Announcement

Collapse
No announcement yet.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

    அன்புள்ள சுமதி அக்கா,
    Click image for larger version

Name:	potato-chips.jpg
Views:	1
Size:	16.7 KB
ID:	34240
    உருளக்கிழங்கு வருவல் ஆத்துல பண்ணினா,
    கடைல பண்றமாதிரி மெலிசா, மொருமொருன்னு வெளிர் மஞ்சளா வரமாட்டேங்கறது.
    டேஸ்டும் அந்தளவுக்கு நன்னால்லை. ரொம்பச் சிவந்துபோய் தீசல் வாசனை வந்துடறது.
    சரி கொஞ்சம் முன்னாலேயே எடுப்போம்னா சரியா வேகமாட்டேங்கறது?
    என்ன பண்ணறது கொஞ்சம் விவரம் போடுங்கோக்கா.
    ரொம்ப சிரமப்படுத்தறேன்னு நினைக்கிறேன்.

    இந்த படத்தை போஸ்டிங்கில் எப்படிச் சேர்ப்பது என்பதை அட்மின் அங்கிள்தான்
    சொல்லிக்கொடுத்தார்.
    நன்றி

    -----

    ரொம்ப சுலபம் தான். கவலைப்படாதிங்க .உருளை கிழங்கை தோல் சீவவும். மோர் கொஞ்சம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணிரில் விட்டு அதில் சீவின உருளைக்கிழங்கை சீவிப்போடவும். பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு துணி இல் உலர்த்தவும். பிறகு பொரிக்கவும். அல்லது தோல் சீவின உருளைக்கிழங்கை எண்ணெய் மேலேயே பிடித்து சீவவும். இப்படி செய்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்லா மொரு மொறுப்பாக வெள்ளையாக இருக்கும். முயன்று பார்க்கவும். பதில் போடவும்.

    ---

    சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
    உள்ளேன் .

    So here we go ! waiting to answer !!

    ---
    Lakshmi, can I join this thread in the 'sticky' thread? Please dont mistake me :-)

    ---
    உங்க ரெகுலர் போஸ்டிங்க்ல குறுக்க நுழைய வேண்டாம்ங்கறத்துக்காகத்தான்
    தனியா சந்தேகம் கேட்டு ஒரு பதிவை ஆரம்பிச்சேன் சுமதி அக்கா.
    நீங்க என்னடான்னா என்ன கேக்கிறீங்க,
    நீங்க சைட் லீடர்ங்கறத மறந்துடறேள் போல இருக்கு.
    எங்களைப்போல சாதாரண மெம்பர்கள்தான் உங்ககிட்ட பர்மிஷண் கேக்கணும்.

    தனியாக ஒரு சந்தேஹ நிவாரணி தொடங்கி அசத்திட்டேள்.
    எனக்குத்தான் நிறைய சந்தேஹம் இருக்கு.
    ஆனா ஒரு நாளைக்கு சாயந்திர வேளையில் கொஞ்ச நேரம் மட்டும்தான்
    என்னால சைட்டுக்கு வரமுடியும், அந்த நேரத்துல கரண்ட் இருக்கணும்
    கரண்ட், இன்டர்நெட் கட்டாறத்துக்குள்ள நான் தமிழைத் தடவித் தடவி அடிக்கணும்.
    சரிக்கா, நான் ஆலு சன்னாவுக்கு எல்லாம் ரெடி பண்ணி வைச்சுட்டு வந்திருக்கேன்
    போய் பண்ணிப் பாத்துட்டு நாளைக்கு உங்களுக்கு பதில் போடறேன்.
    ரொம்ப நன்றி.
    லக்ஷ்மி.

    ---
    லக்ஷ்மி, தேங்க்ஸ். இங்கு உங்க சந்தேகங்கள் எல்லாம் கேளுங்கோ, எனக்கு ததெரிந்த வரை பதில் சொல்கிறேன். உங்களுக்கு முடியும் போது வாங்கோ , நான் எனக்கு முடிந்த போது பதில் போடுகிறேன்
    ---

    ஶ்ரீ:
    சுமதி மாமி,
    அடியேனுக்கு ஒரு சந்தேஹம்.
    கடப்பா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    அது என்ன, அதை எப்படிச் சுவையாகச் செய்வது?
    மேலும் லக்ஷ்மி மேடம் சொன்னது போல, கொஞ்சம் தளர கூட்டு மாதிரி
    தொட்டுக்கச் சொல்லுங்கோ.
    இன்னொரு விஷயம்,
    இந்த டிபன் சாம்பார் வெங்காயம் போடாம எப்படி ஹோட்டல் டேஸ்ட்
    கொண்டுவரது?
    நன்றி!
    என்.வி.எஸ்

    ---
    ஶ்ரீ:
    சுமதி மாமி,
    அடியேனுக்கு ஒரு சந்தேஹம்.
    கடப்பா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    அது என்ன, அதை எப்படிச் சுவையாகச் செய்வது?
    மேலும் லக்ஷ்மி மேடம் சொன்னது போல, கொஞ்சம் தளர கூட்டு மாதிரி
    தொட்டுக்கச் சொல்லுங்கோ.
    இன்னொரு விஷயம்,
    இந்த டிபன் சாம்பார் வெங்காயம் போடாம எப்படி ஹோட்டல் டேஸ்ட்
    கொண்டுவரது?
    நன்றி!
    என்.வி.எஸ்
    உங்களுக்கான பதில்கள் இங்கே மாமா

    1 . கடப்பா என்பது தோசை இட்லி க்கு தொட்டுக்கொள்ள செய்வது. நம் தென் தமிழ்நாட்டின் ஒரு டிஷ். ஆனால் பூண்டு, வெங்காயம் சோம்பு இல்லாமல் செய்ய முடியாது ;(

    2 . கண்டிப்பாக தளர தொட்டுக்கொள்ளும் 'டால்' போன்ற வகைகளை போடுகிறேன்

    3 . ஹோட்டல் சாம்பார் என்றாலே சின்ன வெங்காய ம சேர்ப்பாளே ! அதே சாம்பார் மைனஸ் வெங்காயம் போடுகிறேன் அது taste தேவலாமா என்று நீங்க தான் சொல்லணும். சரியா?

    ஒரு சின்ன request மாமா ........ request தான், சுமதி என்று சொல்லி கூப்பிடுவதை விட என்னை க்ருஷ்ணாம்மா என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என் பையன் பேர் கிருஷ்ணா, அவன் friends அம்மாக்கள் க்ருஷ்ணாம்மா,க்ருஷ்ணாம்மா ...என்று கூப்பிட்டு கூப்பிட்டு பழக்கமாகி விட்டது, காதுக்கு அந்த பரமாத்மா பேரை கேட்டு கேட்டு சந்தோஷமாகி விட்டது. என் சொந்த பேரே மறந்து விட்டது. நிஜம் மாமா நான் என்னை Mrs Sundar என்று அல்லது க்ருஷ்ணாம்மா என்றோ தான் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது வழக்கமாகி விட்டது அதனால் தவறாக நினைக்கவேண்டாம்

    ---

    wonderful thread; surely I expect many members will participate and provide us rich knowledge about cooking, particularly iyengar cooking.
    Thank you Krishnamma Mami, by calling you we invoke Lord Krishna and invite him to our house. As many times as we address you, sure we will have so much blessings from Lord.
    Bye

    ---
    Originally Posted by Priya Radhi
    wonderful thread; surely I expect many members will participate and provide us rich knowledge about cooking, particularly iyengar cooking.
    Thank you Krishnamma Mami, by calling you we invoke Lord Krishna and invite him to our house. As many times as we address you, sure we will have so much blessings from Lord.
    Bye
    So nice of you Radhi, you also having a very nice name

    ya, I am also waiting for some question

    ---
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

    Krishnaamma Madam,
    I have a question,
    How to prepare the "Pulicha keerai" as suitable to iyengar taste.
    Also, some are telling it is good for health, can you explain?
    Thanks in advance,
    nvs

    ---

    க்ருஷ்ணாம்மா மட்டும் போருமே மாமா மேடம் வேற எதுக்கு?
    புளிச்ச கீரையை பூண்டு இல்லாமல் சமைக்க கஷ்டமாச்சே மாமா? வேண்டுமானால் அதே சமையல் பக்குவத்தை பூண்டு இல்லாமல் இங்கு தருகிறேன், முயன்று பாருங்கள். நீங்கள் சொல்வது போல இந்த கீரை உடலுக்கு ரொம்ப நல்லது

    ---
    ஆந்திராவில் புளிச்ச கீரைக்கு தனி மதிப்பு உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டும் சிவப்பு நிறத்தில் காணப்படும். உடல் உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரைக்கு முக்கிய பங்குண்டு. இதன் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.


    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
    புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.


    வாயுத் தொல்லையை நீக்கும்
    வாயு தொடர்பான அனைத்து நோய்களையும் புளிச்ச கீரை குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறைந்துவிட்டால் புளிச்ச கீரை ருசியை உணரவைக்கும். காச நோயை குணப்படுத்தும். தாது விருத்தியையும், இந்திரியக் கட்டையையும் உண்டாக்கும்.
    வைட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.
    காசநோயை குணமாக்கும்
    புளிச்ச கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும். அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.
    சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் நாளடைவில் மலச்சிக்கலே ஏற்படாத வகையில் மறைந்துவிடும்.


    மஞ்சள் காமலைக்கு மருந்தாகும்
    புளிச்ச கீரை மஞ்சள் காமலைக்கு அருமருந்தாகும். நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும் விதைகள் பால் உணர்வு தூண்டுவி. வலி போக்க மேல் பூச்சாகிறது. கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.
    வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.
    நன்றி : இணையம்

    ---
    புளிச்சகீரை மசியல்

    தேவையானவை:

    புளிச்ச கீரை 1 கட்டு
    தக்காளி 1
    மிளகாய் வற்றல் 4 - 5
    தாளிக்க எண்ணெய்
    கடுகு, உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்


    செய்முறை :

    கீரையை நன்கு சுத்தம் செய்யவும்.
    நன்கு வேகவைக்கவும்.
    ஆறினதும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் மிளகாய் தாளிக்கவும்.
    தக்காளி போட்டு வதக்கவும்.
    வெந்த கீரையை போடவும்.
    உப்பு போடவும்.
    கொஞ்சம் கொதித்ததும் இறக்கவும். அவ்வளவுதான்

    குறிப்பு: சாதாரணமாய் அவர்கள் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பார்கள்

    ----

    ஶ்ரீ:
    அன்புள்ள க்ருஷ்ணாம்மா மாமி,
    நிறைய வித விதமா ப்ரமாதமா எல்லா தளிகை முறைகளையும் போடறேள், ரொம்ப நன்றி.
    ஒரு சின்ன சஜஷன்.
    ஒரே திரட்டில் நிறைய வெவ்வேறு தளிகை முறைகளைப் போடுகிறீர்கள்
    அதற்கு பதிலாக ஒவ்வொரு ஐடத்திற்கு ஒரு தனி திரட்டில் போட்டால்
    அது சம்பந்தமான சந்தேஹங்களையும், பின்னூட்டங்களையும் இட வசதியாக இருக்கும்.
    அதைவிட ஹிட்ஸ் அண்ட் ஸ்டாடிஸ்டிக்ஸ் பாயிண்ட் ஆப் வ்யூவில் இருந்து பார்த்தால்
    இவ்வாறு செய்வதால் மிகப்பெரிய நன்மை இருக்கிறது.
    ஒவ்வொரு ஐடத்தையும் எத்தனைபேர் பார்த்தார்கள் போன்ற கணக்கு நமக்குக் கிடைக்கும்,
    மற்றும் ஒவ்வொரு ஐடம் போடும்போதும், எடிட்டருக்கு அடுத்ததாக போஸ்ட் ஐகான்,
    அதற்கும் அடுத்ததாக டேக்ஸ் என்று ஒரு பட்டை உள்ளது, அதில் ஆங்கிலத்தில்
    அந்த ஐடம் பற்றிய டேக்கை பதிவு செய்தால், கூகிள் போன்ற சர்ச் என்ஜின்களில்
    உடனடியாக அது பதிவேற்றப்பட்டு, அது சம்பந்தமாக தேடுபவர்களை நமது சைட்டிற்கு
    விர்ரென்று அழைத்து வரும், இதனால் நமது சைட்டின் ஹிட் கௌண்ட் கூடும்.
    கீழே உதாரணத்திற்கு சில டேக்குகள்:
    Navarathri naivedhyam,sundal using coconut and dall,multi grain sundal,appam
    These tags can be put with different spellings if you create new thread for every item.
    There will be some limit for you to put number of tags, that also will be displayed like:
    You may add ... tag(s) under the tag input area.

    இந்த முறையில் போட்டுப்பார்த்துவிட்டு இரு தினங்கள் சென்று கூகுளில்
    இந்த டேக்கில் எதையாவது போட்டு தேடிப்பாருங்கள், தங்கள் போஸ்ட்
    முதல் பத்து இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும்.

    அப்டியே ஒரு சின்ன ரெகொஸ்ட்:
    காப்பியை ரீப்ளேஸ் பண்ற மாதிரி, நல்ல சுவையான வெஜிடபிள் சூப் வகைகள்,
    மற்றும் நல்ல அருமையான சுவையுடைய வெஜிடபிள் சாலட் வகைகள் பற்றி
    கொஞ்சம் போடுங்கோ.
    தாஸன்,
    என்.வி.எஸ்

    ---

    ஶ்ரீ:
    அன்புள்ள க்ருஷ்ணாம்மா மாமி,
    கீழே ஒரு படம் கொடுத்துள்ளேன், அதை கவனிக்கவும்,
    போஸ்ட் நியூ த்ரெட் கிளிக் செய்தீர்களானால் உங்களுக்கு
    டைட்டில் டைப் செய்வதற்கு ஒரு பாக்ஸ்சும்
    அதன் கீழ் பெரிதாக பாடி மேட்டரை டைப் பண்ண நிறைய பார்மேட் பட்டன்களுடன் எடிட்டரும்.
    அதற்கும் கீழாக போஸ்ட்ஐகான்ஸ் என்று நமது மனநிலையை வெளிப்படுத்தும்
    எமோட் ஐகான்ஸ் 14 இருக்கும் அவ்றில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்தால்
    அது டைட்டிலுக்கு அருகில் இடம் பெரும்,
    அதற்கு அடுத்துப் பாருங்கள்
    Tags: என்று டேக்குகளை பதிவு செய்ய ஒரு பாக்ஸ் (டைட்டில் பாக்ஸ் போலவே) உள்ளது
    அதில் உதாரணத்திற்கு சில டேக்குகளைப் பதிவு செய்துள்ளேன்.
    டேக்குகள் என்பது என்னவென்றால், நமது பதிவு - அல்லது போஸ்டிங்கில்
    உள்ள முக்கியமான வார்த்தைகள்.
    உதாரணமாக அப்பளாம் செய்வது எப்படி என்ற தலைப்பில் ஒரு பெரிய ஆர்டிகிள் எழுதுகிறீர்கள் என்று
    வைத்துக்கொண்டால், அதற்கான டேக்குகளை கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்:
    applam making procedures,methods to make appalam,tasty appalam,rice appalam,ulundu appalam,apalam

    google.com டட்டாபேஸில் மேற்படி டைட்டிலும், டேக்குகளில் சிலவும் நமது பக்கத்திற்கான
    இணைப்புடன் சேர்த்து பதிவு செய்யப்படும். தேடுபவர் மேற்கண்ட ஏதேனும் ஒரு வார்த்தை
    அல்லது நாம் எப்படி டேக் அமைத்துள்ளோமோ அதேபோன்ற வார்த்தைகளைக் கொண்டு
    தேடினால் அதேபோன்ற பதிவுகள் எத்தனை வெப்சைட்டில் உள்ளதோ, அத்தனை வெப்சைட்டும்
    பட்டியலிடப்படும். தேடுபவரின் வார்த்தைகள் எந்த ஒரு வெப்சைட்டில் மிக அதிகமாக
    மீண்டும் மீண்டும் டேக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, தேதிவாரியாக
    இடைவிடாது, அதே வார்த்தைகளைக் கொண்ட புதுப்புது பதிவுகள் இடம்பெறும் வெப்சைட்
    முதன்மை இடத்தைப் பிடிக்கும்.
    கீடே ஒரு மிகப்பெரிய பட்டியல் கொடுத்துள்ளேன், அதில்
    யார் யார் எந்தெந்த வார்த்தைகளைக் கொண்டு தேடியுள்ளார்கள், நமது வெப்சைட்
    அதில் எத்தனாவது இடத்தில் உள்ளது என்ற விபரம் அதில் கொடுக்கப்பட்டுள்ளதை கவினிக்கவும்.

    அட்மினிஸ்ட்ரேட்டருக்கு 25 டேக்குகள் பதிவு செய்ய அனுமதி உள்ளது,
    சாதாரண மெம்பர் ஐந்து டேக்குகள் வரை பதிவு செய்யலாம்,
    தங்களைப் போன்ற சூப்பர் மாடரேட்டர் 10 டேக்குகள் வரை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
    மேலும் சந்ஹேம் இருந்தால் தொடர்ந்து கேட்கவும்.

    Click image for larger version

Name:	tags-filling.jpg
Views:	1
Size:	68.5 KB
ID:	33933


    Search phrase Position
    how to wear panchakacham #4
    tamil panchangam 2005 #8
    navratra aartical in hindhi #2
    tamil ponmozhigal #20
    tamil ponmozhigal #20
    free brahmin marriage charts #15
    vadakalai versus thenkalai #5
    casting free horoscope #1
    navratri in tamil language #2
    ஜாதக பொருத்தம் is not matching ?\ #7
    navratri in tamil language #2
    best datacard chennai
    things to be given on grahapravesam #9
    vishnu puranam in tamil #8
    vishnu puranam in tamil #8
    thiruvaradhanam #9
    rahu ketu puja in srikalahasti #2
    paragraph on navratri in hindi #3
    pithru karma bangalore #3
    navratri - article in hindi #6
    niti sloka sanskrit language #8
    mantra raja pada stotram in tamil #5
    mantra raja pada stotram in tamil #5
    theetu tamil #2
    samayal kurippu #1
    vijaya varusha panchangam pdf #6
    gruhapravesam muhurtham #4
    தீட்டு #6
    தீட்டு #6
    anv parayanam, mayiladuthurai #1
    samayal kurippu #1
    horoscope casting #2
    Samaiyal kuripu
    sree brahma sthotram #7
    shraaddha hiranya shraaddha #7
    casting horoscope #3
    casting horoscope #3
    casting horoscope #3
    shraaddha hiranya shraaddha #7
    brahminsnet.com
    mahalaya amavasya tharpanam at chennai #13
    Apara karma
    Apara karma
    wedding invitation wording for friendsImage Search
    samayal kuripu #1
    ghatikachala hanuman #1
    mahalaya tharpanam video #4
    how to wear panchakacham #4
    srimathbagavatham #5
    srimathbagavatham #5
    mahalaya tarpanam #10
    amavasai tharpanam #10
    amavasai tharpanam #10
    kalyana padalgal tamil songs #1
    tamil thirumana paadalgal #2
    prasava powder #4
    prasava powder #4
    sloka niti sastra
    sloka niti sastra
    samithadhanam in sanskrit #9
    tamil panchangam 2013 #5
    tirukannamangai #2
    pancha kachcham #3
    nichayathartham #10
    iyengar mahalaya shraddha mantra 2012 #6
    www.brahminsnet.com
    hayagreevaImage Search
    gruhapravesam muhurtham in october 2012 #9
    wedding invitation message to colleaguesImage Search
    wedding invitation message to colleaguesImage Search
    brahmin maa kolam #4
    contents of wedding invitation #8
    darren sammy iyer #9
    sanskrit slokas with meaning #2
    Sri kalahasti temple - Rahu Ketu parihara Sthalam in telugu #3
    siksha valli pdf tamil #1
    srikalahasti temple - rahu ketu parihara sthalam in telugu #3
    andal pictures
    andal story with pictures
    gruhapravesam #6
    amasomavara vratham
    பாவமும் #9
    vilaku
    vilaku
    vilaku
    vilaku
    margazhi 2012-13 upanyasam #4
    www.brahminsnet.com #2
    wedding invitation wording for friends cardImage Search
    wedding invitation wording for friends cardImage Search
    om sree koti lingeshwara temple, komma sandra, bangarapet taluk, kolar, karnataka,india, #1
    www.brahminsnet.com #2
    book on apara karma #8
    mahalaya pitru tarpanam mantra #27
    mahalaya pitru tarpanam mantra #27
    mahalaya pitru tarpanam mantra #27
    mahalaya pitru tarpanam mantra #27
    shraddha rituals are called by iyengars #4
    vasu vasu swarupanam #1
    amavasya tharpanam tamil download #38
    sanskrit slokas with meaning #2
    samayal kurippu #3

    You can copy any one of the search phrase from here and paste it in google and you could find the fact.
    Some times the position may vary one or two places according to that time.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

      வெள்ளரிக்காய்
      நாம் வாங்கும் வெள்ளரிக்காய் சில சமயம் அரிந்தபிறகு சுவைத்தால் மிகவும் கசப்பாக இருக்கிறது.வாங்குவதற்கு முன்பே அது கசப்பான காய் என்று எப்படி தெரிந்து கொள்வது ?

      Comment


      • #4
        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

        வாங்கும் முன் பார்ப்பது கஷ்டம் மாமா ஆனால் வாங்கின காய்யை கசப்பில்லாமல் செய்ய முடியும். அதாவது வெள்ளரிக்கையை காம்பிலிருந்து ஒரு அரை இன்ச் வட்டமாக நறுக்கிக்கொள்ளவும், அதை ஒரு கையிலும் வெள்ளரிக்கையை மறு கையிலும் பிடித்துக்கொண்டு, ஒன்றன் மேல் ஒன்றை அழுத்தி , வட்டமாக சுழற்றி சுழற்றி நன்கு தேய்க்கவும். நல்லா நுரை வரும். ஒரு 1 -2 நிமிடங்கள் அப்படி தேய்க்கவும். பிறகு அலம்பிவிடவும். அது போல மறு முனையையும் நறுக்கி தேய்க்கவும். கசப்பு இருந்தால் அது போய்விடும், இல்லாவிட்டாலும் இப்படி செய்வதால் நஷ்டம் ஒன்றும் இல்லை நமக்கு. சரியா? நான் எப்பவும் இப்படி செய்வது வழாக்கம், இதை நான் வட இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கோ
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

          என்.வி . எஸ் மாமா , உங்க அறிவுரைப்படி, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணங்களை தனித்தனியாக போட்டு விட்டேன். மற்ற வற்றையும் பார்த்து போடுகிறேன். ஆனால் ஏன் முன்பு போல இங்கு தமிழில் அடிக்க முடியவில்லை ?
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

            ஶ்ரீ:
            நன்றி க்ருஷ்ணாம்மா
            உங்களையெல்லாம் சந்தித்தி மிக நீண்டநாட்களர்கிவிட்டன.

            அந்த தமிழில் டைப் செய்யும் வசதி, ஆன்லைனில் செய்யவேண்டியிருக்கிறது,
            அதனால் திடீரென்று இன்டெர்நெட் கட் ஆனால் டைப் செய்தது சேவ் செய்ய முடியாமல் வீணாகிவிடுகிறது.
            இதனால், அதில் ஏதோ விளம்பர சூது இருப்பதுபோல ஒரு உறுப்பினர் குறையாக எழுதியிருந்தார்,
            அதனால் அந்த ப்ளக்இன்னை நீக்கிவிட்டேன்.
            உங்கள் குமாரரிடம் கூறி தமிழாவை (ஈகலப்பை) சாப்ட்வேர் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து
            இன்ஸ்டால்செய்துகொண்டால் தாங்கள் ஆப்லைனில் டைப் செய்து வைத்துக்கொண்டு
            ஆன்லைனில் எப்போது வருகிறீர்களோ அப்போது போஸ்ட் செய்ய வசசதியாக இருக்கும்.

            கீழ்க்கண்ட பக்கத்தில் மிக விளக்கமாக அதுபற்றித் தெரிவித்துள்ளேன்.
            http://www.brahminsnet.com/forums/sh...in-Tamil/page3

            தொடர்ந்து தங்கள் வருகையையும், பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
            நன்றி
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

              நன்றி மாமா நான் தொடர்ந்து வருகிறேன்
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                கிரிஷ்ணம்மா மாமி,
                இப்பொ இந்த பகோடா பத்தி தனியா போஸ்ட் ஆரம்பிச்சுப்ருக்கேன். மெது பகோடான்னு மின்னல்லாம்
                ஒட்டல்ல போடுவா. மிட்டாய் கடையிலேயே கிடைக்கும். தொட்டா பொடிபொடியாகிவிடும். இப்ப எல்லாம் அந்த மாதிரி பகோடா கிடைக்கவில்லயே. அந்த மாதிரி இப்ப செய்யமுடியுமா? நன்னா சொல்லுங்கோ.


                இது நரசிம்ஹன் மாமா கேள்வி அதற்கான என் பதில் இதோ .

                கடை இல் கிடைகாட்டா என்ன மாமா? நாமே ஆத்துல தாராளமாய் பண்ணலாம். நான் இங்கு போடுகிறேன் அது தானா பாருங்கோ

                'மெது பகோடா'

                தேவையானவை :

                அரிசி மாவு ஒரு கப்
                கடலை மாவு அரை கப்
                இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
                நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
                சோடா உப்பு அரை ஸ்பூன்
                உப்பு
                பெருங்கயப்பொடி
                கறிவேப்பிலை
                பொரிக்க எண்ணெய்
                பச்சை மிளகாய் தேவையானால்

                செய்முறை :

                ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
                பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
                தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
                பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
                மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
                வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
                நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
                'மெது பகோடா' ரெடி.

                குறிப்பு:1. ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா

                2. இந்த பக்கோடா பண்ணும்போது, மாவு கலக்கும்போது, டால்டா அல்லது நெய் அல்லது அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய் ஏதாவது ஒன்றை விட்டு பிசைவதால் பகோடா நல்ல கரகரப்பாக வரும். இது எல்லா பக்கோடாக்களுக்கும் பொருந்தும்.

                3. மேலும் சோடா உப்பு போடுவதால் நல்லா உதிர் உதிராக வரும்.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #9
                  Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                  ஶ்ரீ:
                  க்ருஷ்ணாம்மா,
                  அவசரமாக ஒரு விண்ணப்பம்,
                  வெங்காயம் இல்லாமல் சப்பாத்திக்குத் தொட்டுக்க ஒரு குருமா (கொஞ்சம் குழம்பு மாதிரி இருக்கணும்
                  கெட்டியா இல்லாம)
                  உடனே சொல்லுங்கோ,
                  சப்பாத்தி ரெடி பண்ணிண்டிருக்கா,
                  செய்யச் சொல்றேன்.
                  ஆனா கரண்ட் போயிடுத்து திடீர்னு.
                  மொபைல்ல பாத்துக்கறேன்.
                  நன்றி,
                  என்.வி.எஸ்


                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment


                  • #10
                    சாகு

                    பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்

                    பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

                    சாகு செய்யத் தேவையானவை:

                    காலிஃப்ளவர் 1 கப்
                    உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
                    பட்டாணி 1/2 கப்
                    காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
                    பச்சை சோளம் 1/2 கப்
                    கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
                    vegetable stock 1 கப் ( முடிந்தால் )
                    உப்பு
                    எண்ணெய் கொஞ்சம்

                    அரைக்க:

                    துருவிய தேங்காய் 1 கப்
                    பட்டை 1 துண்டு
                    கிராம்பு 2
                    சீரகம் 1 டீஸ்பூன்
                    இஞ்சி 1 துண்டு
                    கசகசா 1 டீஸ்பூன்
                    பச்சைமிளகாய் 2
                    கொத்தமல்லி 1/2 கப்

                    தாளிக்க:

                    கடுகு 1 டீஸ்பூன்
                    கறிவேப்பிலை 1கொத்து
                    பெருங்காயம 1/2 டீஸ்பூன்

                    செய்முறை :

                    காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
                    அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
                    ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
                    பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
                    இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
                    எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
                    கைவிடாமல் கிளறவும்.
                    நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
                    பூரியுடன் பரிமாறவும்.

                    குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #11
                      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                      இது ஓகே வா மாமா? இன்னும் நாம தளத்தில் நிறைய போட்டிருக்கேன் பாருங்கோ " சப்பாத்தி தோசைக்கு தொட்டுக்கொள்ள என்று "
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                        Sri:
                        நன்றி க்ருஷ்ணாம்மா,
                        ஆனா அடியேன் காலிப்ளவர் இதுவரை சாப்பிட்டதில்லை,
                        என்னவோ அதை சாப்பிடலாம் என்று தோன்றுவதேயில்லை.

                        தங்களின் மற்ற குருமாக்களிலும், கொத்துக்கடலை, பாலக் கீரை,
                        பன்னீர் என உள்ளதால் அவற்றை மற்றொரு சமயம் நிதானமாகச்
                        செய்து பார்க்கலாம்.

                        தற்போதைக்கு திரு.ப்ரஹ்மண்யன் அவர்களின் பாம்பே சட்னியை
                        டிரை பண்ணலாம் என்று.

                        நன்றி,
                        என்.வி.எஸ்


                        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                        Encourage your friends to become member of this forum.
                        Best Wishes and Best Regards,
                        Dr.NVS

                        Comment


                        • #13
                          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                          Originally posted by bmbcAdmin View Post
                          Sri:
                          நன்றி க்ருஷ்ணாம்மா,
                          ஆனா அடியேன் காலிப்ளவர் இதுவரை சாப்பிட்டதில்லை,
                          என்னவோ அதை சாப்பிடலாம் என்று தோன்றுவதேயில்லை.

                          தங்களின் மற்ற குருமாக்களிலும், கொத்துக்கடலை, பாலக் கீரை,
                          பன்னீர் என உள்ளதால் அவற்றை மற்றொரு சமயம் நிதானமாகச்
                          செய்து பார்க்கலாம்.

                          தற்போதைக்கு திரு.ப்ரஹ்மண்யன் அவர்களின் பாம்பே சட்னியை
                          டிரை பண்ணலாம் என்று.

                          நன்றி,
                          என்.வி.எஸ்
                          no problem mamaa, go ahead
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #14
                            Re: சாகு

                            பயத்தம் பருப்பு மசியல் கூட செயலாம் மாமா
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #15
                              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                              Pepper vaththakuzambu.

                              Tamarind – 1 big lemon sized
                              [COLOR=#0000FF !important]Bengal
                              gram dal – 1 table spoon
                              [COLOR=#0000FF !important]Pepper[/COLOR] - 1 table spoon
                              Red chili - 1 no
                              Asafoitida - 1 tea spoon
                              Ghee – 1 table spoon
                              [COLOR=#0000FF !important]Mustard[/COLOR] seeds – 1 tea spoon
                              Jaggry - 1/2 tea spoon
                              Salt to taste
                              [/COLOR]
                              1. Soak tamarind in warm warm water for 1/2 hr.
                              2. Heat 1/2 tea spoon of ghee in a kadai and add bengal gram dal, pepper and red chili.
                              3. Once the dal turns brown remove from kadai.
                              4. Once the fried dal mixture is cool add the soaked tamarind and grind to smooth adding water.
                              5. Heat the balance ghee in kadai and add the mustard seeds.
                              6. Once the mustard [COLOR=#0000FF !important]crackles
                              add [COLOR=#0000FF !important]asafoitida[/COLOR] and also the [COLOR=#0000FF !important]ground[/COLOR] paste.
                              7. Add salt. [COLOR=#0000FF !important]jaggry[/COLOR], salt and water if necessary.
                              8. Allow it to boil for 5 – 7 mins. and remove from stove and garnish with curry [COLOR=#0000FF !important]leaves[/COLOR].
                              9. PepperVaththakuzambu ready. [COLOR=#0000FF !important]Serve[/COLOR] with hot rice and ghee.
                              [/COLOR]

                              Comment

                              Working...
                              X