Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எ

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எதனால் ஏற்றம் ?


    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||




    .
    दिक् दक्षिणा अपि , परिपक्त्रिम , पुण्य - लभ्यात् ,



    सर्व - उत्तरा , भवति ! देवि ! तत्र , अवतारात् |


    यत्र एव , रङ्ग - पतिना , बहुमान - पूर्वम् ,


    निद्रालुना अपि , निहतम् , निहिता: कटाक्षा: ||


    .


    திக் தக்ஷிணா அபி , பரிபக்த்ரிம , புண்ய - லபியாத் ,


    ஸர்வ - உத்தரா , பவதி ! தேவி ! தத்ர , அவதராத் |



    யத்ர ஏவ , ரங்க - பதினா , பஹுமான - பூர்வம் ,


    நித்ராலுனா அபி , நிஹதம் , நிஹிதா: கடாக்ஷா: ||

    .


    देवि ................... கோதைப் பிராட்டியே !



    निद्रालुना अपि ........உறங்கிக் கொண்டிருந்தாலும் ,



    रङ्ग - पतिना ........திருவரங்கப்பெருமானால் ,


    बहुमान - पूर्वम् ...... மிக்க மதிப்புடன் ,



    नियतम् ..............எப்போதும் ,


    यत्र एव ................எங்கு ,




    कटाक्षा: ...............கடாக்ஷங்கள் ,


    निहिता: ...............செலுத்தப்பட்டனவோ ,


    दक्षिणा दिक् अपि ..அந்தத் தெற்குத் திசை , கூட ,



    परिपक्त्रिम ...........பக்குவமான ,


    पुण्य ..................புண்யத்தால் மட்டுமே ,


    लभ्यात् ...............பெறத்தக்க ,


    तव ....................உனது ,



    अवतारात् ........... அவதாரத்தால் ,



    सर्व - उत्तरा .......... எல்லாவற்றிற்கும் , மேலானதாக ,


    भवति .................ஆகிறது !




    .

    * கோதைப் பிராட்டியே ! ஒரு திசையில் , நீ அவதரிப்பது என்றால் , அந்தத் திசை , எத்தனையோ புண்யம் செய்திருக்க வேண்டும். அந்தப் புண்யம் , பயன் தருவதற்கு , ஏற்ற பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும்.


    * ஸ்ரீ வில்லிபுத்தூரில் , நீ அவதரிப்பதற்கு , தென் திசை, செய்த பெரும் புண்யம் , பழுத்த நிலையில் , நின்றது. உனது அவதாரத்தால் , தென் திசை , மற்2ற எல்லா திசைகளையும் விடப் , பெருமை பெற்று , சிறந்தது ஆயிற்று.


    * உன் நாயகனான எம்பெருமான் , திருவரங்கத்தில் பள்ளி கொண்டு , உலக நலத்தை ,சிந்தையில் கொண்டே , உறங்குகிறான். அப்போதும் , நீ அவதரித்த தென் திசையில் , பெரு மதிப்பு கொண்டு , அத்திசையையே , எம்பெருமான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்.


    * உனது அவதாரத்தால் அன்றோ அத்திசைக்கு , இப்பேறு வாய்த்தது .


    [ உத்தரா என்ற சொல் , வட திசையையும் , மேம்பட்டதையும் , கூறும். தென் திசை , வடதிசை ஆயிற்று என்ற முரண்பாட்டையும் , தென் திசை மேம்பட்டது என்று முரண்பாடு ஒழிதலையும் , காண்க ]


    மணமகன் , மணமகளைப் பார்த்தல் என்ற முறை , இங்கு குறிக்கப்படுவதாகக் கூறுவர் .



Working...
X