Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    276.சதுரத்தரை
    276திருவேட்களம்
    (சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது)


    தனதத்தன தாத்தன தானன
    தனதத்தன தாத்தன தானன
    தனதத்தன தாத்தன தானன தனதான


    சதுரத்தரை நோக்கிய பூவொடு
    கதிரொத்திட ஆக்கிய கோளகை
    தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி
    சரணக்கழல் காட்டியெ னாணவ
    மலமற்றிட வாட்டிய ஆறிரு
    சயிலக்குயில் மீட்டிய தோளொடு முகமாறுங்
    கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
    மயிலின்புற நோக்கிய னாமென
    கருணைக்கடல் காட்டிய கோலமும் டியேனைக்
    கனகத்தினு நோக்கினி தாயடி
    யவர்முத்தமி ழாற்புக வேபர
    கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே
    சிதறத்தரை நாற்றிசை பூதர
    நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
    சிதறக்கட லார்ப்புற வேயயில் விடுவோனே
    சிவபத்தினி கூற்றினை மோதிய
    பதசத்தினி மூத்தவி நாயகி
    செகமிப்படி தோற்றிய பார்வதி யருள்பாலா
    விதுரற்கும ராக்கொடி யானையும்
    விகடத்துற வாக்கிய மாதவன்
    விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
    வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
    கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
    விறல்மெய்த்திரு வேட்கள மேவிய பெருமாளே



    பதம் பிரித்து உரை

    சதுர தரை நோக்கிய பூவொடு
    கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
    தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி


    சதுர = நான்கு இதழ் கொண்டதாய் தரை நோக்கிய = தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவொடு = (மூலாதாரக்) கமலம் (முதல்) கதிர் ஒத்திட ஆக்கிய = முச்சுடர்களால் ஆன கோளகை = மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) தழைய = குளிர்ந்து தழைய சிவ பாக்கிய = சிவப் பேற்றைத் தருவதான நாடக அநுபூதி = நாடக பெரும்பேறு ஆகிய


    சரண கழல் காட்டியே என் ஆணவ
    மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
    சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்


    சரணக் கழல் காட்டி = திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி என் ஆணவ மலம் = என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மலங்கள் அற்றிட = தொலைந்து போய் வாட்டிய = கெடுத்து ஒழித்த ஆறிரு = (உனது) பன்னிரண்டு சயிலக் குலம் ஈட்டிய = சிறந்த மலைகள் போன்ற தோளொடு = தோள்களையும் முகம் ஆறும் = ஆறு முகங்களையும்


    கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
    மயிலின் புறம் நோக்கியனாம் என
    கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை


    கதிர் சுற்று = ஒளி சுற்றிலும் பரவி உக நோக்கிய பதமும் = (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும் மயிலின் புறம் நோக்கியனாம் என = மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய = கருணைக் கடலைக் காட்டி அருளிய கோலமும் = திருக்கோலத்தையும் அடியேனை = அடியேனை
    கனகத்தினும் நோக்கி இனிதாய்
    அடியவர் முத்தமிழால் புகவே பர
    கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே


    கனகத்தினும் = பொன்னைக் காட்டிலும் இனிய நோக்கி இனிதாய் = பார்வையுடன் அடியவர் = அடியவர்கள் முத்தமிழால் புகவே = முத்தமிழ் கொண்டு பாடிப் புகவும் பர கதி பெற்றிட = (நான்) மேலான நற் கதியைப் பெறவும் நோக்கிய பார்வையும் மறவேனே = அருள் மிக்க பார்வையையும் (நான்) மறவேன்


    சிதற தரை நால் திசை பூதர(ம்)
    நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
    சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே


    தரை சிதற = பூமி அதிர நால் திசை பூதரம் = நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிய = நெரிந்து பொடிபட பறை மூர்க்கர்கள் = பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் மா முடி = பெரிய முடிகள் சிதற = சிதறுண்டு விழ கடல் ஆர்ப்புறவே = கடல் ஒலி செய்து வாய்விட அயில்
    விடுவோனே = வேலைச் செலுத்தியவனே


    சிவ பத்தினி கூற்றினை மோதிய
    பத சத்தினி மூத்த விநாயகி
    செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா


    சிவ பத்தினி = சிவனது பத்தினியும் கூற்றினை மோதிய = யமனை உதைத்த பத = பாதங்களைக் கொண்ட சத்தினி = சத்தி வாய்ந்தவளும் மூத்த = யாவர்க்கும் மூத்தவளும் விநாயகி = (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும் செகம் இப்படி தோற்றிய = அண்டங்களை இவ்வாறு படைத்தவளுமாகிய பார்வதி அருள் பாலா = உமா தேவி ஈன்ற பாலனே


    விதுரற்கும் அரா கொடி யானையும்
    விகட துறவு ஆக்கிய மாதவன்
    விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே


    விதுரற்கும் = விதுரனுக்கும் அராக் கொடியானையும் = பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும் விகட = (மனம்) வேறுபடும்படியான துறவு = பிரிவினையை ஆக்கிய = உண்டு பண்ணிய மாதவன் = கண்ணபிரான் விசையற்கு = அருச்சுனனுடைய உயர் = பெரிய தேர்ப் பரி = தேர்க் குதிரைகளை ஊர்பவன் மருகோனே = (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகோனே = மருகனே


    வெளி எண் திசை சூர் பொருது ஆடிய
    கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
    விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே


    வெளி எட்டு திசை = வெளியிலே எட்டுத் திக்குகளிலும் சூர்ப் பொருது ஆடிய = சூரனாய் நின்று போர் செய்து கொடி கைக்கொடு = கொடியைக் கையிலேந்தி கீர்த்தி உலாவிய = புகழ் விளங்க உலவிய (பெருமாளே) விறல் மெய்த்திரு= வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் மேவிய பெருமாளே = திருவேட்களம் என்னும் தலத்தில் வீfற்றிருக்கும் பெருமாளே



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்


    1 சிவபத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
    கூற்றுவனைக் காய்ந்தஅபிராமி மனதாரஅருள் கந்தவேளே
    திருப்புகழ் -வாட்டியெனை
    கூற்று மரித்திட வேயுதை பார்வதி
    யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள் திருப்புகழ் ஏட்டின்விதி
    யமனை உதித்தது தேவியின் கால்களே என்பது அருணகிரிநாதரின் கூற்று
    2 செகமிப்படி தோற்றிய பார்வதி
    படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
    துடைத்த பத்தினி மரகத சொருபியொர் - திருப்புகழ் தொடத்துளக்கி


    3 சூர்ப் பொருதாடிய கொடியைக் கொடு
    சூரனுடைய இரு பிளவில் ஒன்று சேவலாகி வர, முருக வேள் அதனைக் கொடியாக நியமித்தார்
Working...
X