Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 05 / 29

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 05 / 29

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 05 / 29

    .

    உன் அருளால் , எம்பெருமான் , எங்களை , அருள்கிறான் !

    .

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .

    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .

    अस्मादृशाम् , अपकृतौ , चिर - दीक्षितानाम् ,

    अह्नाय , देवि ! , दयते , यत् , असौ , मुकुन्द : |

    तत् , निश्चितम् , नियमित: , तव , मौलि - दाम्ना ,

    तन्त्री , निनाद , मधुरै: च , गिराम् , निगुम्भै: ||

    .

    அஸ்மாத்ருசாம் , அபக்ருதௌ , சிர - தீக்*ஷிதாநாம் ,

    அஹ்நாய , தேவி ! , தயதே , யத் , அஸௌ , முகுந்த: |

    தத் , நிச்சிதம் , நியமித: , தவ , மௌளி - தாம்நா ,

    தந்த்ரீ , நிநாத , மதுரை: , ச , கிரம் , நிகும்பை: ||

    .

    देवि ............. கோதைப் பிராட்டியே !

    अपकृतौ ........ குற்றம், செய்வதில் ,

    चिर ............. நெடுநாட்களாக ,

    दीक्षितानाम् ..... விரதம் கொண்டுள்ள ,

    अस्मादृशाम् ..... எங்களைப் போன்றவர்களிடம் கூட ,

    असौ ............. இந்த ,

    मुकुन्द : .......... எம்பெருமான் ,

    अह्नाय ............ விரைவாக ,

    दयते ............. அருளுகிறான் ,

    यत् ............... என்ற ,

    तत् ............... அது ,

    तव ............... உன்னுடைய

    मौलि - दाम्ना ... சூடிக்கொடுத்த மாலையாலும் ,

    तन्त्री .............. வீணைத் தந்தியின்

    निनाद ............ ஒலி போன்ற ,

    मधुरै: ............. இனிமையான ,

    गिराम् ............ சொற்களின் ,

    निगुम्भै: च ........ தொகுப்பான பிரபந்தங்களாலும் ,

    नियमित: ......... கட்டுப்பட்டதால் என்று ,

    निश्चितम् ......... உறுதி ஆகிறது !

    .

    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * கோதைப் பிராட்டியே ! நாங்கள் , சாஸ்திரங்களை மீறி , பல குற்றங்களைச் செய்வதையே , விரதமாகக் கொண்டுள்ளோம். இப்படி , அபராதிகளான , எங்களைப் போன்றவர்களிடமும் , உன் நாயகனான , எம்பெருமான் , அப்பொழுதே , அருள் புரிகிறான்.

    * இதற்குக் காரணம் யாது என்று , சிந்தித்துப் பார்க்கும்போது , ஒரு உண்மை விளங்குகிறது.

    * அதாவது , நீ சூடிக் கொடுத்த , பூமாலையால் , கட்டப்பட்டு , எம்பெருமான் , உன் வசப்படுகிறஈன்

    * அத்துடன் , அவனை , இனிய பிரபந்தங்கள் ஆகிய , மொழிகளைக் கொண்டு , நீ , துதிக்கிறாய்.

    * வீணையின் , நரம்புகளிலிருந்து , எழும் ஒலி போல் , உன் , திரு வாயிலிருந்து , எழும் இனிய சொற்களின் கோவைகளால் , பின்னும் , உனக்கு , அவன் வசப்படுகிறான்.

    * அதனால் , உன் குழந்தைகளான , எங்கள் குற்றங்களைப் , புறக்கணித்து , எங்கள் மீது , எம்பெருமான் , அருள் புரிகிறான் . இது உறுதி .
Working...
X