Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29

    .

    சூடிக்கொடுத்த மாலை , வனமாலையைவிட உயர்ந்தது !

    .

    आमोदवती , अपि , सदा , हृदयंगमा , अपि ,

    राग - अन्विता , अपि , ललिता , अपि , गुण - उत्तरा , अपि ।

    मौलि , स्रजा , तव , मुकुन्द , किरिट , भाजा ,

    गोदे ! भवति , अधरिता , खलु , वैजयन्ती ।।

    .

    ஆமோதவதீ , அபி , ஸதா , ஹ்ருதயங்கமா , அபி ,

    ராக - அன்விதா , அபி , லலிதா , அபி , குண - உத்தரா , அபி ।

    மௌளி , ஸ்ரஜா , தவ , முகுந்த , கிரீட , பாஜா ,

    கோதே ! பவதி , அதரிதா , கலு , வைஜயந்தீ ||

    .

    गोदे ...................... கோதைப் பிராட்டியே !

    वैजयन्ती ................ வைஜயந்தீ எனும் வனமாலை ,

    सदा ...................... எப்பொழுதும் ,

    आमोदवती अपि ...... நறுமணத்தோடு ( மகிழ்ச்சியாக) இருந்தாலும் ,

    हृदयंगमा अपि ......... மார்பில் இருந்து (மனதுக்கு உகந்ததாய்) இருந்தாலும் ,

    राग - अन्विता अपि.... சிகப்பு நிறம் (காதலை) உடையதாய் இருந்தாலும் ,

    ललिता अपि ............ மென்மையாய் (மெலிந்து ) இருந்தாலும் ,

    गुण - उत्तरा अपि ....... நற்குணங்கள் பெற்றிருந்தாலும் ,

    मुकुन्द .................... பகவானுடைய

    किरिट भाजा ............ கிரீடத்தை அடைந்த

    तव मौलि स्रजा ......... உன் திரு முடி மாலையை விட

    अधरिता खलु .......... மிகத் தாழ்ந்ததாகவே

    भवति ..................... இருக்கிறது !

    .

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்கவுரை:

    * கோதைப் பிராட்டியே ! உன் நாயகன் எப்பொழுதும் அணிந்துள்ள , வைஜயந்திமாலை எனும் வனமாலை , மணம் உள்ளதுதான் . அவன் மனம் கவர்ந்ததுதான் . செம்மையும் , மென்மையும் உடையதுதான். இன்னும் பல சிறப்புகள் உடையதுதான் . ஆயினும் , அவன் திருமார்பிலேதான் இருக்கிறது. முடியில் இல்லை !

    * நீ சூடிக் கொடுத்த மாலை, அவனது தலையில் , கிரீடத்தை அலங்கரிக்கிறது. ஆதலால்
    மார்பில் இருக்கும் வனமாலையை விட உயர்வாக , மதிப்புடன் , இருக்கிறது.

    * [ இந்த ச்லோகத்தில் , மகிழ்ச்சியாக , கணவன் மனதுக்கு உகந்தவளாக , காதலை உடையவளாக , மெல்லியலாளாய் , நற்குணங்களை உடைய ஒரு பெண் , தன் கணவனிடம் செல்வாக்கினால், செருக்குக் கொண்ட மற்றொரு பெண்ணால் , தாழ்த்தப்படுவதைக் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் ]

    * இந்த சுலோகத்தில் , அரங்கன் - கோதைப் பிராட்டி இவர்களின் திருமணத்திற்குப் பூர்வாங்கமான மாலை மாற்றுதல் குறிப்பாக உணர்த்தப்படுகிறது
Working...
X