Announcement

Collapse
No announcement yet.

ஹிந்துக்கள் ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கு&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹிந்துக்கள் ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கு&#

    ஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.
    ஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா?


    கோவில் தூண்களில் உள்ள அழகான சிவனின் சிலையை "தெய்வம்" என்று வணங்குவதில்லை.
    அதே கோவிலில் கர்பக்ரஹத்தில் உள்ளே இருக்கும் அழகு கூட இல்லாத, ரூபமில்லாத நிலையில் உள்ள சிவ லிங்கமாக இருக்கும் சிலையை, "தெய்வம்" என்கிறான். இதன் ரகசியம் என்ன?


    ஹிந்துக்கள், எல்லா கல்லையும் தெய்வமாக வணங்கவில்லை என்று தெளிவாக இது புரிய வைக்கிறது. ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலை மட்டும் "தெய்வமாக" தெரிகிறது?
    இதன் ரகசியம் என்ன?


    விளக்கம்:
    கீழ்நிலை மதங்களில் உள்ளவர்கள், ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று வழிபடுவதாக நினைக்கின்றனர்.


    அவர்களுக்கும் ஒரு கல் சிலையோ, கல்லோ தேவைப்படுகிறது என்பதை மறந்து பேசுவது நகைப்புக்கு உரியது.


    ஹிந்துக்கள் என்ற சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், மியூசியத்தில் இருக்கும் சிவன் சிலையையும், பெருமாள் சிலையையும் தெய்வமாக கும்பிடுவதில்லை.
    சிலையாக தான் பார்க்கின்றனர்.
    சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை வேண்டுமானால் செய்கின்றனர். ஆனால் சிலையையே "தெய்வம்" என்று நினைப்பதில்லை.


    சாஸ்திரத்தில் சொல்லாத எந்த தெய்வங்களும் மனிதன் செய்த கற்பனையே.
    அவன் புத்தியை கொண்டு ஒருவரை தெய்வம் என்று கூறிக்கொள்கிறான்.
    அதனாலேயே எதை எதையோ தெய்வம் என்றும், யார் யாரையோ தெய்வம் என்றும் சொல்லி மற்ற நாட்டில் இருந்து, இறக்குமதியான பொய் மதங்களை ஹிந்துக்கள் புறக்கணிக்கின்றனர்.


    கோவிலுக்கு செல்லும் போது, மிக அழகான சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் காணலாம்.
    அரசர்கள் கட்டிய இந்த சிலைகளில் சிவன், ப்ரம்மா, அக்னி, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்கள்,மிக அழகாக அப்படியே செதுக்கப்பட்டு இருக்கும்.


    இந்த சிற்பங்களை பார்த்து, ஹிந்து வணங்குவதில்லை, பக்தி செய்வதும் இல்லை.
    அழகாக சிற்பம் உள்ளது என்று மட்டும் தான் ரசிப்பான்.
    சிலை தான் என்றும் சொல்லுவான்.


    ஆனால், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டவுடன், அவனுக்கு அது தெய்வம் என்ற உணர்வை கொடுத்து விடுகிறது.


    "தெய்வம்" என்ற உணர்வு வந்தவுடன், அதன் முன் பிரார்த்தனை செய்கிறான், பக்தி செய்கிறான். தன் குறைகளை, தன் கஷ்டங்களை கூட சொல்லி வேண்டுகிறான். அழுகிறான். பூஜிக்கிறான்.


    தூணில் இருக்கும் தெய்வ சிலைகள், இந்த கர்பகிரஹத்தில் இருக்கும் சிலையை விட அழகானதாக கூட இருக்கும்.


    அழகுக்காக தூணில் இருக்கும் சிலையை "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை ஹிந்து என்று நாம் கவனிக்க வேண்டும்.


    அறிவு உள்ள மனிதன், தூணில் இருக்கும் அழகான தெய்வசிலையை, சிலை என்று தான் உணர்கிறான். சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அந்த சிலையையே "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை.


    அதே சமயம், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டதும், சிலை என்ற நினைவையும் மீறி, இறைவன் என்று உணர்கிறான்.


    இதில் என்ன ரகசியம் உள்ளது?
    இதை கவனிக்கும் போது தான், ஏன் திருப்பதி, ஸ்ரீ ரங்கம், காசி போன்ற க்ஷேத்ரங்களில் மக்கள் அலை அலையாக வருகின்றனர் என்பது புரியும்.


    தெய்வ அணுகிரஹம் அடைந்த ஒரு ஞானியால், ரிஷியால், பக்தனால் ஆராதித்து வணங்கப்பட்ட சிலையில், தெய்வங்கள் தன் சாநித்யத்தை ப்ரகாசப்படுத்துகின்றன.


    மேலும் படிக்க..


    http://proudhindudharma.blogspot.in/...st_21.html?m=1
Working...
X