Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    200.பாதாள
    200
    விராலிமலை
    தானான தான தான தனதன
    தானான தான தான தனதன
    தானான தான தான தனதன தனதான


    பாதாள மாதி லோக நிகிலமு
    மாதார மான மேரு வெனவளர்
    படீர பார மான முலையினை விலைகூறிப்
    பாலோடு பாகு தேனெ னினியசொ
    லாலேய நேக மோக மிடுபவர்
    பாதாதி கேச மாக வகைவகை கவிபாடும்
    வேதாள ஞான கீனன் விதரண
    நாதானி லாத பாவி யநிஜவன்
    வீணாள்ப டாத போத தவமிலி பசுபாச
    வ்யாபார மூடன் யானு முனதிரு
    சீர்பாத தூளி யாகி நரகிடை
    வீழாம லேசு வாமி திருவருள் புரிவாயே
    தூதாள ரோடு காலன் வெருவிட
    வேதாமு ராரி யோட அடுபடை
    சோரா வலாரி சேனை பொடி பட மறைவேள்விச்
    சோமாசி மார்சி வாய நமவென
    மாமாய வீர்ர கோர முடனிகல்
    சூர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே
    கூதாள நீப நாக மலர்மிசை
    சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
    கோலால நாத கீத மதுகர மடர்சோலை
    கூராரல் தேரு நாரை மருவிய
    கானாறு பாயு மேரி வயல்பயில்
    கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே




    பதம் பிரித்தல்
    வேதாளன் ஞான கீனன் விதரண
    நா தான் இலாத பாவியன் அநிஜவன்
    வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச
    வேதாள(ன்) = பேயன் ஞான கீனன் = ஞானம் குறைந்தவன் விதரண = விவேகமுள்ள நா தான் =நாக்கே இலாத பாவி = இல்லாத பாவி அநிஜவன் =உண்மை இல்லாதவன் வீணாள் படாத = வீணாள் உண்டாகாமல் காக்கும் போதம் = அறிவும் தவம் இலி = தவமும் இல்லாதவன் பசு பாசம் = உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும்.


    வியாபார மூடன் யானும் உனது இரு
    சீர் பாத தூளியாகி நரகு இடை
    வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே


    வியாபார மூடன் = பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன் யானும் = இத்தகைய குணங்களை உடைய நானும் உனது இரு சீர் =உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாத தூளி ஆகி = பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று,அதனால் நரகு இடை வீழாமல் = நரகில் விழாமல்சுவாமி = சுவாமியே. திரு அருள் புரிவாயே =திருவருள் புரிவாயாக.


    தூதாளர் ஓடு காலன் வெருவிட
    வேதா முராரி ஓட அடு படை
    சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி


    தூதாளரோடு = (தன்னுடைய) தூதர்களோடு காலன் வெருவிட = யமன் அஞ்சவும் வேதா = பிரமனும்முராரி = திருமாலும் ஓட (அஞ்சி) ஓடவும் அடு பாடை = கொல்ல வல்ல சேனை சோர = சோர்ந்து போய் வலாரி சேனை பொடிபட = இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும் மறை வேள்வி = வேத வேள்விகள்.


    சோமாசிமார் சிவாய நம என
    மா மாய வீர கோரமுடன் இகல்
    சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
    சோமாசிமார் = சோம யாகம் செய்யும் பெரியோர்கள். சிவாயநம என = பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும் மா மாய = பெரிய மாயங்களும் வீர =வீரமும் கோரமுடன் = கோரமும் பொருந்தி இகல் =போர் செய்த. சூர் மாள = சூரன் இறக்கும்படி வேலை ஏவும் = வேலாயுதத்தைச் செலுத்திய வயலியில் இளையோனே = வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே.


    கூதாள நீப நாக மலர் மிசை
    சாதாரி தேசி நாமக்ரியை முதல்
    கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை


    கூதாள = கூதாளப் பூ. நீபம் = கடப்ப மலர். நாக மலர் = சுரபுன்னை மலர் மிசை = இவைகளின் மீதுசாதாரி, தேசி, நாமக்ரியை முதல் = சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான கோலாகல =ஆடம்பரமான நாத கீத = ஒலி இசைகளைப் பாடும்மதுகரம் = வண்டுகள் அடர் சோலை = நிறைந்த சோலைகளும்.


    கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய
    கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
    கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.


    கூர் = நிரம்ப ஆரல் = ஆரல் மீன்களை தேரும் நாரை = தேடும் நாரைகள் மருவிய = பொருந்திய கான் ஆறு = காட்டாறுகள் பாயும் = பாய்கின்ற ஏரி = ஏரிகளும்வயல் = வயல்களும் பயில் = நெருங்கியுள்ளகோனாடு சூழ் = கோனாடு என்னும் நாட்டில் உள்ளவிராலி மலை உறை = விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    சோமாசிமார் சிவான நம என.....
    சோமாசிமார் = சோம யாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவ யாகங்களை நியதியுடன் செய்யும் மறையோர். சோமயாகம் தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை
    Last edited by soundararajan50; 14-12-17, 07:57.
Working...
X