என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளி ஆகி, நான் நன்னெறியையே பற்றி மேலோனாகி, சிவ ஞானம் என் மனதில் ஊன்றுவதாகி, யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக.
என் செல்வமே. அழிவில்லாத பொருளே, என் தியானப் பொருளே. நன்மை தரும் கடவுளே, என் புகலிடமே, யாவராலும் புகழப்படும் மேலான செவ்வேளே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்குப் பர யோகம் தந்து அருள்வாய்.
விளக்கக் குறிப்புகள்
நிதியே...
நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.. . திருநாவுக்கரசர் தேவாரதம்.
Bookmarks