Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 06 / 29 அபீதி ஸ்தவம் ஒருமுறை , சரணம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 06 / 29 அபீதி ஸ்தவம் ஒருமுறை , சரணம

    अभीति स्तवम् 06 / 29


    அபீதி ஸ்தவம்




    ஒருமுறை , சரணம் அடைந்தாலும் , மோக்ஷம் , நிச்சயம் !










    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    स्थिते , मनसि , विग्रहे , गुणिनि , धातु , साम्ये , सति ,

    स्मरेत् - अखिल , देहिनम् , य , इह , जातुचित् , त्वाम् - अजम् ।

    तया - एव , खलु , संधया , तम् - अथ , दीर्घ , निद्रा , वशम् ,

    स्वयम् , विहित , स्मृति: , नयसि , धाम , नै:श्रेयसम् ।।


    ஸ்த்திதே , மநஸி , விக்ரஹே , குணிநி , தாது , ஸாம்யே , ஸதி ,

    ஸ்மரேத் , அகில , தேஹிநம் , ய , இஹ , ஜாதுசித் , த்வாம் , அஜம் |

    தயா - ஏவ , கலு , ஸந்தயா , தம் - அத , தீர்க்க , நித்ரா , வசம் ,

    ஸ்வயம் , விஹித , ஸ்ம்ருதி: , நயஸி , தாம , நை:ச்ரேயஸம் ||


    इह .......... இவ்வுலகில் ,

    य: ........... எவன் ,

    मनसि ....... மனம் ,

    स्थिते ........ நல்ல நிலையிலும் ;

    विग्रहे ........ சரீரம் ,

    गुणिनि ....... நல்ல குணத்துடனும் ;

    धातु .......... தாதுக்கள் ,

    साम्ये ......... உரிய நிலையிலும் ;

    सति .......... இருக்கும்போது ;

    अखिल ....... எல்லோர்க்கும் ,

    देहिनम् ....... அந்தர்யாமியானவனும் ;

    अजम् ......... பிறப்பற்றவனுமான ;

    त्वाम् .......... உன்னை ,

    जातुचित् ..... ஒருமுறை ,

    स्मरेत् ......... நினைத்து , சரணாகதி செய்கிறானோ ;

    अथ ........... பிறகு (ஆயுள் முடிவில்) ,

    दीर्घ निद्रा ..... மரணத்தில்,

    वशम् .......... அகப்பட்ட ,

    तम् ............ அவனுக்கு ,

    तया .......... அந்த ,

    संधया एव .... (சரணாகதி) நினைவாலேயே ,

    स्वयम् ......... நீயாகவே ,

    संस्मृति: ....... நல்ல நினைவை ,

    विहित ......... உண்டாக்கி ,

    नै:श्रेयसम् .... முக்திக்கு உரிய ,

    धाम ........... இடத்ததை ,

    नयसि ......... அடையச் செய்கிறாய் ,

    खलु ........... அல்லவா ?


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * அரங்க நகரப்பனே ! சேதநன் , மோக்ஷம் பெறவேண்டுமானால் , ப்ரபத்தியைச் , செய்தே ஆக வேண்டும் . இதை எப்பொழுது , செய்ய வேண்டும் ?

    * மனம் , நல்ல நிலையில் இருக்கும்போது ;
    சரீரம் , உரிய வலிமையுடன் , இருக்கும்போது ;
    கபம் , வாதம் , பித்தம் முதலியன , தத்தமக்கு , உள்ள முறையோடு ;
    இருக்கும்போது , ப்ரபத்தியை , மோக்ஷம் பெறுவதற்காக , எம்பெருமானுடைய , திருவடிகளில் , செய்ய வேண்டும் . இதையும் , ஒரு முறை தான் , செய்யலாம் .

    * எல்லாப் பொருளுக்கும் , அந்தர்யாமியாயும் , பிறப்பற்றவனும் ஆன உன்னை , இவ்வாறு , ஒருமுறை , சரணம் அடைந்த , சேதனனுக்கு , நீ செய்யும் , நன்மைகள் பல.

    * அவன் , செய்த பிரபத்தியை , நினைவில் , வைத்திருந்து ; அவனுக்கு , மரண காலம் வந்து , எல்லா இந்திரியங்களும் , ஒடுங்கிவிட்ட நிலையிலும் , அவனுக்கு , உன்னைப் பற்றிய நினைவை , நீயே , உண்டாக்குகிறாய் !

    * உன்னைப் பற்றிய நினைவுடனேயே, மரணம் அடைந்து , அவன் , மோக்ஷத்திற்குச் , செல்லுமாறு , செய்கிறாய் !





Working...
X