Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    205.மனத்தி ரைந்
    205
    அவிநாசி


    செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக.

    தனத்த தந்தன தானன தானன
    தனத்த தந்தன தானன தானன
    தனத்த தந்தன தானன தானன தனதான


    மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
    கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
    மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை தடுமாறி
    வருத்த முந்தர தாய்மனை யாள்மக
    வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
    வசைக்கு றுஞ்சொலி நால்மிக வேதின நகையாட
    எனைக்க டந்திடு பாசமு மேகொடு
    சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
    லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய முறவேதான்
    இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
    பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
    இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்
    கனத்த செந்தமி ழால்நினை யேதின
    நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
    கருத்தி ருந்துறை வாயென தாருயிர் துணையாகக்
    கடற்ச லனந்தனி லேயொளி சூரனை
    யுடற்ப குந்திரு கூறென வேயது
    கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் விடும்வேலா
    அனத்த னுங்கம லாலய மீதுறை
    திருக்க லந்திடு மாலடி நேடிய
    அரற்க ரும்பொருள் தானுரை கூறிய குமரேசா
    அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
    நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
    யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே




    பதம் பிரித்தல்


    மன(ம்) திரைந்து எழும் ஈளையும் மேலிட
    கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
    மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி


    மனம் திரைந்து = மனம் சுருங்கி வேதனைப்படும்படி.எழு = எழுகின்ற ஈளையும் மேலிட = கோழையும் அதிகரிக்கவும் கறுத்த = கரு நிறமுள்ள குஞ்சியுமே =தலை மயிர் நரையாயிட = நரை கொண்டு வெளுக்கவும் மலர்க் கண் = தாமரை போன்ற கண்கள்அண்டு இருளாகியுமே = பஞ்சடைந்து பார்வை குறையவும் நடை தடுமாறி = நடை தடுமாற்றம் அடையவும்.


    வருத்தமும் தர தாய் மனையாள் மக(வு)
    வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும்
    வசைக்கு உறும் சொ(ல்)லினால் மிகவே தினம் நகையாட


    வருத்தமும் தர = துன்பத்தைத் தர. தாய் மனையாள் மகவு = தாயார், மனைவு, மக்கள் ஆகியோர்வெறுத்திடும் அம் கிளையோர் = வெறுப்பு கொள்ளும் நல்ல சுற்றத்தார் உடன் யாவரும் = அவருடன் மற்றெல்லாரும் வசைக்கு உறும் சொல்லினால் =பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால் மிகவே தினம்
    நகையாட = நிரம்ப நாள் தோறும் பரிகசித்துச் சிரிக்க.


    எனை கடந்திடு பாசமுமே கொ(ண்)டு
    சினத்து வந்து எதிர் சூலமுமே கையில்
    எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான்


    எனைக் கடந்திடு = என்னை அடக்கி வெற்றிக் கொள்ளும். பாசமுமே கொண்டு = பாசக் கயிறு கொண்டு. சினத்து வந்து = கோபத்துடன் வந்து. எதிர் =எதிர்த்து சூலமுமே = சூலத்தை. கையில் எடுத்து =கையில் எடுத்து எறிந்து = அதை என் மேல் வீசி அழல் வாய் விடவே = நெருப்பை வாய் கக்க பயம் உறவே தான் = பயம் கொள்ளும்படி.


    இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்
    பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய
    இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும்


    இழுக்க வந்திடு = (என்னை) இழுக்க வந்திடும். தூதர்கள் ஆனவர் = யம தூதர்கள் பிடிக்கு முன்பு =என்னைப் பிடிப்பதற்கு முன்பாக. உனது தாள் மலராகிய = உன்னுடைய தாமரையாகிய இணைப் பதம் தரவே = இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு. மயில் மீதினில் வரவேணும் =மயிலின் மீது வந்தருள வேண்டும்.


    கனத்த செம் தமிழால் நினையே தின(ம்)
    நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்
    கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக


    கனத்த = பொருள் செறிந்த. செம் தமிழால் =செந்தமிழால் நினையே = உன்னையே தினம் நினைக்கவும் = தினந்தோறும் நினைக்கவும். உனது ஆர் அருள் தருவாய் = உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக. எனது ஆருயிர் துணையாக = என்னுடைய அருமை உயிர்க்குத் துணையாக கருத்திருந்து = (என்) கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து (அருள் தருவாய்).


    கடல் சலம் தனிலே ஒளி சூரனை
    உடல் பகுந்து இரு கூறெனவே அது
    கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா


    கடல் சலம் தனிலே = கடல் நீரில் ஒளி சூரனை =ஒளித்திருந்த சூரனுடைய உடல் பகுந்து = உடலைப் பிளவு செய்ய இரு கூறெனவே அது கதித்து எழுந்து =அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து. ஒரு =ஒப்பற்ற சேவலும் = சேவலும் மா = சிறந்த. மயில் =மயிலும் ஆகும்படி விடு வேலா = செலுத்திய வேலை உடையவனே.


    அனத்தனும் கமலாலயம் மீது உறை
    திரு கலந்திடும் மால் அடி நேடிய
    அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா


    அனத்தனும் = அன்னத்தை வாகனமாக உள்ள பிரமனும் கமலாலயம் மீது உறை = தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருக்கலந்திடு = இலக்குமி சேர்ந்துள்ளமால் = திருமாலும் அடிநேடிய = தேடிய அரற்கு =சிவபெருமானுக்கு. அரும் பொருள் தான் = அரிய (பிரணவப்) பொருளை உரை கூறிய = விளக்கிஉபதேசித்த. குமரேசா = குமரேசனே.


    அறத்தையும் தருவோர் கன பூசுரர்
    நினை தினம் தொழுவார் அமராய் புரி
    அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே.


    அறத்தையும் = அற நெறியை தருவோர் =உபதேசிப்பவரும் கன = பெருமை பொருந்திய பூசுரர் =அந்தணர்களும் நினை = உன்னை தினம் தொழுவார் =நாள் தோறும் தொழுப வர்களாய் அமராய் புரி =அமர்ந்தலை விரும்பியுள்ள அருள் செறிந்த = அருள் நிறையப் பாலித்து அவிநாசியுள் மேவிய பெருமாளே =அவிநாசி எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.






    ஒப்புக


    கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்க...

    செந்தமிழால் முருகனைப் பாட வேண்டும் என்பது அருணகிரி நாதர் பேராசை.


    வேலுஞ்செஞ் சேவலும் செந்தமிழாற் பகரார்வம்.......
    ...கந்தர் அலங்காரம்


    பின் வரும் திருப்புகழ்ப் பாக்களிலும் இக்கருத்தைக் காணலாம்.


    செந்தமிழ் வழுத்தி உனை
    அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே....…. ஐங்கரனையொத்த


    எனக் கென்றப் பொருட் டங்கத் தொடுக்குஞ் சொற்
    றமிழ்த்தந்திப் படி ஆள்வாய்............. .... .............. பருத்தந்த


    செந்தமிழ் பாடும் புலப்பட்டங் டுத்தற்கும்.. ...... பெருக்கச்சஞ்சலி


    தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ… …கடத்தைப்பற்


    சுத்தத் சித்தித் தமிழைத்
    திட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ ..... கொக்குக்கொக்க


    தமிழிசையதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு
    ...அருள்வாயே ....... ...... .......... .... ......விதியதாகவே


    தமிழால்...பாடென்று ஆட்கொ டருள்வாயே ........ வடிவதுநீல


    சரணாரவிந்தமது பாட வண்டமிழ் விநோதம் அருள்வாயே ......அஞ்சுவித


    செஞ்சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார்
    வத்தைப் பெறுவேனோ ... …… ……. பஞ்சுநேர்


    தமிழ்ச் சுவையிட்டு ... எய்த்திட ...அருள்வாயே……… …..வினைத்திரளு


    சித்ரத் நித்தத் தமிழாலுன் நாமத்தை
    கற்றுப் புகழ்க்கைக்குப் புரிவாயே............ .......... வானப்புக்கு

    பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட ….பகர்தற்கரி தான
Working...
X