Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 07 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 07 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

    श्री भगवत् ध्यान सोपानम् - 07 / 12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் திருக்கைகள்














































































































































































































    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


















































































    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||








































































































































    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:





















































    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    एकम् , लीला , उपहितम् ; इतरम् , बाहुम् , आजानु लम्बम् ;

    प्राप्ता , रंगे , शयितु: , अखिल , प्रार्थना , पारिजातम् |

    धृप्ता , सेयम् , धृढ , नियमिता , रश्मिभि: , भूषणानाम् ,

    चिन्ता , हस्तिनी , अनुभवति ! मे , चित्रम् , आलान यन्त्रम् ||


    ஏகம் , லீலா , உபஹிதம் ; இதரம் , பாஹும் , ஆஜாநு லம்பம் ;

    ப்ராப்தா , ரங்கே , ஶயிது: , அகில , ப்ரார்த்தநா , பாரிஜாதம் |

    த்ருப்தா , ஸேயம் , த்ருட , நியமிதா , ரஶ்மிபி: , பூஷணாநாம் ,

    சிந்தா , ஹஸ்திநி , அநுபவதி ! மே , சித்ரம், ஆலாந யந்தரம் ||



    रंगे ............ திரு அரங்கத்தில் ,

    शयितु: ....... பள்ளி கொண்ட ;

    अखिल ....... எல்லோருடைய ,

    प्रार्थना ........ விருப்பங்களையும் , நிறைவேற்ற வல்ல ,

    पारिजातम् ... கற்பக மரம் போன்ற அரங்கனது

    लीला ......... விளையாட்டாக ,

    उपहितम् ...... தலையணை ஆக்கப்பட்ட ,

    एकम् .......... ஒரு

    बाहुम् .......... (வலது) திருக்கரத்தையும் ;

    आजानु ........ முழந்தாள் வரை ,

    लम्बम् .......... நீண்ட

    इतरम् .......... மற்றோர்

    (बाहुम्) ........ (இடது) திருக்கரத்தையும் ;

    प्राप्ता .......... பற்றிக்கொண்டு ,

    धृप्ता ........... (அதனால் ,) செருக்கு கொண்ட ,

    सा .............. அத்தகைய ,

    इयम् ............ இந்த ,

    मे ................ எனது ,

    चिन्ता ........... நினைவு எனும் ,

    हस्तिनी ......... பெண் யானை ,

    भूषणानाम् ...... திரு ஆபரணங்களின்

    रश्मिभि: ........ ஒளிகள் எனும் , கயிற்றால் ,

    धृढ .............. இறுக்கமாக ,

    नियमिता ....... பிணிக்கப்பட்டு ,

    चित्रम् ........... விசித்ரமான

    आलान यन्त्रम् .. கட்டுத்தறியில் , கட்டுப்படுவதை ,

    अनुभवति ....... அனுபவிக்கிறது !

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * தேவலோகத்தில் உள்ள , கற்பக மரம் , மற்ற பலன்களைக் கொடுக்க வல்லது ஆயினும் , மோக்ஷம் எனும் , பெரும் பயனை அளிக்கும் , திறம் உடையது அன்று .

    * அரங்கனுடைய , திருக்கரங்களோ , எல்லோருக்கும் , எல்லாப், பயன்களையும் அளிப்பது மட்டுமின்றி , ப்ரபத்தியைச் செய்தவர்களுக்கு , மோக்ஷத்தையும் அளிக்க வல்லன ; ஆதலினால் , இவை , விசித்ரமான , கற்பக மரம் போன்றவை .

    * இவற்றுள் , வலது திருக் கரத்தை , விளையட்டாகத் , தன் ,திருமுடிக்குக் கீழே , தலையணையாகக்கொண்டுள்ளான் அரங்கன்.

    * இடது , திருக்கரம் , அவனுடைய , முழந்தாள் அளவு , நீண்டு , விளங்குகிறது.

    * என் சிந்தனை , இந்த இரண்டு திருக்கைகளின் , அழகிலேயே , ஆழ்ந்து , கிடப்பதால், பேரின்பம் பெற்ற செருக்குக் கொண்டுள்ளது.

    * உலகில் , மிக்கச் செருக்குக் கொண்டு , திரியும் , ஒரு , பெண் யானையைப் , பெரும் கயிறுகளாலோ , சங்கிலிகளாலோ , கட்டிப் பிணித்துக் , கட்டுத்தறியில் , அடைத்தால் , அடங்கி , நிற்பது உண்டு.

    * என் சிந்தனையே செருக்குக் கொண்ட ஒரு , பெண் யானை ஆகும் . திரு அரங்கனுடைய , திரு ஆபரணங்களின் , பலவித ஒளிகளாகிய கயிறுகளால் , என் சிந்தனை , கட்டுப்பட்டு , அவன் திருக்கைகள் ஆகிய விசித்திரமான கட்டுத் தறியில் , அடங்கித் ,தன் செருக்கு ஒழிந்து , இன்பப் போதையில் , மயங்கிக் கிடக்கிறது !








































































































































Working...
X