித்தியம் என்று அவைகளில் பற்றின்மை.
    சமதமாதிசம்பத்- இந்த்ரியங்கள் மனம் இவற்றை வசப்படுத்துவது.
    முமுக்ஷுத்வம் – பிறப்பிறப்பற்ற முக்தி நிலையை அடைவதில் ஆர்வம்.
    இது உள்ளவர் எவராயினும் பிரம்மஞானத்திற்கு முயற்சிக்கலாம் என்பது சங்கரர் கூற்று. வேதத்தின் கர்மகாண்டத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கர்மகாண்டத்தை . அதாவது பூர்வமீமாம்சம் என்று சொல்லப்படும் வேதத்தின் முதல் பகுதியை கற்காமலேயே பிற்பகுதியான உபநிஷத் அல்லது ஞானகாண்டம் மூலம் பிரம்மஞானத்தை அடையலாம் என்று சொல்கிறார்.
    ராமானுஜரின் சித்தாந்தத்தின்படி வேதம் ஓர் முழுமையான பொருள் . அதனால் பூர்வபாகம் உத்தரபாகம் இரண்டுமே முக்கியமானவை,.
    அதனால் கர்ம காண்டத்தில் சொல்லி உள்ளபடி வேத கர்மாக்களை செய்து விட்டு அதன் பின் அவைகளால் அடையும் பலன் தாற்காலிகம் ஆனதே என்று உணர்ந்து பிரம்மத்தை அடையும் முயற்சியையே அத (பிறகு) என்ற சொல் குறிக்கிறது என்கிறார்.
    இந்த வேற்றுமை காரணமாகவே சன்யாசம் ஏற்கும் முறை அத்வைதத்திலும் விசிஷ்டாத்வைதத்திலும் மாறுபடுகிறது. பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராகவே சன்யாசம் கொள்வது அத்வைதம் கிருஹதாஸ்ரமத்திற்குப் பிறகு சன்யாசம் கொள்வது விசிஷ்டாத்வதம்
    .அத: ஆகையினால் என்பது இந்த மேற் சொன்ன அறிவினால் என்பது பொருள்.
    பிரம்மஜிக்ஞாஸா-பிரம்மத்தை அறியும் ஆவல் இது எப்படி ஏற்படுகிறது?
    வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றி வேதத்தில் சொல்லியுள்ள தர்மங்களை அனுசரித்து யாகயக்ஞாதிகளை செய்தபோதிலும் பிறப்பு இறப்பு இவை மாறி மாறி வருவதால் களைப்படிந்த ஜீவன் இதிலிருந்து மீள வழி உள்ளதா என எண்ணி வேதங்களின் முடிவுப்பகுதியான உபநிஷத்துக்களை நாடுகிறான்.
    அங்கு வேதாந்த வாக்கியங்கள் மூலம் பிரம்மத்தை அடைவதுதான் ஒரே வழி என்று தெரிந்து பிரம்மத்தைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறான்.
    இதுதான் இந்த சூத்ரத்தின் பொருள். சரி. பிரம்மம் என்றால் என்ன ? இது அடுத்த சூத்ரம்.
    ஸ்ரீபாஷ்யம் -
    ஜன்மாத்யஸ்ய யத:- சூத்ரம் 1.1.2 continued
    அத்வைதக் கொள்கையின்படி இந்த உலகம் உண்மையன்று. அப்படி இருக்கையில் இந்த சூத்திரத்தை சங்கரர் எவ்வாறு விளக்குகிறார் ?
    அத்வைதகோட்பாட்டின்படி உலகம் உண்மை அல்ல. அப்படி இருக்கையில் பிரம்மம் தான் உலகத்தைத் தோற்றுவிக்கிறது, அதைக் காக்கிறது பின்னர் அழிக்கிறது என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
    இதற்கு அத்வைதத்தின் பதில்.
    கயிறைப் பாம்பென்று நினைக்கிறோம். பாம்பைத் தோற்றுவித்தது எது?
    கயிறே அல்லவா? அது கயிறு என்று தெரிந்த பின் பாம்பு எங்கே போகிறது? கயிறிலேயே மறைகிறது. கயிறைப்பாம்பாகப் பார்க்கும் வரை அந்தப் பாம்பை எது நிலைக்கச் செய்கிறது?
    கயிறுதானே?
    இதே போல பிரம்மம்தான் உண்மை என்று தெரியும் வரை உலகம் உண்மையாகவே தெரிகிறது. அதனால் இந்த உலகம் தோன்றுவதற்குக் காரணம் பிரம்மம்தான் என்று ஆகிறதல்லவா? உலகத்தைக் காணும்போது அதை நிலை நிறுத்துவது பிரம்மம்தானே? பிறகு பிரம்மத்தை அறிந்த பிறகு இந்த உலகம் உண்மை அல்ல என்று தெரியும்போது அது பிரம்மமாகவே காண்கிறோம் . அப்போது அதை அழிப்பதும் பிரம்மம் தானே ?
    விசிஷ்டத்வைத சித்தாந்தத்தின் படி உலகம் பொய் அல்ல . பிரம்மத்தின் படிவம் (another form). எல்லாம் சூக்ஷ்ம வடிவில் இருப்பது பிரம்மத்தில். அதுவே ஸ்தூல வடிவத்தில் உலகமாக இருக்கிறது.
    அதனால் உலகம், ஜகத், ஜீவன் , ஈஸ்வரன் மூன்றும் பிரிக்கமுடியாதவை. பிரம்மம் உயிர் என்றால் ஜகத் ,ஜீவன் இவை அதன் உடல். எப்படி பானை என்பது சூக்ஷ்ம உருவத்தில் மண்ணாக இருக்கிறதோ அதுபோல.
    இங்கு திருமூலர் வாக்கைப் பார்ப்போம்.
    மரத்தில் மறைத்தது மாமதயானை மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். இங்கு யானையும் நிஜம் மரமும் நிஜம் .பார்வையில் தான் வேறுபாடு. அதே போல பார் முதல் பூதம் அதாவது இந்த பிரபஞ்சமும் நிஜம் பிரம்மனும் நிஜம்.
    பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றது ஆழ்வார் பார்வையில். நம் பார்வையில் வெற்றிலையும் சோறும் தான் படுகிறது, இதுதான் வித்தியாசம்.
    பிரம்மத்தை அறிய வேதமே பிரமாணம என்பதை அடுத்த சூத்ரத்தில் பார்க்கலாம்.
    ஸ்ரீபாஷ்யம் -1.1.3
    பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
    சூத்ரம். 3
    சாஸ்திரயோனித்வாத்-
    சாஸ்திரம் அதாவது உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி.
    இது எதற்கு என்றால் பிரம்மத்தை உபநிஷத்தில் சொல்லியதால்தான் அறிய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில்.
    ஒரு வஸ்துவைப் பற்றி அறிய சாதாரணமாக உலகத்தில் மூன்று முக்கிய வழிகள் உண்டு.
    ப்ரத்யக்ஷம்- நேரில் பார்த்து அறிவது.
    அதாவது நம் இந்த்ரியங்கள் மூலம், கண்ணால் பார்த்தோ, செவியால் கேட்டோ, நாசியால் நுகர்ந்தோ, நாக்கினால் ருசி பார்த்தோ அல்லது தொடு உணர்ச்சியாலோ தான் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவம் ஏற்படுகிறது.
    சுகம் துக்கம் என்பதைக் கூட இந்த்ரியங்கள் மூலம் உண்டான அனுபவத்தினால்தான் உணர்கிறோம். இவ்வாறு உணர்ச்சி எண்ணம் எல்லாமே ப்ரத்யக்ஷம் மூலம் தான் ஏற்படுகிறது.
    அனுமானம் – ஒன்றை அனுமானத்தினால் அறிவது.
    ஒரு மலையில் புகை காண்கிறோம் . உடனே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம். அதை பிரத்யக்ஷமாகப் பார்க்கவில்லை என்றாலும், நெருப்பில்லாமல் புகையுமா என்ற அனுமானத்தின் மூலம் அறிகிறோம் அல்லவா?
    உவமானம் – சில விஷயங்களை இதைப்போல் அது என்ற உவமானத்தின் மூலம் அறிகிறோம்.
    ஒருவன் புலியைப் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளலாம். அவன் காட்டுக்குப் போகிறான். அவனிடம் ஒரு நண்பன் 'அங்கே புலி இருக்கும் ஜாக்கிரதை" என்கிறான் அதற்கு அவன் புலி எப்படி இருக்கும் என்று கேட்டால் அது பூனயைப்போலதான் இருக்கும் ஆனால் பெரிதாக மஞ்சளாக இருக்கும் மேலே கோடுகள் இருக்கும் " என்று கூறுகிறான். உடனே அவன் காட்டில் அந்த மாதிரி ஒரு மிருகத்தைப் பார்த்தவுடன் இது புலிதான் என்று அறிந்து கொள்வான் அல்லவா?
    இதையெல்லாம் தாண்டிய நாலாவது அறியும் முறை தர்க சாஸ்திரப்படி சப்தம் அல்லது verbal testimony.
    சப்தம் என்பதை ஆப்த வாக்கியம் என்று சொல்வது உண்டு. அதாவது நமக்கு நம்பத்தகுந்த நபர் ஒன்று சொன்னால் அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறோம் . ஒருவன் வேற்றூரில் இருக்கும்போது அவன் நண்பனோ அல்லது நெருங்கிய உறவினரோ ஒரு செய்தி நல்லதோ அல்லதோ சொன்னால் அதை நம்பி உடனே செயல் படுவான் அல்லவா?
    நமக்கு மிகவும் நெருங்கிய நம்பத்தகுந்த ஆதாரம் வேதம்தானே?
    ஆதலால் பிரம்மத்தை அறிய ஆதாரமாயிருப்பது வேதம் அல்லது உபநிஷ என்பது இந்த சூத்ரத்தின் பொருள்.
    ஏனென்றால் பிரம்மத்தை ப்ரத்யக்ஷம் மூலம் அறியமுடியாது. இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனால்.
    அனுமானமும் உபயோகம் ஆகாது ஏனென்றால் அதைக் குறிக்கும் அடையாளம் நெருப்புக்கு புகையைப் போல எதுவும் கிடையாது.
    உபமானம் காட்ட முடியாது அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லாததால்.
    அதை அறிந்தவர் யாரும் நமக்கு அது என்ன என்பதைச் சொல்ல முடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். அதனால் வேதமே அதாவது உபநிஷதமே பிரம்மத்திற்கு பிரமாணம்.


    ஸ்ரீ பாஷ்யம்
    பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
    சூத்ரம் 5
    பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் என்று உபநிஷத் வாக்கியங்களின் மூலம் ஸ்தாபித்த பின்னர் உலகம் தோன்றுவதற்கு காரணம் ப்ரகருதி பிரம்மம் அல்ல என்ற ஸாங்கிய மதத்தின் கொள்கையை மறுப்பது இந்த சூத்ரம்.
    ஈக்ஷதே: ந அசப்தம்
    அதுவல்ல (அதாவது ப்ரக்ருதி) காரணம், ஏனென்றால் 'ஈக்ஷதே' அது ஸங்கல்பித்தது' என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி வேதத்திற்கு விரோதமானது.
    ஸாங்கிய சாஸ்திரத்தின்படி, உலகம் மூன்று குணங்களால் ஆனது. இந்த மூன்று குணங்கள் பிரகிருதி அல்லது இயற்கையில் உள்ளவை. இது எப்படி என்று தெரிந்துகொள்ள் சற்று ஸாங்கிய வாதத்தை பார்ப்போம்.
    அவர்கள் கூற்றுப்படி ஜீவன் என்பது புருஷன் இயற்கை என்பது பிரகிருதி. இரண்டும் உண்மையான தத்துவங்கள். பிரகிருதி உருவமற்றது அதில் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலக்காமல் தனித்தனியாக உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை.
    பிறகு இவை கலந்து மஹத் அல்லது புத்தி என்ற தத்துவம் உண்டாகிறது. புத்தியில் இருந்து அஹங்காரம் தோன்றி அது சாத்விகம், ராஜஸிகம் தாமஸிகம் என்று மூன்றுவகையாகப் பிரிகிறது. சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்த்ரியங்கள் மனம் இவை தோன்றுகின்றன. தாமஸிக அஹங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன. ராஜச அஹங்காரம் இவை இரண்டும் செயல்பட உதவுகிறது (like a catalytic agent)
    புருஷன் அல்லது ஜீவன் இந்த பிரகிருதியுடன் தன்னை அக்ஞானத்தினால் ஐக்யப்படுத்திக்கொண்டு சுகதுக்கங்களை அனுபவித்து சம்சாரத்தில் சிக்கி ஜனனமரணங்களை அனுபவிக்கிறான். ஒரு சமயம் இதை உணர்ந்து பிரகிருதியில் இருந்து விடுபட்டு முக்தியை அடைகிறான்.
    பிரக்ருதி சிருஷ்டிக்கு காரணம் என்ன என்றால் புருஷனின் சமீபமே.
    இதற்கு என்ன காரணம் கூறப்படுகிறது என்றால் ஒரு பொருள் எதனில் இருந்து தோன்றியதோ அதன் குணங்கள் அந்தப் பொருளுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். உலகத்தில் உள்ள எல்லாமே மூன்று குணங்களின் மாறுபாடு. ஆகையால் அவற்றிற்கு காரணம் ஆன பிரகிருதியே உலகத்தின் காரணம்.
    இதை மறுப்பது இந்த சூத்திரம்.
    உபநிஷத்தில் 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' என்ற வாக்கியத்தின் மூலம் உலகை படைத்தது ஜடமான பிரகிருதி அல்ல என்பது தெளிவாகிறது. 'அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று,' என்பது உணரும் திறமற்ற (insentient) பிரக்ருதிக்கு சரியாக அமையாது.
    ஆனால் காரணத்தின் குணங்கள் அதன் மூலம் தோன்றியதில் இருக்க வேண்டுமே , முக்குணங்கள் அற்ற பிரம்மம் எப்படி இந்த உலகத்தின் காரணமாகும் என்பதற்கு ராமானுஜரின் பதில் என்னவென்றால்,
    பிரம்மம் எல்லாவற்றிற்கும் உள்ளே அந்தராத்மாவாக இருப்பதனால் எல்லாமே பிரம்மத்தின் உடல் ஆதலால் எப்படி இந்த பஞ்சபூதங்களினால் ஆன உடலுக்கு உயிர் காரணமோ அதே போல இந்த ப்ரபஞ்சத்திற்கு பிரம்மமே காரணம்,
    சூக்ஷ்ம சித் அசித் விசிஷ்ட பிரம்மம் ஆத்மா , ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரம்மம் உலகம். அதாவது எல்லா உயிர்களும் ஜடவஸ்துக்களும் உருவற்ற வடிவில் உள்ளது பிரம்மம். அதுவே உருவமாக உள்ளது உலகம்.
    ஸாங்க்ய வாதம் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. சங்கல்பித்தது என்ற ஒரே சொல் அது பிரம்மமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வேதத்தில் 'அக்னி சங்கல்பித்தது' 'நீர் சங்கல்பித்தது' எனற வாக்கியங்கள் உண்டு,.அதனால் உணரும் திறன்(sentiency) என்பது அவசியமில்லை என்று. இதற்கு அடுத்த சூத்திரம் பதிலாகிறது.

    To be continued
Working...
X