Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    218. தாரணிக்கதி


    218
    காசி


    தான தத்தன தான தானன
    தான தத்தன தான தானன
    தான தத்தன தான தானன தனதான


    தார ணிக்கதி பாவி யாய்வெகு
    சூது மெத்திய மூட னாய்மன
    சாத னைக்கள வாணி யாயிறு மதிமோக
    தாப மிக்குள வீண னாய்பொரு
    வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
    தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப்
    பூர ணச்சிவ ஞான காவிய
    மோது தற்புணர் வான நேயர்கள்
    பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப்
    பூசி மெய்ப்பத மான சேவடி
    காண வைத்தருள் ஞான மாகிய
    போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே
    வார ணத்தினை யேக ராவுமு
    னேவ ளைத்திடு போது மேவிய
    மாய வற்கித மாக வீறிய மருகோனே
    வாழு முப்புற வீற தானது
    நீறெ ழப்புகை யாக வேசெய்த
    மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே
    கார ணக்குறி யான நீதிய
    ரான வர்க்குமு னாக வேநெறி
    காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா
    கான கக்குற மாதை மேவிய
    ஞான சொற்கும ராப ராபர
    காசி யிற்பிர தாப மாயுறை பெருமாளே.




    பதம் பிரித்தல்


    தாரணிக்கு அதி பாவியாய் வெகு
    சூது மெத்திய மூடனாய் மன
    சாதனை களவாணியாய் உறும் அதி மோக


    தாரணிக்கு = (இந்தப்) பூமியில் அதி பாவியாய் = மிகவும் பாவச் செயல்களை செய்பவனாய்வெகு சூது மெத்திய = மிக்க வஞ்சகம் நிறைந்தவனாய் மூடனாய் = முட்டாளாய்மனசாதனை = மனத்தால் எண்ணுவதில் களவாணியாய் = போலியாய் உறும் = இருக்கும் அதி = மோக = மிக்க காம மயக்கில்.


    தாப(ம்) மிக்கு உள வீணனாய் பொரு
    வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள்
    தாம் உ(ய்)ய செ(ய்)யும் ஏது தேடிய நினைவாகி


    தாபம் மிக்கு உள வீணனாய் = விரகம் மிகுந்துள்ள பயனற்றவனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகும் = சண்டைக்கு உற்ற வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்களானமாதர்கள் = பொது மகளிர்கள் தாம் உய்ய = தாம் பிழைக்கும்படி செய்யும் = உதவும் ஏது தேடிய நினைவாகி = செல்வத்தை தேடித் தரும் நினைவைக் கொண்டு.




    பூரண சிவ ஞான காவியம்
    ஓது(ம்) தற்ப உணர்வான நேயர்கள்
    பூசும் மெய் திரு நீறு இடா இரு வினையேனை


    பூரண = எங்கும் நிறைந்த சிவ ஞான காவியம் அது = சிவதத்துவ நூல்களை ஓதும் தற்ப உணர்வான = ஓதுகின்ற தன்மையை உடையநேயர்கள் = அடியார்கள் மெய்ப் பூசும் = உடலில் இடுகின்ற திரு நீறு இடா = திரு நீற்றை உடலில் இடாத இரு வினையேனை = பெரிய தீ வினைகளை உடையவனாய் (திரியும் என்னை).


    பூசி மெய் பதமான சேவடி
    காண வைத்து அருள் ஞானம் ஆகிய
    போதகத்தினையே ஏயும் மாறு அருள் புரிவாயே


    பூசி = (அத்திரு நீற்றை) அணியச் செய்து மெய்ப் பதமான = உண்மையான நிலையாகிய சேவடி காண வைத்து அருள் = திருவடியைக் காணும்படிச் செய்து அருளிய ஞானமாகிய போதகத்தினையே = ஞான அறிவை ஏயும் மாறு= நான் அடையும்படி அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.


    வாரணத்தினையே கராவும் மு(ன்)னே
    வளைத்திடு போது மேவிய
    மாயவற்கு இதமாக வீறிய மருகோனே


    வாரணத்தினையே = (கஜேந்திரனாகிய) யானையை கராவும் = முதலையும் முன்னே = முன்னொரு நாளில் வளைத்திடு போது = (காலைப்பற்றி) வளைத்த போது மேவிய மாயவற்கு = சென்று உதவிய மாயவனாகிய திருமாலுக்கு இதமாக = இன்பம் தரும்படிவீறிய மருகோனே = மேம்பட்டு விளங்கும் மருகனே.





    வாழும் முப்புர(ம்) வீறதானது
    நீறு எழ புகையாகவே செய்த
    மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே


    வாழும் = வாழ்ந்திருந்த முப்புரம் வீறதானது = முப்புரங்களின் பொலிவு நீறு எழ = சாம்பலாகும்படி புகையாகவே செய்த = (நெற்றிக் கண்ணால்) எரித்த மா மதிப் பிறை = சிறந்த பிறைச் சந்திரனை வேணியர் அருள் = சடையில் தரித்த சிவ பெருமான் ஈன்றருளிய புதல்வோனே = மகனே.


    காரண குறியான நீதியர்
    ஆனவர்க்கு மு(ன்)னாகவே நெறி
    காவிய சிவ நூலை ஓதிய கதிர்வேலா


    காரணக் குறியான = (அனைத்துக்கும்) மூல காரணனாகிய நீதியரானவர்க்கு = பெற்றியை உடைய சிவபெருமானுக்கு முன்னாகவே = பண்டை நாளில் நெறி காவியச் சிவ நூலை = சிவநூலாகிய தேவாரத்தை ஓதிய = (சம்பந்தராக வந்து) ஓதிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலாயுதனே.


    கானக குற மாதை மேவிய
    ஞான சொல் குமரா பராபர
    காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே.


    கானகக் குற மாதை = காட்டில் வாழ்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை மேவிய = நாடிச் சென்ற ஞான சொல் குமரா = ஞான குருவாகிய குமரனே பராபர = தயாள குணமுடையவனேகாசியில் = காசி என்னும் தலத்தில் பிரதாபமாய் உறை = புகழ் கொண்டு வீற்றிருக்கும்.பெருமாளே = பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    பூரணச் சிவஞான காவியம் ஓது...
    தேவார திருவாசக நூல்களைக் குறிக்கும்.


    ஒப்புக


    1. வாரணத்தினை யேக ராவுமு...

    திவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட ...திருப்புகழ்,பகர்தற்கரி
    ஆனைமடு வாயிலன்று மூலமென வோல மென்ற .....திருப்புகழ்,சாலநெடு
    கடகரி அஞ்சி நடுங்கி................................. திருப்புகழ், சருவியிகழ்ந்து

    வரலாறு பாடல் 225 விள்க்கத்தில் பார்க்கவும்


    2, வாழுமுப்புர வீற தானது...

    அரிய திரிபுர மெரிய விழித்தவன்………………………….... திருப்புகழ், குருவியெனப்பல.
Working...
X