*தல சிறப்பு:* தேவேந்திரனின் மகன் சேந்தன் என்பவன் அசுரர்களுக்கு பயந்து அலைந்து கொண்டிருந்த சமயம், அவன் முன்பு தோன்றிய சிவபெருமான் நாதகிரியில் தவம் செய்யும்படி கூறினார்.
சேந்தனும், பாதிரி மலைக்கு வந்து கடும் தவம் புரிந்தான்.
அசுரர்களை அழித்துவிட்டு நாதகிரி மலைக்கு வந்த முருகப்பெருமான் கடும் தவம் மேற்கொண்ட சேந்தனுக்கு அருள்பாலித்தார் என்பதும் அகத்தியர், அனுமன், வசிஷ்டர், விசுவாமித்திரர், வாமதேவம் ஆகியோரும் அருள்பாலித்தனர் என் தலபுராணம் கூறுகிறது.
*சிறப்பு:*
*குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமே* என்ற பழமொழிக்கேற்ப நாதகிரி மலையின் உச்சியில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.
காலை 11.30 மணியளவில் தினபூசை, அரசு பூஜை திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.
*திருவிழா:*
மாதக் கார்த்திகை,
சித்திரை விசு,
வைகாசி விசாகம்,
கந்த சஷ்டி,
திருக்கல்யாணம்,
திருவாதிரை,
மாசி மகம்,
மகா சிவராத்திரி,
பங்குனி உத்திரம்.
*இருப்பிடம்:*
சங்கரன் கோயிலுக்கு வட மேற்கே சுமார் நாற்பது கி. மிக தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து வடகிழக்காக சுமார் பண்ணிரன்டு கி.மி தொலைவிலும், கூடலூர் கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மி தொலைவிலும் மலையின் மீது இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.
வாசுதேவநல்லூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
சங்கரன்கோவிலில் தொடர்வண்டி நிலையம் உள்ளது.
*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
கூடலூர்,
திருநெல்வேலி-627 757
*தொடர்புக்கு:*
04636 241938
*53*
*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தொடர்.*
Bookmarks