Announcement

Collapse
No announcement yet.

தாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன?

    http://proudhindudharma.blogspot.in/...st_11.html?m=1


    தாரக மந்திரம் என்று ராம நாமத்தையும், ஓம் என்ற ஓங்காரத்தையும் சொல்கிறார்கள். தாரகம் என்றால் என்ன? இதன் பயன் என்ன?


    சம்சார என்றால் என்ன?


    மாயை என்றால் என்ன?


    மன அலையை, சம்சார அலையை ஓய வைப்பது எப்படி?


    மறு பிறவி உண்டு என்று அனுமானிப்பது?


    நம் சனாதன தர்மத்தின் நோக்கம் என்ன? பிற மேற்கு மத தர்மத்தின் நோக்கமும், அவர்கள் விழாவும், வாழ்க்கையின் நோக்கம் என்ன?


    மேலும் படியுங்கள்...


    மீண்டும் மீண்டும் வரக்கூடிய அலையை தான் பொதுவாக, சம்சாரம் என்கிறோம்.

    கடலின் அலையை பார்த்தால் என்ன அர்த்தத்தை இது சொல்கிறது என்று நாமும் புரிந்து கொள்ளலாம்.
    கடலில் ஒரு அலை எழும்பும், அது அழிந்து, பின் மீண்டும் ஒரு அலை உருவெடுத்து வந்து, ஒரு முடிவே இல்லாமல், "பிறந்து, அழிந்து', "பிறந்து, அழிந்து" என்று சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சிக்கு தான் சம்சாரம் என்று பெயர்.


    இந்த கடலில் உள்ள அலை போல, நமக்கும் மனதிலும், உடலிலும் கூட இந்த முடிவில்லாத சுழற்சி ஏற்படுகிறது.


    1. மனதிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதையும் நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
    2. உடலிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதை நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.


    விளக்கம்:
    1. மனம் என்றாலே அலைபாயும் குணம் கொண்டது என்று அனைவருக்கும் புரியும். அனைவரும் அனுபவிப்பதால், ஒப்புக்கொள்வர்.
    அலையை போன்று, நம் மனதில் ஒரு எண்ணம் உருவாகி, அது அழிந்து, உடனே மற்றொன்று உருவாகி, அதுவும் அழிந்து, மற்றொறு எண்ணம் உருவாகி இப்படியே நம் நினைவு தெரிந்த நாள் முதல், சாகும் வரை, எண்ணங்கள் நம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது.
    இதற்கு முடிவே தெரிவதில்லை.


    அலையாத மனம் கிடைப்பதே பலருக்கு அரிதான விஷயம்.


    அலையும் மனது இருப்பதால் தான் மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான். இன்றைய சமுதாயம் மனக்கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு அழிவதால் தான், இன்றைய சமுதாயம், நம் முன்னோர்கள் அனுபவித்த stress, pressureஐ விட பல மடங்கு அனுபவிக்கிறது.


    மனம் அலைவதே பல நோய்களுக்கு காரணம். அதாவது, ஒரே எண்ணத்தில் நிற்காமல், ஒரு எண்ணம் ஏற்படும் போதே, இன்னொரு எண்ணம் உருவாகி, அது அழிந்து இன்னொரு எண்ணம் என்று பல எண்ணங்கள் தோன்றி, மறைந்து கொண்டே இருப்பதால், மனம் அலைகிறது, நோய் வந்து சேருகிறது.


    இந்த மனதின் அலையும் தன்மையை தடுத்து, ஒரு எண்ணத்தில் நிலை நிறுத்த ஒருவன் படாதபாடு பட வேண்டி உள்ளது.
    யோகா, தவம் என்று பல வழிகள் மூலம் மனதை அடக்கி, மன அலையை ஓய செய்ய முடியும் என்று பார்க்கிறோம்.
    மன அலைகள் ஏற்படாமல் இருக்க மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே.
    சொல்லி பார்த்தவர்களுக்கு தான் எப்படி மனம் அடங்குகிறது என்று புரியும்.
    மேர்கத்திய மதங்கள் கொண்டாடும் பண்டிகைகள், உணவுகள், கொள்கைகள், அவர்களின் ஆலயங்கள் உட்பட அமைதியாக இருக்கும் மனதை தூண்டி விட்டு எண்ணங்களை கிளர்ச்சி செய்வதிலேயே உள்ளது. இதனாலேயே இந்தியாவை தேடி அமைதி எங்கே என்று வருகின்றனர்.
    இவர்களின் ஆலய வழிபாடு கூட, அமைதியாக இருக்கும் மனதை கிளர்ச்சி செய்வதாக உள்ளது. இவர்களின் ஒரு பண்டிகையில், அழகாக இருக்கும் தன் குழந்தையை கூட பேய், பூதம் என்று வேஷம் செய்து கொண்டாடுவது. மனதை கிளர்ச்சி செய்து மன அலைகளை எழுப்புவதே இவர்கள் கொள்கையாக உள்ளது.
    நேரெதிராக, சஷ்டி விரதம், ஏகாதேசி, ராம நவமி, நவராத்திரி, பொங்கல் என்ற அனைத்து ஹிந்து பண்டிகைகளும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, சைவ உணவு மட்டும் உட்கொள்ளும் விதமாக, விரத நாட்களில் உணவு கூட உட்கொள்ளாமல் வழிபட செய்து, மனதின் அலையை ஒடுங்க செய்வதிலேயே அமைந்தது இருக்கிறது. கோவிலுக்கு சென்றாலும் மனஅமைதி கிடைக்க வழி செய்கிறது. "ஓம் சாந்தி" என்று எப்போதும் வேதமே நாம் மனம் அலையாமல், சாந்தியாக இரு என்று சொல்கிறது. நம் மதத்தின் நோக்கமே நம் மனதை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது.
    மேற்குநாட்டு மதங்களோ, மனதின் அலையை கிளப்பி, மன குழப்பம், கோபம், ஆத்திரம், காமம் என்று பல வித உணர்ச்சிகளை தூண்டி, stress, pressure என்று நோய்களை உருவாக்குகிறது.
    இவர்கள் கலாச்சாரம் நம் மீதும் புகுந்து உள்ளது.
    நம் சாஸ்திரம், மனதின் அலையை அடக்க வழியை காட்டிய பின்னும், முயற்சி கூட செய்யாமல் இருப்பவன், மனம் அலைந்து கொண்டே வாழ வேண்டியது தான்.
    ஆஞ்சநேயரும், சிவபெருமானும் "ராம" என்ற தாரக மந்திரத்தை தாங்களே சொல்லி கொண்டு இருப்பதற்கு காரணம், நாமும் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே.


    2. மன அலைகள் போல, நம் உடம்பும் இந்த சம்சார அலையில் சிக்கியது தான் என்று "உணர்ந்து கொள்" என்கிறது நம் சனாதன வேத தர்மம்.
    நாம் இப்போது கொண்டுள்ள முழு உடம்பும் அழிந்து, ஆத்மாவாகிய நாம் மீண்டும் ஒரு உடலில் புகுவோம் என்கிறது நம் சனாதன தர்மம். மோக்ஷம் அடையாத வரை உடம்பு அழிந்து பின் இன்னொரு உடலில் புகுந்து விடுகிறது ஆத்மா என்கிறது நம் சாஸ்திரம்.


    உடம்பே அழிந்த பின், எப்படி நாம் இன்னொரு உடம்பை பெறுகிறோம் என்று அனுமானிப்பது? எப்படி நம்புவது?
    இதற்கான பதிலை கொஞ்சம் கவனித்தாலே நாமும் புரிந்து கொண்டு விடலாம்.
    மறு ஜென்மம் இல்லை என்று உளரும் கூட்டத்தை மடையர்கள் என்று உணரலாம்.


    இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், ஆராய்ச்சியாளர்கள் நாம் இப்போது கொண்டுள்ள உடம்பிலேயே ஒவ்வொரு செல்களும் நகர்ந்து கொண்டே இருக்கிறது, அழிந்து கொண்டே இருக்கிறது, புதிதாக தன்னை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்று நம் சனாதன தர்மத்தில் சொன்ன விஷயத்துக்கு சார்பாக சொல்கிறார்கள்.


    நம் உடம்பிலேயே எப்பொழுதும் அழிவும், உருவாக்கமும் நடந்து கொண்டே இருக்கிறது என்று அறியும் போது தான், மொத்த உடம்பும் ஒரு நாள், பயன்படாத போது, உள்ளிருக்கும் ஆத்மா, இந்த உடம்பை


    மேலும் படிக்க


    http://proudhindudharma.blogspot.in/...st_11.html?m=1
Working...
X