Announcement

Collapse
No announcement yet.

Kodaganallur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kodaganallur temple

    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    _______________________________________
    *59*
    *நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள்.*


    *அருள்மிகு புறவேலிநாத சுவாமி திருக்கோயில். கீழக்கல்லூர், கோடகநல்லூர்.*
    _________________________________________
    *இறைவன்:* அருள்மிகு புறவேலிநாதர்.


    *இறைவி:* அருள்தரும் அழகம்மை.


    *தீர்த்தம்:* தாமிரபரணி.


    *தல விருட்சம்:* வில்வம்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *தல அருமை:*
    திருநெல்வேலியை அடுத்திருக்கும் கீழக்கல்லூரை, புராண காலத்தில் கணேசபுரம் என் அழைக்கப் பெற்றிருந்தது.


    இங்கிருக்கும் இறைவனுக்கு சிதம்பரேஸ்வரர் என்ற ஒரு திருநாமமும், அம்பாளுக்கு சிதம்பரேஸ்வரி என்ற திருநாமமும் அமைக்கப்பட்டிருந்தது.


    இத்தலக்கோயிலின் பசுவானது குறிப்பிட்ட நேரங்களில் அங்கிருந்த கல்திட்டு ஒன்றிற்கு, தன்னாலாக பாலைச் சொரியச் செய்து வந்தது.


    இதைக்கண்ட துன்மார்க்கன் ஒருவன், அப்பசுவை நோக்கி கல்லை எடுத்து வீசி எறிந்தான்.


    கல்லெறி பட்ட அப்பசு, பாலைச் சொரிந்து கொண்டிருந்த நிலையில், மிரண்டு, அக் கல்திட்டை மிதித்து விட்டு ஓடியது. கல்திட்டியிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது.


    பசுவின் குழம்படி பட்டு இரத்தம் ஒழுகியதைக் கண்ட அக்கிராம மக்கள், அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த மன்னனிடம் போய் செய்தியைச் சொன்னார்கள்.


    மன்னனும் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பார்த்தான். அந்தக் கல் லிங்க வடிவுடன் காட்சியளித்தது.


    அப்போது ஊர்மக்களும் கூட இருந்தார்கள். இந்நிலைமை கண் கண்ட அவர்கள், லிங்கத்தை ஒருசாரார் தேனுபுரீசுவரா...தேனுபுரீசுவரா.... என அழைத்தனர்.


    மற்றொரு சாராரும் சிதம்பரேஸ்வரா.....சிதம்பரேஸ்வரா..... என அழைத்தனர்.


    இப்படியே தேனுபுரீசுவரர் என்றும், சிதம்பரேசுரர் என்றும் திருநாமங்களோடு வழிபாடு செய்தனர்.


    இங்கிருக்கும் சிவலிங்கத்தின் பாணத்தலைபகுதியில், இன்றும் பசுவின் குளம்பு (கால்தடம்) இருப்பதைக் காணலாம்.


    *சிறப்பு:*
    இராஜராஜ சோழன் காலத்தில் இப்பகுதியில் உள்ள பட்டன் கல்லூர், நல்லூர், கோடகநல்லூர், கீழக்கல்லூர் போன்ற பகுதிகளில் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதாயத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.


    இப்பகுதியில் விளைந்து வரும் *கோடகன் சம்பா* என்ற உயர் ரக நெல் சமைப்பதற்கு சுவையாகவும், அதிக நாள் ஆனாலும் கெடாமலும் பயனைப் பெற்றவையாகும்.


    எனவே, இந்நெல்லிற்கு அம்மன்னன் *இராஜ அன்னம்* என பெயரிட்டான்.


    மேலும், இப்பகுதியில் விளைவிக்கும் கோடகன் சம்பா நெல்லினை கீழக்கல்லூரில் உள்ள இத்திருக்கோயில் இறைவன் சிவபெருமான் முன்னிலையில் அனைவரும் *புரவு வரி* (விலக்களிக்கப்பட்ட வரி) செலுத்த உத்தரவிட்டான்.


    மேலும் இவ்வாறாக செலுத்தப்படும் இந்த உயர் வகை நெல்லானது, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், சங்கரன்கோவில்,
    பாபநாசம்,
    பிரம்மதேசம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களின் இறைவனுக்குப் படைக்கப்படும் என்றும் அறிவிப்பை மொழிந்தான்.


    இந்த அறிவிப்பை ஏற்று அக்கால விவசாயிகள் தங்களது மனசாட்சிப்படி சிவபெருமான் முன்னிலையில் புரவு வரியாக இந்நெல்லை செலுத்தினர்.


    அன்றுமுதல், இத்தலத்திற்கு புரவரிநாதர் திருநாமம் உண்டானது.


    சங்கரன்கோவில், பிரம்மதேசம் போன்ற தலங்களின் கல்வெட்டுக்களில் இருக்கின்றன.


    இத்திருநாமம் நாளடைவில் புரவரிநாதர் என்றும் திருநாமம் மருவி *புறவேலிநாதர்* எனவாயிற்று.


    இதை உறுதிபடுத்தும் விதமாக இத்திருக்கோயிலுக்குள் இன்றும், சதுர எடை மேடை இருப்பதைக் காணப்பெறலாம்.


    *தனிச்சிறப்பு:*
    அவிமுக்தி ஷேத்திரம் என்னும் சிறப்பினைக் கொண்டது இத்தலம்.


    *பூஜை:*
    நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது.


    *நடை திறப்பு:*
    காலை 6.00 மணி முதல், 10.00 மணி வரை.
    மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும்.


    *திருவிழாக்கள்:*
    சிவராத்திரி. மற்றும்
    திருவாதிரைத் திருவிழா.


    *இருப்பிடம்:*
    திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் பாதையில் இருக்கும் கீழக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கில் ஒரு கி.மி தொலைவில் அமைந்துள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு புறவேலிநாத சுவாமி திருக்கோயில்,
    கீழக்கல்லூர்.
    கோடகநல்லூர்.
    திருநெல்வேலி-627 010


    *தொடர்புக்கு:*
    04634 250 555


    திருச்சிற்றம்பலம்.


    நெல்லை மாவட்ட சிவதலங்களில் நாளைய தலப்பதிவு *நவகைலாயச் சிறப்பு விவரம்.*


    இன்னும் சில நாளில் நெல்லை மாவட்ட சிவ தல தொடர் மகிழ்ந்து நிறைவாகும்.


    ________________________________________
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X