Announcement

Collapse
No announcement yet.

nrusimha jayanthi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nrusimha jayanthi

    28-04-18.ந்ருஸிம்மஜயந்தி:

    வைசாகசுக்ல பக்ஷ சதுர்தசி யன்றுமாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதிநக்ஷதிரத்தில் உலகை காக்கஅவதரித்தவரை நாமும் இன்றுபூஜை,ஸ்தோத்ரம்,அர்ச்சனை,வழிபாடு,நமஸ்காரம்செய்து ப்ரார்திப்போம்.

    ஒவ்வொருமாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்றுஉபவாசமிருந்து மாலையில் இவரைபூஜிப்பது மிக்க நன்மையைதரும்..முடியாவிட்டால்இன்றாவது காலை முதல் எதுவும்சாப்பிடாமல் உபவாசம் இருந்துமாலையில்

    ஶ்ரீந்ருஸிம்ம மூர்த்தியின் படமோவிக்ரஹமோ வைத்து,ஶ்ரீமத் பாகவத புத்தகத்துடன்ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர்ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்துபானகம் முதலியன நிவேத்யம்செய்து முறைப்படி பூஜிக்கவும்.

    பிறகுஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ளப்ரஹ்லாத சரித்ரம் (ஏழாவதுஸ்கந்தம் ஒன்று முதல் பத்துஅத்யாயங்கள் )பாராயணம்செய்யவும்.ப்ரஹ்லாதரால்செய்யப்பட்ட ஸ்தோத்ரம் (7ஆவதுஸ்கந்தம்9ஆவதுசர்க்கம்)பாராயணம்செய்யவும்.

    இவ்வாறுஇவரை பூஜிப்பதால் மனதிலுள்ளகாமம்,க்ரோதம்போன்ற உள் சத்ருக்களும் வெளியேதிரியும் விரோதிகளும் நம்மிடம்நண்பர்கள் ஆகிறார்கள்.மேலும்நீதி மன்றத்தில் வழக்கு வெற்றிஅடையும்..

    எவ்வளவுபடித்தாலும் படிக்கும்விஷயங்கள் நினைவில் நிற்காமல்ஞாபக மறதியுள்ளவர்கள் இவரைபூஜிப்பதால் நல்ல நினைவுஆற்றலை பெறலாம்..

    தேவர்களின்தலைவனே,ஶ்ரீந்ருஸிஹ்மா எனது வம்சத்தில்பிறந்துள்ளவரையும் இனி பிறக்கபோகிறவர்களையும் பிறவி பெருங்கடலிலிருந்து கரையேற்றிவிடு.

    பாபமென்னும்கடலில் மூழ்கியவனும்,நோய்துன்பம் என்னும் ஜலத்தால்சூழப்பட்டவனும்,பெரியதுக்கத்துடன் கூடியவனுமானஎன்னை கை கொடுத்து தூக்கிவிடுங்கள்.ஆதிஷேசன்மீது வீற்றிருப்பவரே.,

    உலகம்அனைத்திற்கும் தலைவரே.பாற்கடலில்பள்ளிக்கொண்டு சக்ரத்தைகையில் தாங்கிய ஜனார்த்தனா.ஶ்ரீந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில்தேவையான அனைத்து இன்பங்களையுமம்தந்து,இறுதியில்மோக்ஷத்தையும் தந்து அருள்புரிவாய்.

    இவ்வாறுபக்தியுடன் ப்ரார்திக்கவும்..மனதில்உள்ள அனைத்து பயங்களும் நீங்கிதைரியம்,அகத்தூய்மை,உடல்வலிமை நல்ல ஸுக வாழ்வும்ஏற்படும்..
Working...
X