Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    183.வரிசேர்ந்திடு


    தனதாந்தன தானன தானன
    தனதாந்தன தானன தானன
    தனதாந்தன தானன தானன தனதான
    வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
    முழைவார்ந்திடு வேலையு நீலமும்
    வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே
    வளர்கோங்கிள மாமுகை யாகிய
    தனவாஞ்சையி லேமுக மாயையில்
    வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
    இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
    மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
    இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே
    எனதாந்தன தானவை போயற
    மலமாங்கடு மோகவி காரமு
    மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
    கரிவாம்பரி தேர்திரள் சேனையு
    முடனாந்துரி யோதன னாதிகள்
    களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக்
    கனபாண்டவர் தேர்தனி லேயெழு
    பரிதூண்டிய சாரதி யாகிய
    கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்
    திரைநீண்டிரை வாரியும் வாலியும்
    நெடிதோங்கும ராமர மேழொடு
    தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச்
    சிலைவாங்கிய நாரண னார்மரு
    மகனாங்குக னேபொழில் சூழ்தரு
    திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.

    -183 திருவேங்கடம்



    பதம் பிரித்தல்
    எனது ஆம் தனது ஆனவை போய் அற
    மலமாம் கடு மோக விகாரமும்
    இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே


    எனது ஆம் = எனது என்றும் தனது ஆனவை = தனது என்றும் கூறப்படும் ஆசைகள் போய் அற = அற்றுப் போக மலமாம் = (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்கள் (தோன்றுகின்ற) கடு =கொடிய) மோக
    விகாரமும் இவை= மோக சேட்டைகள் ஆகிய இவை நீங்கிடவே = ஒழிந்து போக இரு தாள் இணை= உனது இரண்டு திருவடி களை அருள்வாயே =தந்து அருள்வாயாக.


    கரி வா(வு)ம் பரி தேர் திரள் சேனையுடன் ஆம்
    துரியோதனன் ஆதிகள்
    களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி


    கரி = யானை வாவும் பரி = தாவும் குதிரை தேர்=
    இரதம் திரள் சேனையும் உடனாம் = திரண்ட சேனை இவைகளைக் கொண்டவனாகிய துரியோதனன்
    ஆதிகள் = துரியோதனன் முதலானோர் களம் மாண்டிடவே = போர்க்களத்தில் இறந்து படுமாறுஒரு = ஒப்பற்ற பாரதம் அதில் ஏகி = பாரத யுத்தத்தில் இறங்கி.


    கன பாண்டவர் தேர் தனிலே எழு
    பரி தூண்டிய சாரதி ஆகிய
    கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்


    கன = மேன்மையான பாண்டவர் தேர் தனிலே =பாண்டவர்களின் தேரில் பூட்டிய ஏழு பரி தூண்டிய =ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்தியசாரதியாகிய = சாரதி கதிர் ஓங்கிய = ஒளி வீசும் நேமியனாம் அரி = சக்கரத்தை உடைய திருமால்ரகுராமன் = ரகுராமன்.


    திரை நீண்டு இரை வாரியும் வாலியும்
    நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு
    தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக


    திரை நீண்டு = அலைகள் நீண்டதாய் இரை வாரியும்= ஒலிக்கும் கடல் வாலியும் = வாலியாகிய குரங்கரசனும் நெடிது ஓங்கும் = நீண்டு ஓங்கி நின்றமராமரம் ஏழோடு = ஏழு மராமரங்கள் மீதும்தெசமாம்
    சிர ராவணனார் = பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய முடி பொடியாக = முடிகள் பொடி யாகும்படி


    சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம்
    குகனே பொழில் சூழ் தரு
    திரு வேங்கட மா மலை மேவிய பெருமாளே.


    சிலை வாங்கிய = வில்லை வளைத்த நாரணனார் =திருமாலுடைய மருமகனாம் குகனே =மருமகனாகிய குமரனே பொழில் சூழ் தரு =சோலைகள் சூழ்ந்த திருவேங்கட மா மலை மேவிய பெருமாளே = சிறந்த திருவேங்கட மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



    .
    விளக்கக் குறிப்புகள்
    1. எனது ஆம் தனது ஆனவை.....எனது, தனது என்னும் ஆணவம். மும்மலங்கள் = காமம், வெகுளி, மயக்கம்.
    2. திருவேங்கட மாமலை...
    இங்கு விஷ்ணு ஆலையமும், முருக ஆலையமும் அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று வ. சு. செங்கல்வராயபிள்ளை அவர்களின் கருத்து.
    உலகீன்ற பச்சை யுமையணன்
    வடவேங்க டத்தி லுறைபவ
    னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே...........................திருப்புகழ், இபமாந்தர்.
    திருப்பதி மலைப்பாதையில் கபிலேஸ்வரர் காமாட்சியம்பிகை திருக்கோயில் ஆறுமுகப்பெருமான் காட்சி அளிக்கிறான், அவரை பாடியிருக்கலாம் என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் அவர்கள் கூற்று.

    பார்க்க அருள்மின்னல்




Working...
X