Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 13 / 29. . . பரிஹாஸமா ? பெரு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 13 / 29. . . பரிஹாஸமா ? பெரு&

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 13 / 29. .


    . பரிஹாஸமா ? பெருமையா ?


    .







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||









    .

    नागे - शय: ; सु- तनु ! , पक्षि - रथ: ; , कथं , ते ,

    जात: ? स्वयम् - वर - पति: , पुरुष: , पुराण: |

    एवं विधा: , समुचितम् , प्रणयम् , भवत्या: ,

    संदर्शयन्ति , परिहास - गिर: सखीनाम् ||

    .

    நாகே - சய: ; ஸு - தநு ! , பக்ஷி - ரத: ; கதம் , தே ,

    ஜாத: ? ஸ்வயம் - வர - பதி: , புருஷ: , புராண: |

    ஏவம் விதா: , ஸமுசிதம் , ப்ரணயம் , பவத்யா: ,

    ஸந்தர்சயந்தி , பரிஹாஸ - கிர: , ஸகீனாம் ||
    .

    सु - तनु ..... "அழகிய திருமேனி உடைய பிராட்டியே !

    ते ............. உனக்கு ;

    नागे .......... பாம்பில் ,

    शय: ......... படுப்பவரும் ;


    पक्षि ......... பறவையில் ,

    रथ: .......... செல்பவரும் ;

    पुराण: ....... வயதான ,

    पुरुष: ........ புருஷனும் ; ஆன ஒருவர் ,

    कथम् .........எவ்வாறு ,


    स्वयम् ........ நீயே ,

    वर ............ வரித்த ,

    पति: ......... கணவர் ,


    जात: ........ ஆனார் ?"

    एवं विधा: .... இப்படி ,

    सखीनाम् .... தோழிகளின் ,

    परिहास ...... கேலிப் ,

    गिर: .......... பேச்சுக்கள் ,

    भवत्या: ....... உங்களுக்கு ,

    समुचितम् ..... தகுந்த ,

    प्रणयम् ........ காதலைக் ,


    संदर्शयन्ति .... காட்டுகின்றன !



    sri வ.ந.sri ராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * கோதைப் பிராட்டியே ! உன் திருமேனியின் அழகு , கூறத் தக்கதன்று ! உன் தோழிகள் உன்னைப் பல வகையில் , பரிஹாஸம் செய்கின்றனர் . அதாவது -

    *" நீயாக , விரும்பி , ஒருவரைக் கணவனாக வரித்தாயே ! உன்அழகு என்ன ? அதற்கு ஏற்றவனாக வரிக்க வேண்டாமா ?

    * நீ வரித்தவருக்கு , ஒரு நல்ல படுக்கை உண்டா ? பிறர் அஞ்சும் , கொடிய பாம்பில் அன்றோ படுப்பவர் ! அவருடன் , நீயும் பாம்பின் மேல் பள்ளி கொள்ள வேண்டுமே ?

    * இது மட்டுமா ? நீ அவருடன் உல்லாசமாக வெளியில் செல்ல வேண்டுமானால் , ஒரு பறவையின் மேல் அன்றோ , நீயும் , ஏறி அமர வேண்டும் ! நாங்கள் எல்லோரும், கண்டு களிக்கத் , தரையில் ஒரு ஊர்வலம் வர இயலுமோ ! கருடன் உங்களைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் அன்றோ பறப்பான் !

    * மேலும் , நீ வரித்த் கணவனுக்கு, வாலிபப் பருவமாவது உண்டா ? அவர் பிறந்த காலமே யாருக்கும் தெரியாதாம். நெடு நாளைய முதியவரை அன்றோ விரும்பி , வரித்துள்ளாய் ! என்ன செயலைச் செய்தாய் ? " என்றெல்லாம் தோழிகள் உன்னைப் பரிஹாஸம் செய்கின்றனர்.

    * உண்மையில் , இந்தச் சொற்கள் , "நீ , உன் பெருமைக்கு ஏற்ற வரனையே விரும்பிக் காதலித்தாய் " என்பதையே காட்டுகின்றன.

    * எக்காலத்திலும் , எவ்விடத்திலும் , எந்த நிலையிலும் , எல்லா வகைக் கைங்கர்யங்களையும் , செய்பவனாய் , நறுமணம் , அழகு , குளிர்ச்சி , அகன்றமை , உயர்வு , மென்மை முதலிய சிறப்புகளைப் பெற்ற , ஆதி சேஷன் மேல் , பள்ளி கொண்டவரை , அன்றோ , நீ வரித்திருக்கிறாய் !

    * மேலும் , வேத ஸ்வரூபனாய் , ஸகல சக்திகளையும் பெற்ற கருடனை , வாஹனமாய்க் கொண்ட , பரம புருஷனை அன்றோ , நீ வரித்திருக்கிறாய் !

    * மேலும் , பிரமன் முதலிய தேவர்களாலும் , அறிய முடியாதவரய் , பிறப்பு , இறப்பு , ஒன்றும் அற்றவராய், எல்லா உலகங்களுக்கும் , காரணமான பரம்பொருளை அன்றோ , நீ வரித்துள்ளாய் !

    * ஆக , அவர்கள் கூறும் பரிஹாஸச் சொற்கள் , நீ உன் பெருமைக்கு ஏற்ற காதலரையே , வரித்த உன் அறிவின் சீர்மையையே காட்டுகின்றன.
Working...
X