Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    178.காலனிடத்து




    தான தனத் தனதான


    கால னிடத் தணுகாதே
    காசி னியிற் பிறவாதே
    சீல அகத் தியஞான
    தேன முதைத் தருவாயே
    மால யனுக் கரியோனே
    மாத வரைப் பிரியானே
    நாலு மறைப் பொருளானே
    நாக கிரிப் பெருமாளே

    - 178 திருச்செங்கோடு



    பதம் பிரித்து உரை




    காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே
    சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே


    காலன் இடத்து அணுகாதே = யமனுடைய ஊரை அணுகா வகைக்கும் காசினியில் பிறவாதே = பூமியில் பிறவாமலும் சீல =நல்லொழுக்கம் வாய்ந்த அகத்திய =அகத்தியருக்கு ஞான தேன் அமுதை = நீ உபதேசித்து அருளிய ஞானோபதேச தேன் போன்ற உபதேச அமுதை தருவாயே =அடியேனுக்கும் தந்தருளுக.


    மால் அயனுக்கு அரியோனே மா தவரை பிரியானே
    நாலு மறை பொருளானே நாக கிரி பெருமாளே.


    மால் அயனுக்கு அரியோனே =திருமாலுக்கும் பிரமனுக்கும் காண்பதற்கு அரியவனே மா = சிறந்ததவரை = தவசிரேட்டர்களை பிரியானே= விட்டுப்பிரியாதவனே நாலு மறைப் பொருளானே=நான்கு வேதங்களின் பொருளா யுள்ளவனே நாக கிரிப் பெருமாளே =பாம்பு மலை எனப்படும் திருச் செங்கோட்டில் உறையும் பெருமாளே








    விளக்கக் குறிப்புகள்




    1. அகத்திய ஞான.....

    அகத்திருக்கு முருக வேள் திருத்தணிகையில் ஞான உபதேசம் செய்தனர்.
    வேலிறைவன் இயம்பிய ஞானமுற்றுணர்ந்து... வாழ்ந்திருந்தனன்
    முநிவன் --- தணிகைப் புராணம் .

    இது போல் சிவபெருமானுக்கு உபதேசித்த ஞானப் பொருளைத் தனக்கும் உபதேசிக்க வேண்டுகிறார் அருணகிரி நாதர்.

    ஒப்புக


    பண்டேசொற் றந்த பழமறை
    கொண்டேதர்க் கங்க ளறவுமை
    பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே --- திருப்புகழ், கொண்டாடி

    சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
    றுங்கு ருத்து வங்கு றையுமோதான் --- திருப்புகழ், சயிலாங்க

    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே ---
    திருப்புகழ், அகரமுதலென
    புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
    புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே --- திருப்புகழ், துத்திநச்ச
Working...
X