Announcement

Collapse
No announcement yet.

Bullock cart -positive story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bullock cart -positive story

    "'எளிய முறையில்
    சரணாகதி விளக்கம்""
    மாட்டு வண்டிக்கு
    உயிர் இல்லை
    மாட்டுக்கு
    உயிர் அறிவு இரண்ண்டும் உண்டு
    ஆனால் வண்டிக்காரன்
    உயிரில்லாத வண்டியை
    அறிவுள்ள மாட்டில் பூட்டி..
    எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை
    தீர்மானித்து
    வண்டியை
    செலுத்துவான்.
    எவ்வளவு தூரம்
    எவ்வளவு நேரம்
    எவ்வளவு பாரம்
    அனைத்தையும்
    தீர்மாணிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!
    அறிவிருந்தும்
    சும்ப்பது தானாக இருந்தாலும்
    மாட்டால்
    ஒன்றும் செய்ய இயலாது
    அதுபோல
    உடம்பு என்ற
    ஜட வண்டியை
    ஆத்மா உயிர்
    என்ற மாட்டில் பூட்டி
    இறைவன் என்ற
    வண்டிக்காரன் ஓட்டுகிறான்
    அவனே தீர்மானிப்பவன்
    அவன் இயக்குவான்
    மனிதன் இயங்குகிறான்
    எவ்வளவு காலம்
    எவ வளவு நேரம்
    எவ்வளவு பாரம்
    தீர்மாணிப்பது இறைவனே
    இதுதான்
    நமக்காக
    இறைவன் போட்டிருக்கும் DESIGN
    இதுதான்
    இறைவன் நமக்கு
    தந்திருக்கும் ASSIGNMENT


    இதை
    உணர்ந்தவனுக்கு
    துயரம் இல்லை
    இதைந
    உணராதவனுக்கு
    அமைதி இல்லை
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    நல்லதே நடக்கட்டும்.

  • #2
    Re: Bullock cart -positive story

    ஸ்ரீ:
    இது இணையத்தில் பல தளங்களில் நிறைய உலா வருகிறது.
    பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றும்
    பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.

    பகுத்தறிவுவாதிகள் கூறுவார்கள்
    ப்ராம்மணன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது
    மற்றவர்கள் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது
    அப்டியிருக்க ப்ராம்மணன் மட்டும் எப்படி உயர்ந்தவன் ஆவான் என்று.

    மேலோட்டமாகக் கேட்கும்போது - ஆமாம் சரிதானே என்று தோன்றும்
    ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால்
    ஒருவனின் மேன்மையும், தாழ்மையும் ரத்தத்தின் நிறத்தாலா ஒப்புமை
    செய்து பார்த்து முடிவுசெய்ய இயலும் என்று?

    அதுபோல,

    இந்த உதாரணத்தில் அறிவுடன் கூடிய மனிதனின்
    செயல்களுக்கு அவன் எந்த விதத்திலும் பொறுப்பாகமாட்டான் என்றால்
    அவன் தலையில் பாப புண்ணியங்களைச் சுமத்துவது
    மிகப்பெரிய குற்றம்.

    இதுபோன்ற தோஷங்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்தான்
    எத்தனை காலங்கள் ஆனாலும், நேற்றுவரை இருந்த முன்னோர்கள்
    தமக்கு எவ்வளவு அற்புதமான உதாரணம் புதிதாகத் தோன்றினாலும்
    புதிது புதிதாக உதாரணங்களை மாற்றாமல், தொன்றுதொட்டு
    ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரே உதாரணத்தை - மஹனீயர்களால்
    - ஆசார்ய புருஷர்களால் வழங்கப்பட்டுவந்த உதாரணத்தை விடுத்து
    தாமாக ஒரு புதிய உதாரணத்தைத் தெரிவிக்கமாட்டார்கள்.

    ஆனால் தற்போது, புதிது புதிதாக இதுபோல தங்களது மேதாவிலாசத்தைத்
    தெரிவிக்க வழங்கப்படும் புதிய உதாரணங்கள் மலிந்துவிட்டால்
    பின்வரும் சந்ததியினருக்குச் சரியான விஷயங்கள் சென்றடைவது
    மிகவும் துர்லபம் ஆகிவிடும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X