Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    242.சுருதி யாயிய
    242
    திருக்குடவாயில்
    பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
    அறிய ஒணாததை நீ குருவாய் இது
    பகருமாறு செய்தாய்
    தனன தானன தானன தானன
    தனன தானன தானன தானன
    தனன தானன தானன தானன தனதான


    சுருதி யாயிய லாயியல் நீடிய
    தொகுதி யாய்வரு வாய்வெகு பாஷைகொள்
    தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு துணையாய்மேல்
    துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
    விரியு மாய்விளை வாயருள் ஞானிகள்
    சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு சுடர்வீசும்
    பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
    பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
    பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு பரமாகும்
    பரம மாயையி னேர்மையை யாவரு
    மறியொ ணாததை நீகுரு வாயிது
    பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்
    கருது மாறிரு தோள்மயில் வேலிவை
    கருதொ ணாவகை யோரர சாய்வரு
    கவுணி யோர்குல வேதிய னாயுமை கனபாரக்
    களப பூண்முலை யூறிய பாலணு
    மதலை யாய்மிகு பாடலின் மீறிய
    கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் கழுவேறக்
    குருதி யாறெழ வீதியெ லாமலர்
    நிறைய தாய்விட நீறிட வேசெய்து
    கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை குலையாவான்
    குடிபு கீரென மாமது ராபுரி
    யியலை யாரண வூரென நேர்செய்து
    குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே



    பதம் பிரித்தல்



    சுருதியாய் இயலாய் இயல் நீடிய
    தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
    தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்


    சுருதியாய் = வேதமாய் இயலாய் = இயல் தமிழாய் இயல் நீடிய = அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான தொகுதி =பகுதியாய் வெகுவாய் = பலவுமாய் வெகு பாஷை = பல மொழிகளில் கொள் =கொள்ளப்பட்ட தொடர்புமாய் =சம்பத்தப்பட்டதாய் அடியாய் = அடிப்படையாய்நடுவாய் = நடுவாய் மிகு துணையாய் = மிக்க துணையாய் மேல் = பின்னும்


    துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு
    விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
    சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்


    துறவுமாய் = அனைத்தையும் துறந்த நிலையதாய் அறமாய் = தருமமாய் நெறியாய் =நல்லொழுக்க வழியாய் மிகு விரிவுமாய் =மிகுந்த விரிவு உடையதாய் விளைவாய் =விளைவுப் பொருளாய் அருள் ஞானிகள் = அருள் நிறைந்த ஞானிகள் சுகமுமாய் = அனுபவிக்கும் சுகப் பொருளாய் முகிலாய் = மேகமாய்மழையாய் = மழையாய் எழு சுடர் வீசும் = ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும்


    பருதியாய் மதியாய் நிறை தாரகை
    பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
    பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்


    பருதியாய் = சூரியனாய் மதியாய் = சந்திரனாய்நிறை தாரகை பலவுமாய் = நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய் வெளியாய் = ஆகாயவெளியாய் ஒளியாய் = (ஸ்வயம்) சோதியாய்எழு = உண்டாகின்ற பகல் இராவு இலையாய் =பகலும் இரவும் இல்லாததாய் நிலையாய் =நிலைத்துள்ளதாய் மிகு பரமாகும் = மிக்க மேலான பொருளான


    பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
    அறிய ஒணாததை நீ குருவாய் இது
    பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்


    பரம மாயையின் = பெரிய மாயையின்நேர்மையை = உண்மைத் தத்துவத்தை யாவரும் அறிய ஒணாததை = எவரும் அறிய முடியாததை நீ குருவாய் = நீ குருவாக வந்துஇது பகருமாறு செய்தாய் = (அதை உலகுக்கு)எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய் முதல் நாள் உறு பயனோ தான் =(இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?


    கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
    கருத ஒணா வகை ஓர் அரசாய் வரு
    கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார


    கருதும் = யாவராலும் கருதிப் போற்றப்படும்ஆறிரு தோள் = பன்னிரு தோள்கள் மயில்,வேல் இவை = மயில், வேல் இவற்றை கருத ஒண் வகை = எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து) அரசாய் வரு = (சீர்காழியில்) அரசாக வந்த கவுணியோர் குல வேதியன்=கவுணிய குல ( கௌண்டிண்ய கோத்திர ) மறை யோனாய் -வேதியானாய் உமை கன பார = பார்வதியின் மிக்க பாரமான


    களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு
    மதலையாய் மிகு பாடலின் மீறிய
    கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற


    களப பூண் முலை ஊறிய = கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் சுரந்த பால் உணு மதலையாய் = பாலைப் பருகிய குழந்தையாய்மிகு பாடலின் மீறிய = மிக்க பாடல்கள் பாடுவதில் மேம்பட்ட கவிஞனாய் = கவித் திறன் பெற்றவனாய் விளையாடு இடம் =திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில்வாதிகள் = வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்)கழு ஏற = கழுவில் ஏறவும்


    குருதி ஆறு எழ வீதி எ(ல்)லாம் மலர்
    நிறைவதாய் விட நீறு இடவே செய்து
    கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்


    குருதி ஆறு எழ = அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும் வீதி எலாம் மலர்நிறைவதாய் விட = தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும் நீறு இடவே செய்து = திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து கொடிய மாறன் = கொடிய மனம் வாய்ந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் மெய் கூன் = கூன் பட்டஉடல் நிமிரா = நிமிர்ந்து விளங்கவும் முனை குலையா = (சமண்) பகையை அழித்து வான் =பொன்னுலகில்


    குடி புகீர் என மா மதுரா புரி
    இயலை ஆரண ஊர் என நேர் செய்து
    குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே


    குடி புகீர் என = உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என மா = சிறந்த மதுராபுரி =மதுரையின் இயலை = (முன்னிருந்த சமண்) நிலையை மாற்றி ஆரண ஊர் என நேர் செய்து =வேத புரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து குடசை மாநகர் = திருக்குட வாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வுற = வாழ்வு கொண்டு மேவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே

    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்
    [div5]சம்பந்தர் வரலாறு
    பால் உ(ண்)ணு மதலையாய் மிகு பாடலின் மீறிய கவிஞனாய்
    7-ம் நூற்றாண்டில் சைவம் தழைப்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவதரித்த ஸ்தலம் சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஊர். சிவபாத ஹிருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார் குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, ‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவினார் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல்
    தேவாரப் பதிகம் இதுதான்


    உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா
    நடைபெறும்[/link]



    ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில்,
    அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில்,
    அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்


    சமணர்களை கழுவேறிய வரலாறு பாடல் 187விளக்கத்தில் காணலாம்


    கருது மாறிரு தோள்மயல் வேலிவை கருதொணா வகை

    முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்


    திகுதிகென மண்ட விட்ட தீயொரு
    செழியனுடல் சென்று பற்றி யாருகர்
    திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது
    சிறியகர பங்க யத்து நீறொரு
    தினையளவு சென்று பட்ட போதினல்
    தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற - திருப்புகழ் நிகமமெனி
    ஆ நீ குருவாயிது பகரு மாறு செய்தாய்
    அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து வியக்கின்றார்
    {உலகோருக்கு எடுத்துச் சொல்லுமாறு பணித்தாயே ( குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ) என்று காஞ்சியில் இறைஞ்சினார் குடவாயிலில் இது கிடைத்தது தனக்குக் கிடைத்த பரம மாயையின் விளக்கத்தை அகர முதலென, அதல விதல முதலிய திருப்புகழ் பாடல்களில் சித்சக்தியின் வியாபகமாகசித்தரித்திருக்கிறார் – நடராஜன்}
Working...
X