Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 14 / 29 . சூடிக் கொடுத்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 14 / 29 . சூடிக் கொடுத்Ī

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 14 / 29


    .


    சூடிக் கொடுத்த மாலையின் , பெருமை என்ன ?


    त्वत् , भुक्त , माल्य , सुरभी - कृत , चारु , मौले:


    हित्वा , भुजान्तर - गताम् , अपि , वैजयन्तीम् ।


    पत्यु: , तव , ईश्वरि ! मिथ: , प्रतिघात , लोला: ,


    बर्ह , आतपत्र , रुचिम् , आरचयन्ति भृंगा: ।।


    .


    த்வத் , புக்த , மால்ய , ஸுரபீ - க்ருத , சாரு , மௌளே: ,


    ஹித்வா , புஜாந்தர - கதாம் , அபி , வைஜயந்தீம் |


    பத்யு: , தவ , ஈச்வரி ! மித: , பரதிகாத , லோலா: ,


    பர்ஹ - ஆதபத்ர , ருசிம் , ஆசரயந்தி , ப்ருங்கா: ।।


    .


    ईश्वरि ............ தலைவியான , பிராட்டியே !


    भृंगा: ............. வண்டுகள் ,


    त्वत् ............... உன்னால் ,


    भुक्त .............. சூடப்பட்ட ,


    माल्य .............. மாலைகளால் ,


    सुरभी .............. நறுமணம் ,


    कृत ............... பெற்ற ,


    चारु ............... அழகிய ,


    मौले: .............. திருமுடியை உடைய ,


    तव ................. உனது ,


    पत्यु: ............... நாயகனின் ,


    भुजान्तर ........... திரு மார்பில் ,


    गताम् .............. இருக்கும் ,


    वैजयन्तीम् अपि ... வைஜயந்தி எனும் வனமாலையை ,


    हित्वा ............... விட்டுவிட்டு ,


    मिथ: ............... ஒன்றுக்கொன்று ,


    प्रतिघात .............மோதிக் கொண்டு ,


    लोला: ............... மேலே வட்டமிட்டு ,


    बर्ह ................... மயில் தோகையால் ஆன ,


    आतपत्र .............. ஒரு குடை போன்ற ,


    रुचिम् ................ அழகை ,


    आरचयन्ति ........... உருவாக்குகின்றன.


    .


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * எல்லா உலகிற்கும் , தலைவியான , பிராட்டியே ! உன் நாயகனான எம்பெருமானுடைய , திருமார்பில் ,
    வைஜயந்தி எனும் வனமாலை தெய்வீக நறுமணம் கொண்டு , திகழ்கிறது. அந்த மணத்தைக் கண்டு , அம் மாலையின் மீது , வண்டுகள் , மொய்த்துக் கொண்டிருந்தன.


    * நீ சூடிக்களைந்த மாலையை, உன் நாயகன் , தன் முடியில் , சூட்டிக் கொண்டதால் , அவனது , குழற்கற்றை , உயர்ந்த மணத்தைக் பெற்றது.


    * வனமாலையில் , மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் , தாம் இருந்த வனமாலையைவிட , திருமுடியில் உள்ள , நீ சூடிக் கொடுத்த மாலையின் மணம் , மிகுதியாக இருப்பதைக் கண்டு கொண்டன.


    * உடனே , வனமாலையைவிட்டு நீங்கி, அவனுடைய முடியில் , இடம் பெற முயன்றன. அதற்காக , ஒன்றுக்கு ஒன்று , மோதிக்கொண்டு , வட்டமிட்டுச் சுற்றுகின்றன.


    * அவ்வாறு சுற்றும்போது , மயில் தோகைகளால் , எம்பெருமானுக்கு , ஒரு குடை விரித்தாற்போல , விளங்குகின்றது.


    * இப்படி , வனமாலையைவிட , மிகச் சிறப்பு கொண்டது , நீ சூடிக் கொடுத்த மாலை


    * [இச் சுலோகத்தில் , மணமகன் குடை , மாலை முதலியவற்றுடன் , விரதம் அனுஷடிக்கும் முறை , குறிக்கப் பட்டதாகப் , பெரியோர் கூறுவர்]
Working...
X