Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 07 / 29. . வால்மீகியின் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 07 / 29. . வால்மீகியின் 

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 07 / 29.


    .


    வால்மீகியின் வாக்குகள் , இனிப்பது ஏன் ?


    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :


    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    वल्मीकत : , श्रवणतो , वसुधा - आत्मन : , ते ,


    जातो , बभूव , स , मुनि : , कवि - सार्वभौम : |


    गोदे ! , किम् , अद्भुतम् , इदम् , यत् , अमी , स्वदन्ते ?


    वक्त्र - अरविन्द , मकरन्द - निभा : , प्रबन्धा : ||


    .


    வல்மீகத : , ச்ரவணதோ , வஸுதா - ஆத்மந : , தே ,


    ஜாதோ , பபூவ , ஸ , முநி : , கவி - ஸார்வபௌம : |


    கோதே ! , கிம் , அத்புதம் , இதம் , யத் , ஸ்வதந்தே ?


    வக்த்ர - அரவிந்த , மகரந்த - நிபா : , ப்ரபந்தா : ||


    .


    गोदे ...................... .கோதைப் பிராட்டியே !


    वसुधा - आत्मन : ..........பூமி தேவி ஆகிய ,


    ते ..........................உனது ,


    श्रवणतो ................... செவி ஆன ,


    वल्मीकत : ............... .புற்றிலிருந்து ,


    जातो ...................... தோன்றிய ,


    स मुनि : ............... ..அந்த வால்மீகி முனிவர் ,


    कवि - सार्वभौम : ... .....கவிச் சக்ரவர்த்தியாக ,


    बभूव ................... ..ஆனார் !


    वक्त्र - अरविन्द ......... .உனது , திரு முகம் ஆகிய தாமரையின் ,


    मकरन्द - निभा : .........தேன் போன்ற ,


    अमी ......................இந்த ,


    प्रबन्धा: ................. .பிரபந்தங்கள் ,


    स्वदन्ते ................. ..மிக இனிக்கின்றன !


    यत् इदम् ................ .இது ,


    किम् अद्भुतम् ............ .என்ன ஆச்சர்யம் !


    .


    ஸ்ரீ உப. வ.ந.ஸ்ரீ ராமதேசிகாசார்யர் விளக்கவுரை :


    * கோதைப் பிராட்டியே ! பூமியில் உள்ள மண் புற்றைப் , பூமி தேவியின் , காது என ,வேதம் கூறுகிறது . நீ பூமி தேவியின் அம்சம் ஆனதால் , புற்று , உனக்குக் காது ஆகிறது


    * அந்தப் புற்றிலிருந்து தோன்றியவர் , வால்மீகி மஹரிஷி. அவர் கவிச் சக்ரவர்த்தி எனப் புகழ் பெற்றார்.


    * உன் காது ஆகிய புற்றிலிருந்து பிறந்த வால்மீகியே, அற்புதமான ஸூக்தியான ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாடி , கவிகளுள் , முதன்மையும் , தலைமையும் , பெற்றிருக்கிறார்.


    * அப்படி இருக்க , உன் திருமுகத்திலிருந்து , வெளிவந்த பிரபந்தங்கள் , தாமரையில் இருந்து , பெருகும் , தேன் போல , எம்பெருமானுக்கும் , உலக மக்களுக்கும் , திவ்ய அம்ருதமாய் , விளங்கி , பரம போக்யமாய் இருப்பதில் , என்ன ஆச்சரியம் ?
Working...
X