Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 21 / 29 . மாலை மாற்றினாள

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 21 / 29 . மாலை மாற்றினாள

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 21 / 29

    .

    மாலை மாற்றினாள் கோதை !

    .

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .

    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .

    रङ्ग - ईश्वरस्य , तव , च , प्रणय , अनुभन्धात् ,

    अन्योन्य , माल्य , परिवृत्तिम् , अभिष्टुवन्त : |

    वाचालयन्ति , वसुधे ! , रसिका: , त्रिलोकीम् ,

    न्यून , अधिकत्व , समता , विषयै: , विवादै: ||

    .

    ரங்க - ஈஸ்வரஸ்ய , தவ , ச , ப்ரணய , அனுபந்தாத் ,

    அன்யோன்ய , மால்ய , பரிவ்ருத்திம் , அபிஷ்டுவந்த: |

    வாசாலயந்தி , வஸுதே ! , ரஸிகா: , த்ரிலோகீம் ,

    ந்யூன , அதிகத்வ , ஸமதா , விஷயை : , விவாதை : ||

    .

    वसुधे .............. பூமா தேவியின் அம்சமான கோதைப் பிராட்டியே !

    रङ्ग - ईश्वरस्य .. திரு அரங்கப் பெருமானுக்கும் ,

    तव च ............ உனக்கும் , உள்ள ,

    प्रणय .............. காதலின் ,

    अनुभन्धात् .........தொடர்ச்சியால் ,

    अन्योन्य ........... ஒருவருக்கு , ஒருவர் ,

    माल्य .............. மாலையை ,

    परिवृत्तिम् .......... மாற்றிக் கொள்வதை ;

    अभिष्टुवन्त: ....... மிக விரும்புவர்களான ,

    रसिका: ........... பக்தர்கள் ;

    न्यून ............... குறைவு ,

    अधिकत्व ........ அதிகம் ,

    समता ............. சமம் ,

    विषयै: ............ ஆகியவைகளைப் பற்றிய ,

    विवादै: ............ வழக்குகளால் ,

    त्रिलोकीम् ......... மூன்று உலகங்களையும் ,

    वाचालयन्ति ....... ஒலிக்கச் செய்கின்றன !

    ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    *
    பூமிப் பிராட்டியின் அம்சமாக அவதரித்த , கோதைப் பிராட்டியே ! உனக்கும் , திரு அரங்கப் பெருமானுக்கும் , ஒருவருக்கு , ஒருவர் , உள்ள காதல் மிகுதியால் , உங்கள் இருவருக்கும் , திருமணம் நடந்தது அன்றோ !

    * அப்போது , ஒருவருக்கு ஒருவர், மாலை மாற்றிக் கொள்வது உண்டே ! உனது மாலையை , அவன் மிக மதித்துத் , தரிப்பதும் , அவனது மாலையை , நீ தரிப்பதும் , நடந்திருக்குமே ! இந்த வைபவத்தை , உலகில் உள்ள ரஸிகர்கள் , இன்றும் , மிகவும் ,போற்றிப் பேசுகின்றனர் .

    *அவர்களில் சிலர் , உன் நாயகனுக்கு , உன்பால் உள்ள ,கௌரவத்தைக் கண்டு , உன்னை , அவனிலும் மேம்பட்டவளாகக் கூறி, அவன் , சிறிது தாழ்ந்தவன் என்று வழக்கு ஆடுகின்றனர் .

    * சிலர் , மனைவி என்ற முறையில் , நீ அவனுக்கு வசப்பட்டிருப்பதைக் கண்டு , அவனை , மேம்பட்டவனாகவும் , நீ , சிறிது தாழ்ந்தவள் என்று வாதாடுகின்றனர்.

    * நடுநிலையில் உள்ள சிலர் , உங்கள் இருவரையும், சமம் என்றே கூறுகின்றனர்.

    * இத்தகைய வாதங்களை, ஒருவருக்கு ஒருவர் , ஆர்வம் மிகப் பேசும்போது , அவ்வொலி , மூவுலகையும் , எதிரொலிக்கச் செய்கிறது .

    [இங்கு மாலை மாற்றல் வைபவம் குறிக்கப் பட்டது என்பர்]
Working...
X