Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    193. அல்லில்


    193
    வள்ளியூர்

    தய்ய தானன தனதான தய்ய தானன தனதான



    அல்லில் நேருமி னதுதானும்
    அல்ல தாகிய உடல்மாயை
    கல்லி னேரஅ வழிதோறுங்
    கையு நானுமு லையலாமோ
    சொல்லி நேர்படு முதுசூரர்
    தொய்ய வூர்கெட விடும்வேலா
    வல்லி மாரிரு புறமாக
    வள்ளி யூருறை பெருமாளே

    193 வள்ளியூர்



    பதம் பிரித்து உரை


    அல்லில் நேரு மின் அது தானும்
    அல்லதாகிய உடல் மாயை


    அல்லில் நேர் = இரவில் காணப்படும். மின் =மின்னல் அது தானும் = அந்த நேரம் கூட நிலைக்காதஅல் அதாகிய = துன்பம் மிகுந்த உடல் மாயை =உடல் ஒரு மாயையாகும்.


    கல்லில் நேர் அ வழி தோறும்
    கையும் நானும் உலையலாமோ


    கல்லில் நேர் = கல்லுக்கு ஒப்பான அ வழி தோறும் =அந்த மாய வாழ்க்கை வழி எல்லாம் கையும் = என் ஒழுக்க நிலையும் நானும் = நைந்து வருந்துகின்ற நானும் உலையலாமோ = நிலை குலையலாமோ?


    சொல்லி நேர் படு முது சூரர்
    தொய்ய ஊர் கெட விடும் வேலா


    சொல்லி = தம் வீரங்களைச் சொல்லி நேர் படு =சொல்லிக் கொண்டு எதிர்த்து வந்த முது சூரர் =பெரிய சூரர்கள் தொய்ய = சோர்வு அடைய ஊர் கெட = (அவர்களுடைய) ஊர் பாழ்படவும் விடும் வேலா =செலுத்திய வேலனே.


    வல்லிமார் இரு புறமாக
    வள்ளியூர் உறை பெருமாளே.

    வல்லிமார் இருபுறமாக = வல்லிக் கொடி ஒத்த மாதர் இருவர்கள் (வள்ளி, தெய்வ யானை) இரு பக்கத்திலும் இருக்கும் வள்ளியூரில் = வள்ளி ஊரில்உறை பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே
    .




Working...
X