Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 08 / 29 ஆழ்வார்கள் ஆண்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 08 / 29 ஆழ்வார்கள் ஆண்

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 08 / 29

    .

    ஆழ்வார்கள் ஆண்டாளை எதற்கு , பின் பற்றினர் ?



    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम
    .



    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .




    भोक्तुम् तव प्रियतमम् भवती इव गोदे


    भक्तिम् निजाम् प्रणय भावनया ग्रुणन्त:|


    उच्चावचै: विरह संगमजै: उदन्तै:


    श्रुङ्गारयन्ति हृदयम् गुरव: त्वदीया: ||


    .


    போக்தும் தவ ப்ரியதமம் பவதீ இவ கோதே


    பக்திம் நிஜாம் ப்ரணய பாவனையா க்ருணந்த: |


    உச்சாவசை: விரஹ ஸங்கமஜை : உதந்தை :


    ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவ: த்வதீயா: ||


    :


    गोदे .............. கோதைப் பிராட்டியே !


    त्वदीया: ......... உன்


    गुरव: ............. தந்தை பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்கள் ,


    तव ............... உன்னுடைய


    प्रियतमम् ........ மிகப் பிரியமான பகவானை ,


    भवती इव ........ உன்னைப் போலவே ,


    भोक्तुम् .......... அனுபவிப்பதற்கு ,


    निजाम् ........... தன்னுடைய


    भक्तिम् ........... பக்தியை ,

    प्रणय ............. காதலாக


    भावनया .......... பாவித்து ,


    ग्रुणन्त: ........... பேசுபவர்களாய் ,


    उच्चावचै: ........ பல்வகைப் பட்ட


    विरह ............. பிரிதல் ,


    संगमजै: .......... கூடுதல் ,இவற்றைப் பற்றிய


    उदन्तै: ............ பேச்சுக்களால் ,


    हृदयम् .............தங்கள் மனதை ,


    श्रुङ्गारयन्ति .... ச்ருங்காரப் படுத்திக் கொள்கின்றனர் !




    .


    ஸ்ரீ உப. வ.ந. ஸ்ரீ ராம தேசிகாச்சார்யார் விளக்கவுரை :


    * கோதைப் பிராட்டியே ! நீ இயற்கையில் , பெண்ணாய்த் தோன்றியவள் ; ஆநலால், ஆண்மகனான எம்பெருமானை , பல்வேறு வகைகளில் , நீ அனுபவித்து மகிழ்வதற்கு , உனக்கே , உரிமையும் , கடமையும் , முறையும் உண்டு .


    * உன் தந்தையான பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்கள் , உன் காதலனான எம்பெருமானை , நீ அநுபவிப்பது போலவே , அனுபவிக்க வேண்டும் என்று , மிக்க ஆசை கொண்டனர்.


    * ஆண்மக்கள் ஆகிய அவர்களுக்கு , இது இயலுமா ? ஏற்குமா ? அதற்காக அவர்கள் ஒரு யுக்தி செய்தனர் .


    * அவர்கள் தங்களையே பெண்களாக பாவித்துப் , பெண் உடை உடுத்தனர். தங்களுக்கு பகவானிடம் உள்ள பக்தியையே , காதலாக , மாற்றிக்கொண்டனர்.


    * ஆகவே , எம்பெருமானைப் பிரிந்து வருந்தல் , பின் கூடுதல் , தூது விடுதல் , மடல் ஊர்தல் , முதலிய பல்வேறு நிலைகளை எல்லாம் , தாங்கள் கொண்டு , அநுபவித்தனர்.


    * இவ் வநுபவத்தின் விளைவாகத் , தங்கள் பாசுரங்களிலும் , இவ்வரலாறுகளை அமைத்துப் பாடினர்.


    * இங்ஙனம் இருக்க, இயற்கையிலேயே பெண்ணாகத் தோன்றிய , உனக்கு எம்பெருமானிடம் உள்ள அநுபவம் , இத்தகையது என்று , எங்களால் சொல்லப் போமோ !


    Last edited by sridharv1946; 22-01-18, 09:53.
Working...
X